Skip to main content

Posts

Showing posts from February, 2021

பிரதமர் மோடி குறித்து பெருமிதம் கொள்கிறேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பெருமிதம் கொள்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். கபில் சிபல், சசி தரூர், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி தலைமையின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஜம்முவில் நேற்று முன்தினம் 23 தலைவர்களும் ஒன்றுகூடினர். அப்போது அவர்கள் கூறும்போது, "காங்கிரஸ் பலவீனமாகிவிட்டது, கட்சியை பலப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆட்சி முடியும்போது பகட்டு அறிவிப்பால் சமூகநீதியை காக்க முடியாது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

ஆட்சி முடியும்போது பகட்டு அறிவிப்பு களால் சமூகநீதியை காக்க முடியாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரித்துள்ளார். திமுக சார்பில் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற் றார். அனைத்து மனுக்களையும் ஒரு பெட்டியில் வைத்து பூட்டி சீல் வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மாவட்டத்தில் வசிக் கும் நீச்சல் வீரர், கராத்தே வீரர்,கல்வியாளர் உள்ளிட்ட 15 சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கி மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். மேலும், கோரிக்கை மனுக்கள் அளித்தவர்களில் 10 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்கள் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார். பின்னர், நிகழ்ச்சியில் திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது திமுக புகார்

தேர்தல் நடத்தை விதிகள் அம லுக்கு வந்த பிறகும் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதுக்கிவைத்து, விநியோகித்து வருவதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியின் தேர்தல்நடத்தும் அலுவலர் டெய்சி குமாரிடம் திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் நேற்று அளித்த புகார் மனு விவரம்: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிசிடிவி கேமரா மூலம் துப்பு துலங்கியது; நகை கொள்ளை முயற்சியில் பெண்ணை கொன்றவர் கைது: தனிப்படைக்கு காவல் ஆணையர் பாராட்டு

பெண் கொலை வழக்கில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீஸார் கொலையாளிகளை கைது செய்துள்ளனர். வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய தனிப்படை போலீஸாரை காவல் ஆணையர் பாராட்டியுள்ளார். சென்னை, அமைந்தகரை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் ஜெயந்தி (45). இவர் தனது மகள் மோனிகாவுடன் (24) வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி ஜெயந்தி மற்றும் மோனிகா வீட்டில் தனியாக இருந்தபோது 25 வயது மதிக்கத்தக்க இரண்டு நபர்கள் கத்தியுடன் வீட்டில் நுழைந்து ஜெயந்தியின் தலை மற்றும் முதுகிலும், மோனிகாவின் கையிலும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி தனம்(50). இவர், தனது மகன் சக்திவேல்(22), மகள் பரமேஸ்வரி(26), பரமேஸ்வரியின் குழந்தைகள் செந்நிலா(3), தமிழ் நிலவன்(2),மற்றொரு மகள் பச்சையம்மாளின் மகள் நந்திதா(2) ஆகியோருடன் ஒரு இருசக்கர வாகனத்தில் கொளப்பாடியில் உள்ள பச்சையம்மாளின் வீட்டிலிருந்து நேற்று வேப்பூருக்கு புறப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தை சக்திவேல் ஓட்டியுள்ளார். வேப்பூர்- புதுவேட்டக்குடி சாலையில், இச்சிலிக்குட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேப்பூரிலிருந்து புதுவேட்டக்குடி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனம மீது மோதி, அருகிலிருந்த சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கல்பாக்கம் அணுமின் நிலைய சுற்றுப்புற 14 கிராமங்களில் சில பகுதிகளுக்கு பத்திரப்பதிவு செய்ய தடை: பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை

கல்பாக்கம் அணுமின் நிலைய சுற்றுவட்டார 14 கிராமப் பகுதிகளில் குறிப்பிட்ட சர்வே எண்களில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பேரிடர் காலங்களில் பொதுமக்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்படும் என்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி மற்றும் பாபா அணு ஆராயச்சி மையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. அணுமின் நிலைய பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் பாதுகாப்பு கருதி குடியிருப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக கதிரியக்க பகுதி உள்ளூர் திட்ட குழுமம் (நிலா கமிட்டி) ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலா கமிட்டியின் உறுப்பினர் செயலராக திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா செயல்படுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: வணிகர் சங்க பேரவை தலைவர் தகவல்

காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என தெரிவித்தார். தாம்பரம் அடுத்த காட்டாங்கொளத்தூர் காந்தாளி அம்மன் கோயில் தெருவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதன் தலைவர் வெள்ளையன் கலந்துகொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய வம்சாவளி மருத்துவர்கள் மாநாட்டில் முதியோர் நல மருத்துவர் நடராசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: 40 ஆண்டுகால மருத்துவ சேவைக்கு பாராட்டு

காணொலி மூலம் நடந்த இந்திய வம்சாவளி மருத்துவர்கள் மாநாட்டில், முதியோர் நல மருத்துவர் வ.செ.நடராசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. உலகளவில் உள்ள இந்திய வம்சாவளி மருத்துவர்கள் மாநாடு, காணொலி மூலம் கடந்த 27, 28-ம் தேதிகளில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் பாதுகாப்பு பணியின்போது பிற துறையினருடன் இணைந்து செயல்படுங்கள்: போலீஸாருக்கு காவல் ஆணையர் அறிவுரை

தேர்தல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியின்போது பிற துறையினருடன் காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் போலீஸாருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இரட்டை இன்ஜின் வாகனத்தால் மக்களுக்கு பயனில்லை: மத்திய, மாநில அரசுகள் மீது பிருந்தா காரத் விமர்சனம்

“இரட்டை இன்ஜின்களாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் விமர்சித்தார். பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நடப்பாண்டில் 14 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ முடிவு: விஞ்ஞானிகளுடன் பேசிய சிவன் தகவல்

நடப்பாண்டில் 14 ஆய்வுத் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார். பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புவி கண்காணிப்புக்கான ஜிஐசாட் செயற்கைக் கோள்: மார்ச் இறுதியில் ஏவுவதற்கு இஸ்ரோ திட்டம்

புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிக்காக ஜிஐசாட்-1 என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்தது. இதை ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ளஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் ஜிஎஸ்எல்வி எஃப்-10 ராக்கெட் ஏவுதல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து கரோனா ஊரடங்கால் கோளாறை சரிசெய்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் திட்டப்பணிகளை இஸ்ரோ முடுக்கிவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை: சென்னையில் அமித் ஷாவுடன் இபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு; பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கீடா?

மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக முன்னாள் தேசிய தலைவருமான அமித் ஷாவை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்றிரவு சந்தித்து பேசினர். அப்போது நடந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் 21 அல்லது 22 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என அதிமுக தரப்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போதுள்ள 15-வது சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் வரும் மே 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதை முன்னிட்டு, சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதில், வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கி 19-ம் தேதியுடன் நிறை வடைகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரியாணி விருந்துக்கு தடைபோட்ட தேர்தல் அதிகாரிகள்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக-வின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், திமுக தலைவர் ஸ்டாலினின் 68-வது பிறந்த நாளை ஒட்டி 6800 நபர்களுக்கு சமபந்தி பிரியாணி விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி கார்நேசன் திடலில் இந்த விருந்து நடத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பிரியாணி விருந்து அளிக்க தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. மாறாக, 68 கிலோ கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட மட்டும் தேர்தல் அலுவலர் கற்பகவள்ளி அனுமதி அளித்தார். சமபந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்த திமுக-வினருக்கு இது ஏமாற்றத்தை அளித்தபோதும், தேர்தல் விதிகளால் கேக் மட்டும் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் அஸ்லம் ரஹ்மான் ஷெரீப் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான செங்குட்டுவன் எம்எல்ஏ 68 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியை தொடர்ந்து, சமபந்தி விருந்துக்காக தயாரிக்கப்பட்ட பிரியாணியை வாகனங்களில் ஏற்றி கிருஷ்ணகிரி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்ற திமுக-வினர் பொ...

32 ஆண்டுகளுக்கு பிறகு தந்தை ராஜீவ் போல் சூறாவளி பிரச்சாரம்: ராகுல் சுற்றுப்பயணத்தால் தென்மாவட்ட காங்கிரஸார் உற்சாகம்

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தென்மாவட்டங்களில் தனது மூன்று நாள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை நேற்றுமுன்தினம் தூத்துக்குடியில் தொடங்கினார். சுமார் 100 கி.மீ., தொலைவுக்கு சாலையில் பயணித்த அவர், பல்வேறு இடங்களில் மக்கள் மத்தியில் உரையாற்றினார். இடையிடையே பாதுகாப்பு கெடுபிடிகளை உதறித் தள்ளிவிட்டு மக்களிடம் சென்று கைகுலுக்கி செல்ஃபி எடுத்துக்கொண்டார். சாத்தான்குளம் அருகே பன்னம்பாறை என்ற இடத்தில் சாலையோர டீக்கடைக்கு சென்று டீ குடித்தார். நாசரேத்தில் பிரசித்தி பெற்ற தூய யோவான் தேவாலயத்துக்கு சென்று வழிபட்டார். 2-ம் நாளான நேற்று திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார். பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவர் சென்ற அனைத்து இடங்களிலும் மக்கள் பெருந்திரளாக திரண்டு நின்றதை காண முடிந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜபாளையம் தொகுதியில் களமிறங்கும் நடிகை கவுதமி?

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள பாஜக, அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அக்கட்சியின் தொகுதிப் பொறுப்பாளரான நடிகை கவுதமி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாஜகவினர் கூறுகின்றனர். ராஜபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த தேர்தல்களில் அதிமுக 5 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சுயேச்சைகள் 2 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2006-ல் அதிமுக வேட்பாளர் சந்திராவும், 2011-ல் அதிமுக வேட்பாளர் கோபால்சாமியும், 2016-ல் திமுக வேட்பாளர் தங்கப்பாண்டியனும் வெற்றி பெற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திமுகவில் ‘ஐ பேக்’ வைத்ததே சட்டமா..!

திண்டிவனம் அருகே தீவனூரில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில், ‘ஐ பேக்’ டீமைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் திமுக நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை ஒன்றை மாட்டி விட்டு . திமுக நிர்வாகிகள் எங்கு அமர வேண்டும். எப்படி அமர வேண்டும் என்று வழி நடத்திக் கொண்டிருந்தனர். கருப்பு டீ ஷர்ட், வெளிர் நீல ஜீன்ஸ் அணிந்து, வலம் வந்த அந்த இளையோரிடம், ‘ஐ பேக்’கில் தங்களது பணிதான் என்ன?’ என்று பேச்சு கொடுத்தோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதிமுக, விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்?- திமுகவுடன் இன்று பேச்சு; மதிமுக சார்பில் 4 பேர் குழு அமைப்பு

ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுடன் கடந்த 25-ம் தேதி திமுக பேச்சு நடத்தியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,மனித நேய மக்கள் கட்சியுடன் நேற்றுதிமுக பேச்சு நடத்தியது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் பேச்சு நடத்தினர். தொகுதிபங்கீடு குறித்து இன்று அறிவிக்கப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று மதிமுக, விசிகவுடன் திமுக பேச்சு நடத்தவுள்ளது. மதிமுகவும், விசிகவும் தலா 10 தொகுதிகள் கேட்கும் நிலையில், இரு கட்சிகளுக்கு தலா 6 அல்லது 7 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று பேச்சு நடைபெறவுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கந்தர்வக்கோட்டை தொகுதி நமக்குத்தான்- கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தொகுதி பொறுப்பாளர் க.செல்வராஜ் ஆகியோர் பேசும்போது, “கந்தர்வக்கோட்டை தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியே வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. எனவே, திமுக கூட்டணியில் இந்தத் தொகுதியில் நாம் நிச்சயம் போட்டியிடுவோம். கண்டிப்பாக வெற்றி பெறுவோம். நம் கூட்டணியே தமிழகத்தை ஆளும்” என்றனர். தொகுதி பங்கீடு இன்னும் தொடங்காத நிலையில், கந்தர்வக்கோட்டை நமக்குத்தான் என கம்யூனிஸ்ட் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதியவர்கள், நோயாளிகளுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி; தமிழகம் முழுவதும் 1,290 இடங்களில் ஏற்பாடு: தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் நிர்ணயம்

தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 59 வயது வரைபல நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இன்று முதல் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றுக்காக முன்களப் பணியாளர்களுக்கு கோவேக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் அரசு, தனியார் என 166 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. முதல் தவணை முடிந்து 28 நாட்கள் நிறைவடைந்தவர்களுக்கு 2-ம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வெற்றியை ருசிக்க திமுகவுக்கு காங்கிரஸ் அவசியம்: கூட்டணியில் கூடுதல் இடங்களைப் பெற தீவிர முயற்சி

ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் என்ற அறிவிப்பு வெளியானதும் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு அடுத்த பலமுள்ள கட்சியாக கருதப்படும்பாமகவுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் திமுககூட்டணியில் யாருக்கு எத்தனை இடம் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் அடுத்த பிரதான கட்சியாக இடம்பெற்றுள்ள காங்கிரஸ் இந்த முறை கணிசமான இடங்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் காய்களை நகர்த்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தமிழகத்தில் பலகட்ட சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுவாக்குகளை சேகரித்து வருகிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ராகுலுக்கு திரளும் கூட்டத்தைப் பார்த்து திமுகவினரே ஆச்சர்யமடைந்துள்ளனர். கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெற முடியாமல் போனது, சமீபத்தில் நடந்த பீகார் தேர்தல்முடிவுகள் ஆகியவற்றின் பின்னணியில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற குரல் திமுகவினர் மத்தியில் எழுந்தது. ஆனால், ராகுலுக...

வாட்ஸ்அப் குரூப்பில் அவதூறு செய்திகளை நிறுத்த நடவடிக்கை: பாலியல் புகாரில் சிக்கிய ராஜேஷ் தாஸ் கடிதம்

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதானபுகார் மீது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு ராஜேஷ் தாஸ் எழுதியுள்ள கடிதத்தில், “என்னைப் பற்றி கேவலமாகவும் அவதூறாகவும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குரூப்பில் செய்திகள் பரப்பப்படுகின்றன. இச்செயல் என்னுடையவாழ்க்கையிலும், சுதந்திரத்திலும், தனிப்பட்ட உரிமையிலும் தலையிடுவது போன்று உள்ளது. தவறான செய்திகளை வெளியிட்டு,எனது பெயரை கெடுப்பவர்கள் மீது அவதூறு வழக்கு பதிய உரிமை உள்ளது. எனவே சங்க நிர்வாகிகள் என்னைப்பற்றி தவறாக பரப்பும்செய்திகளை நிறுத்த நடவடிக்கைஎடுக்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு போலி ஆவணங்கள் மூலம் இழப்பீடு பெற்று மோசடி: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மலேசியாவில் குடியேறிய சையது சமீர் உள்ளிட்ட 4 பேருக்கு, திருவாரூர் மாவட்டத்தில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இவர்கள் தங்களது சொத்துகளை பராமரிக்க பரூக் அஹமது என்பவரை நியமித்துள்ளனர். ஆனால் பரூக் அஹமது இந்தநிலங்களை போலி ஆவணம் மூலம் மூன்றாவது நபர்களுக்கு மோசடியாக விற்பனை செய்துள்ளார். அத்துடன், அரசு திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கும் தானே உரிமையாளர் என போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடிக்கும் அதிகமாக இழப்பீடு பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திமுக ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணைய அறிக்கையின்படி நடவடிக்கை: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

திமுக ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி உரியவர்களுக்கு, உரியவை வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் வடபெரும்பாக்கம் சாலையில் உள்ள வி.எஸ்.மணி நகரில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விமான நிலையம், சென்ட்ரலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர சோதனை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் 1-ம் தேதி (நாளை) குண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிக்கு நேற்று காலையில் ஒரு கடிதம் வந்தது. அதில், “சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், டிஜிபி அலுவலகம், கொச்சிவிமான நிலையம் ஆகிய இடங்களில் குண்டு வெடிக்கும். வரும் 1-ம் தேதி(நாளை) குண்டு வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது” என்றுஅதில் கூறப்பட்டிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாசிமகத்தையொட்டி கடற்கரையில் ஒன்றுகூடிய இருளர் மக்கள்: பாரம்பரிய முறையில் கன்னியம்மனை வழிபட்டு நடைபெற்ற திருமணங்கள்

மாசிமகத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்றுகூடிய இருளர் மக்கள், தங்கள் குலதெய்வமான கன்னியம்மனை பாரம்பரிய முறையில் வழிபட்டு, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ள கடற்கரைக் கோயில் மற்றும்குடைவரை சிற்பங்களின் அழகைக் கண்டு ரசிப்பதற்காக, நாள்தோறும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்கள், உள்ளூர் என ஏராளமான சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர். மேலும், மாசிமகத் திருநாளில் இருளர் இன மக்கள், கடற்கரையில் ஒன்றுகூடி 3 நாட்கள் குடில்கள் அமைத்து தங்கியிருந்து, அவர்களின் குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டுச் செல்வர். மாசிமக நாளையொட்டி நேற்று முன்தினம் கடற்கரையில் ஒன்றுகூடிய இருளர் இன மக்கள் மரங்கள் மற்றும் தார்பாய், பிளாஸ்டிக் பொருட்களால் குடில்கள் அமைத்து தங்கினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யோகாவில் சாதனை படைத்த மாணவிக்கு சர்வதேச போட்டியில் பங்கேற்க நிதி

யோகாசனத்தில் உலக சாதனைபடைத்த மாணவிக்கு இலங்கையில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்க ரூ.35 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் படிப்பவர் ரேஷ்மா. இவர் 72-வது குடியரசுதின விழாவில் 72 நிமிடங்களில் 72 ஆசனங்களை தொடர்ச்சியாக செய்து உலக சாதனை படைத்துள்ளார். இவர் இலங்கையில் நடைபெற உள்ள யோகாசன போட்டியில் பங்கேற்க உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக சென்னை மாநகராட்சியில் ரூ.3,481 கோடியில் பட்ஜெட் தாக்கல்: ரூ.546 கோடி பற்றாக்குறை

சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக சென்னை மாநகராட்சியில் நேற்று முன்தினம் ரூ.3,481 கோடியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் தமிழக பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு, சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மாநகராட்சி மன்றம் இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சியின் நிலைக்குழு (நிதி) தலைவர், பட்ஜெட்டை தாக்கல் செய்வார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம்: ஜி.கே. வாசன் தகவல்

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசுடன் இணக்கமான ஆட்சி தமிழகத்தில் இருக்க வேண்டும். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. மக்களுக்கான திட்டங்களை தடுக்கும் நோக்கத்திலேயே செயல்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசின் அடிமைத்தனத்தில் இருந்து கோயில்கள் விடுதலை பெற வேண்டும்: சத்குரு

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: கோயில் என்பது தமிழ் மக்களுக்கு ஆன்மாவைப் போன்றது. இந்த ஆன்மா அரசாங்கத்தின் கையில் அடிமையாக இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்கள் சரியான பராமரிப்பின்றி பாழடைந்து போயுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பேராசையால் இயற்கையை அழித்துவிட்டான் மனிதன்: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து

மனிதன் தன்னுடைய பேராசைகளால், சக மனிதனை மட்டுமின்றி இயற்கையையும் அழித்துவிட்டான் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறினார். வெற்றி அமைப்பின் ‘வனத்துக்குள் திருப்பூர்' 6-வது ஆண்டு நிறைவு, 7-வது ஆண்டு நர்சரி தொடக்கம் மற்றும் சூழலியல் ஆய்வறிக்கை வெளியீடு, திருப்பூரில் நேற்று நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமமுக பிரமுகர் படம், பெயருடன் அரியலூரில் 3,520 குக்கர்கள் பறிமுதல்

சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரியலூரை அடுத்துள்ள வாரணவாசி சமத்துவபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த 2 லாரிகளை மறித்து சோதனை செய்ததில், அவற்றில் ரூ.12 லட்சம் மதிப்பிலான 3,520 குக்கர்கள் இருப்பது தெரியவந்தது. அவை வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டிகளில், ஜெயலலிதா, சசிகலா, டிடிவி.தினகரன் படங்களுடன், அமமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன் படம், பெயரும், ஜெயலலிதா பிறந்தநாள் விழா எனவும் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து, 2 லாரிகளுடன் குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பேரவைத் தலைவராக நீண்டகால பணி: நிறைவு நாளில் பி.தனபால் நெகிழ்ச்சி

சட்டப்பேரவை தலைவராக மிக அதிக காலம் பணியாற்றும் வாய்ப்புபெற்றதை பெரும் பேறாக கருதுகிறேன் என்று பேரவைத் தலைவர்பி.தனபால் தெரிவித்தார். சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் பி.தனபால் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்: அமைச்சர் காமராஜ் உருக்கம்

கரோனாவில் இருந்து மீண்டுவந்த அமைச்சர் ஆர்.காமராஜ்,‘மறுபிறவி எடுத்து அவைக்கு வந்துள்ளேன்’ என்று சட்டப்பேரவையில் உருக்கமாக பேசினார். தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், நேற்று சட்டப்பேரவையின் நிறைவு நாள் கூட்டத்தில் பங்கேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நடப்பு நிதியாண்டில் கூடுதல் செலவினத்துக்காக ரூ.21,173 கோடி இறுதி துணை மதிப்பீடுகள்: சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல்

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டுக்கு ரூ.21,173 கோடி கூடுதல்செலவினங்களுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் வரும் 2021-22 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 23-ம்தேதி தாக்கல் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சட்டப்பேரவையில் பொது அறக்கட்டளை மசோதா வாபஸ்

சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு பொது அறக்கட்டளைகள் சட்ட மசோதா நேற்று பேரவையில் திரும்பப் பெறப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு பொது அறக்கட்டளைகள் சட்ட மசோதாவை சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி கொண்டுவந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எங்கள் கூட்டணியில் பல முக்கிய கட்சிகள் இணையவுள்ளன- ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தகவல்

எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணைய உள்ளன என்று ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசியலில் இன்று நிலவும் தேக்க நிலையை மாற்றவும், லஞ்சம், ஊழல் என்கிற சமூக நோயில் இருந்து மக்களைக் காக்கவும், மாற்றத்துக்கான முதன்மை அணியினைத் தொடங்கி உள்ளோம். இந்த அணியில் தற்போது இந்திய ஜனநாயகக் கட்சியும் (ஐஜேகே), அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் பல முக்கிய கட்சிகளும் இந்த அணியில் இடம் பெற உள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவையில் 3 தொகுதிகளுக்கு பாஜக குறி

பாஜகவை பொறுத்தவரையில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு உள்ள வலிமையான வாக்கு வங்கியுடன், கோவையில் தங்களுக்கு சொந்த செல்வாக்கும் இருப்பதை கூடுதல் பலமாக கருதுகின்றனர். 2014 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாகராஜன் 4,31,717 வாக்குகளைப் பெற்று வென்றார். அடுத்த இடத்தில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் 3,89,701 வாக்குகளை பெற்று 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார். திமுக 2,17,083 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விழுப்புரத்துக்கு இன்று அமித்ஷா வருகை- பா.ஜ.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

பாரதிய ஜனதா கட்சியின் விழுப்புரம் மாவட்ட பிரிவின் சார்பில் இன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு, சிறப்புரையாற்றுகிறார். முன்னதாக அவர் இன்று காலை காரைக்காலில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, விழுப்புரம் வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிமுகவில் 4 நாட்களில் 3700-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் விநியோகம்

தமிழக சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் மார்ச் 12-ம் தேதி தொடங்கி 19-ம் தேதியுடன் முடிவடைகிறது. முன்னதாக, தேர்தல் அறிவிப்பை எதிர்நோக்கி, அதிமுகவில் விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்.24-ம் தேதி ஜெயலலிதா பிறந்த தினத்தன்று முதல்வர், துணை முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. முதல் நாள் முகூர்த்த நாள் என்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனுக்களை பெற்று விண்ணப்பித்தனர். ஒவ்வொரு தொகுதியிலும், முதல்வர், துணை முதல்வர் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தும் பல மனுக்கள் வழங்கப்பட்டன. எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி, போடிநாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடவும் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் விநியோகிக்கப்பட்ட நிலையில், 4-ம் நாளான நேற்று வரை 3 ஆயிரத்து700-க்கும் அதிகமான மனுக்கள் விநியோகிக்கப்பட்டு பெரும்பான்மை பூர்த்தி செய்து திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது தேர்தல் தே...

2-வது முறையாக திமுக மாநில மாநாடு தள்ளிவைப்பு: அதிருப்தியடைந்த கட்சியினரை உற்சாகப்படுத்த கே.என்.நேரு புது ‘ஐடியா’

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் 2-வது முறையாக திமுக மாநில மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் அக்கட்சித் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்களை உற்சாகப்படுத்த திருச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த கே.என்.நேரு முடிவு செய்துள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுகவினரை தயார்படுத்தும் வகையில் திமுகவுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் நகரம் என வர்ணிக்கப்படும் திருச்சியில் அக்கட்சியின் 11-வது மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே 300 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்