Skip to main content

Posts

Showing posts from May, 2021

கிருஷ்ணகிரி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் பொகலூர் அருகே உள்ள துரிஞ்சி தலைப்பட்டியைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகன் ரமேஷ்(35). இவர், கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ரமேஷ், குடியாத்தம் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அவரது மனைவி தீபா(30), மகன் நித்தீஷ்(1), உறவினர்கள் துரிஞ்சி தலைப்பட்டி அஞ்சலி(34), வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கீழ்ஆலத்தூர் அருகேயுள்ள கே.மோட்டூரை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி சரளா(35), அவரது குழந்தைகள் சாரிகா(9), ஓவியா(5) உள்ளிட்ட 7 பேருடன், காரில் ஊருக்குச் சென்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அனைவரும் நேற்று மீண்டும் காரில் பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சையால் 40 பேர் பாதிப்பு; 2 பேர் உயிரிழப்பு: கடலூர் மாவட்டத்தில் 9 பேர் பாதிப்பு

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 40 பேர் புதுச்சேரியில் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் ஏற்கெனவே ஒருவர், ஜிப்மரில் தற்போது பெண் ஒருவர் என 2 பேர் இதுவரை புதுச்சேரியில் இறந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்டா மாவட்டங்களில் முடிவடையாத தூர்வாரும் பணிகள்: மேட்டூர் அணை திறப்பு தள்ளிப் போகுமா?

காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு தள்ளிப்போகும் வாய்ப்பு இருப்பதால் விவசாயிகள் குழப்பத்தில் உள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். அப்போது, சுமார் 1.35 லட்சம் ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏகத்துவ ஜமாத் நிர்வாகிக்கு பாஜக தேசிய பதவி

பாஜக சிறுபான்மையினர் அணிதேசிய செயலாளராக வேலூர்சையது இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக சிறுபான்மையினர் அணிக்கு தேசிய அளவில் 6 துணைத் தலைவர்கள், 3 பொதுச்செயலாளர்கள், 7 செயலாளர்கள், பொருளாளர் என்று நிர்வாகிகளை சிறுபான்மை அணியின் தேசியத் தலைவர் ஜமால் சித்திக்நேற்று அறிவித்தார். அதில், தேசிய செயலாளராக வேலூரை சேர்ந்த சையது இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா தொற்று உயிரிழப்புகளை அரசு மறைப்பது இல்லை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டவட்டம்

கரோனா தொற்றால் நிகழும்உயிரிழப்புகளை மறைப்பது இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 504 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்துவைத்தார். இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, 11 கிலோலிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்சிஜன் சேமிப்புக் கலன்களையும் ஆய்வு செய்தார். சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி உடனிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாபா ராம்தேவை கண்டித்து இன்று கருப்பு தினம் அனுசரிக்க டாக்டர்கள் முடிவு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று கருத்து தெரிவித்தார். இதற்கு டாக்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, ராம்தேவுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கண்டனம் தெரிவித்த பின்னர் ராம்தேவ் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பினார். எனினும் உத்தராகண்ட் மாநில இந்திய மருத்துவக் கவுன்சில் (ஐஎம்ஏ), ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில் பாபா ராம்தேவை கண்டித்து ஜூன் 1-ம் தேதி (இன்று) கருப்பு தினம் அனுசரிக்க டாக்டர் சங்க கூட்டமைப்பு (எப்ஓஆர்டிஏ) முடிவு செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆயுர்வேத கரோனா மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி

ஆந்திராவின் நெல்லூர் கிருஷ்ணப் பட்டினம் அருகே முத்துக்கூறு பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தைய்யா, பொதுமக்களுக்கு 3 வகையான கரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கி வந்தார். கண்களில் விடும் சொட்டு மருந்தையும் வழங்கி வந்தார். நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருந்துக் காக கிருஷ்ணப்பட்டினத்தில் குவிந்தனர். இதுகுறித்து அறிந்த முதல்வர் ஜெகன் மோகன், கரோனா பரவும் அபாயம் இருப்பதை உணர்ந்து, மருந்து விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தரபிரதேசத்தில் கரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்

உத்தரபிரதேசத்தில் நேற்று இந்தி மொழி பத்திரிகையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நாளை ஒட்டி உ.பி.யின் அனைத்து இந்திபத்திரிகையாளர்களுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்துதெரிவித்தார். அப்போது, கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங் கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். ஆதித்யநாத் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தி மொழி பத்திரிகையாளர்கள் நாட்டை முன்னேற்றுவதில் பெரும் பங்கு வகித்துள்ளனர். இவர்களு்க்கு ஆதரவளிப்பது எனது கடமை. தற்போதைய சூழலில் உயிரை பணயம் வைத்து இந்தி மொழிபத்திரிகையாளர்கள் கரோனா தொற்று தொடர்பான செய்திகளை துல்லியமாக அளிப்பது உதவியாக உள்ளது’ எனக் குறிப் பிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேதனையில் இருப்பதாக சோனியாவுக்கு கடிதம் அனுப்பிய ரமேஷ் சென்னிதலா: பதவி வழங்காததால் அதிருப்தி; கேரள காங்கிரஸில் அடுத்த குழப்பம்

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இதனால் கேரளத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்னும் நாற்பதாண்டு கால வரலாறும் மாறியிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கடிதம் எழுதியுள்ளார். கேரள காங்கிரஸில் முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் ஓர் அணியும், ரமேஷ் சென்னிதலா தலைமை யில் ஓர் அணியும் செயல்படுகின்றன. கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் தலைமையிலான எல்.டி.எப் கூட்டணி 99 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான யூ.டி.எப் கூட்டணி 41 இடங்களிலும் வென்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜூலை மாத இறுதிக்குள் கோவாக்சின் உற்பத்தி 12 கோடியை எட்டும்: டாக்டர் என்.கே. அரோரா தகவல்

கரோனா தடுப்பூசி மருந்து களில் ஒன்றான கோவாக்சின் உற்பத்தி ஜூலை மாத இறுதிக்குள் 25 கோடியை எட்டும் என்றுதேசிய கோவிட் தடுப்பூசி உற்பத்தி குழுவின் ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என்.கே. அரோரா தெரிவித்தார். நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனாதடுப்பூசி போடும் பணிகள்தொடங்கியதால் தடுப்பூசிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீண்ட நேர ஆன்லைன் வகுப்பு: பிரதமரிடம் காஷ்மீர் சிறுமி புகார்

நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுவதாகவும் குழந்தைகளுக்கு அதிக வேலை கொடுப்பதாகவும் காஷ்மீரைச் சேர்ந்த 6 வயது சிறுமி பிரதமர் மோடியிடம் புகார் கூறும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கரோனா தொற்று காரணமாகமக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில், பள்ளிப் பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகள் நீண்டநேரம் நடப்பதால் குழந்தைகளுக்கு அதிகவேலை இருப்பதாக காஷ்மீரைச் சேர்ந்த 6 வயது சிறுமி பிரதமர்மோடியிடம் புகார் தெரிவித்துள் ளார். 45 நிமிடங்கள் ஓடும் அந்தக்காட்சியை ஒளரங்கசீப் நக் ஷ் பண்டி என்ற பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமரிடம் புகார் கூறிசிறுமி பேசும் காட்சி இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சிறுமி கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்: இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனம் சாதனை

கரோனா வைரஸ் தொற்று உலகை பெருமளவில் பாதித்துள்ளது. ஆனாலும் பல்வேறுஉயிர்க்கொல்லி நோய்களால் பலர் உயிரிழப்பது தொடர்கதையாகவே உள்ளது. அதிலும் வலியும், வேதனையை அளிக்கும் நோய்களில் பிரதானமானது புற்றுநோயாகும். புற்றுநோய்க்கு உலகம் முழுவதும் 2020-ல் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு கோடி. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் உயிரிழப்பு 57 லட்சம். உலகம் முழுவதும் மருத்துவத் துறை மேம்பட்ட போதிலும் சிறிய வயதில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக புற்றுநோய்க்கு பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க அரசாணை வெளியீடு

கரோனா பாதிப்பால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் வாரிசுகளுக்கான இழப்பீட்டை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்வர் வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கான தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு: சுகாதாரத் துறை செயலர் தகவல்

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், கரோனா தொற்று தடுப்புப் பணிகள் மற்றும் தடுப்பூசிகள் இருப்பு குறித்து அதிகாரிகளுடன் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்தியதொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு மே மாதம் 20.40 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், இதுவரை 18.67 லட்சம்தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளன. மீதமுள்ள 1.80 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரணம் வாங்க இயலாதவர்கள் ஜூன் மாதம் பெற்றுக் கொள்ளலாம்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் கரோனா உதவித்தொகையை இதுவரை பெற இயலாதவர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎஃப் கணக்கில் இருந்து மீண்டும் முன்பணம் எடுக்க அனுமதி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பிஎஃப்) இருந்து முன்பணம் எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய தொழி லாளர், வேலைவாய்ப்புத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பிரச்சினையை பிரதமர் மோடி சிறப்பாக கையாண்டதாக 63% பேர் ஆதரவு

கரோனா பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக கையாண்டதாக 63 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி 2-வது முறையாக பதவி யேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந் துள்ளது. இதுதொடர்பாக ஏபிபி தொலைக்காட்சி, சி-வோட்டர் இணைந்து மக்களிடையே கருத் துக் கணிப்பு நடத்தின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மருத்துவமனைகளுக்கு ரூ. 2 கோடி; கரோனா சிகிச்சை பெற ரூ.5 லட்சம் வரை கடன்: பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு

கரோனா மருத்துவ சிகிச்சைக்கு தனி நபர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப் படும் என பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. மாத சம்பளம் பெறுவோர் மற்றும் இதர பிரிவினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரும் இத்தகைய கடன் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் எவ்வித பிணையும் இல்லாமல் இந்த கடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பு காரண மாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ள தாகவும், நாடு முழுவதும் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடிக்கு பணப்புழக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழக நிதி நிலைமை குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை: கரோனா பணிக்கான செலவுகள், புதிய திட்டங்கள் குறித்து ஆய்வு

தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பாக அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் மற்றும் அதிகாரி களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். கரோனா தடுப்புப் பணிக்கான செலவுகளை சமாளிப்பது, புதிய திட்டங்களை செயல் படுத்துவது குறித்து இந்தக் கூட்டத் தில் ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்தது. பொதுத் தேர்தல் நடக்க விருந்ததால் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை கடந்த அதிமுக அரசு தாக்கல் செய்யவில்லை. கடந்த பிப்ரவரி 23-ம் தேதி அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அவர் அளித்த அறிக்கையின்படி, தமிழகத்தின் மொத்த வரி வருவாய் ரூ.1 லட்சத்து 32,530 கோடியாகவும், செலவு ரூ.2 லட்சத்து 46,694 கோடியாகவும், வருவாய் பற்றாக்குறை ரூ.65,994 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டது. மேலும், அரசின் கடன் ரூ.5.70 லட்சமாக இருக்கும் என வும் குறிப்பிடப்பட்டது. கடன் அதிகரித் துள்ளது குறித்து பல்வேறு தரப் பினரும் எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தனர். from இந்த...

தமிழகத்தில் 4 நாள் கனமழைக்கு வாய்ப்பு: 14 நகரங்களில் 100 டிகிரி வெயில் பதிவு

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பராமரிப்பு பணியின்போது ஏற்படும் மின்தடைக்கான நேரம் குறைப்பு: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

பராமரிப்பு பணியின்போது ஏற்படும் மின்தடை நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணைமின் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு மின் விநியோகம் செய்வதற்காக பீடர் எனப்படும் மின்வழித் தடங்கள், மின்மாற்றிகள், மின்விநியோகப் பெட்டிகள், மின்கம்பம், கேபிள் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருவள்ளூர் மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு: மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.வருண்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.அரவிந்தனை கடந்த மே 10-ம் தேதி எஸ்பிசிஐடி எஸ்பியாக தமிழக அரசு பணியிட மாற்றம் செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவால் பள்ளியை மறந்த மாணவர்களுக்கு வீடுகளின் சுவர்கள் மூலம் கல்வி போதிக்கும் இளைஞர்கள்

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்படாமல் உள்ளன. இதனால், இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசுப் பள்ளி மாணவர்களில் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டும் இணையம், கல்வி தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்-அப் மூலம் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பள்ளியை மறந்துவிட்டனர் என்று பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவளம் ஊராட்சியில் கரோனா தடுப்பூசி முகாம்: மூத்த குடிமக்கள் தொடங்கிவைத்தனர்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம் கோவளம் ஊராட்சியில் ‘எஸ்டீஎஸ் அறக்கட்டளை மற்றும் ஸ்கோப் நண்பர்கள் குழு’ சார்பில் அவசரகால சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தில் ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை போனில் தொடர்புகொண்டு பெறும் வகையில் 9042117888, 9710923888, 7305265488 ஆகிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வெளியே செல்வதைத் தடுப்பதற்காக இச்சேவையை தொடங்கியிருப்பதாக, அறக்கட்டளையின் நிறுவனர் சுந்தரம் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருணாநிதி பிறந்த நாளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் எம்.தமிமுன் அன்சாரி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாள், எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் இன்றுமுதல் புறநகர் மின்சார ரயில்கள் அதிகரிப்பு: அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. ரயில், பேருந்து, ஆட்டோ சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. அதன்படி, சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் கரோனா படிப்படியாக குறைகிறது: சுகாதாரத் துறை செயலர் தகவல்

தமிழகத்தில் கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்று குறைந்து வரும் நேரத்தில்தான் மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், தனியார் பங்களிப்பு மற்றும் மருத்துவமனை உதவியுடன், 130 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை, சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், நேற்று ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் குறித்த விவரமும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ. ஜான் லூயிஸ், குரோம்பேட்டை மருத்துவமனை மருத்துவ அலுவலர் பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மயிலாடுதுறை அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 பேர் உயிரிழப்பு

மயிலாடுதுறையை அடுத்த சேந்தங்குடியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் பிரபு(33), அச்சகத் தொழிலாளி. அம்மாசி மகன் செல்வம்(36), சுமை தூக்கும் தொழிலாளி. இவர்கள் இருவர் மற்றும் வீராசாமி(52), சரத்குமார்(28), செந்தில்(40), மாற்றுத்திறனாளி சரண்ராஜ்(37) ஆகியோரிடம், புதுச்சேரி சாராயம் என்று கூறி, ஒருவர் கள்ளச் சாராயத்தை நேற்று முன்தினம் விற்பனை செய்துள்ளார். அந்தச் சாராயத்தை 6 பேரும் குடித்துவிட்டு, வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில், பிரபுவின் கண்பார்வை பாதிக்கப்பட்டதால், உடனடியாக அவரது குடும்பத்தினர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரபுவை சேர்த்தனர். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கண் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. ஆனால், சற்று நேரத்தில் பிரபு உயிரிழந்தார். நள்ளிரவில் வந்த பரிசோதனை முடிவில், அவருக்கு கரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கபிஸ்தலத்தில் கரோனாவால் உயிரிழந்ததை மறைத்து முதியவர் சடலத்தை வீட்டில் வைத்து இறுதிச் சடங்கு: மனைவி, மகன் மீது வழக்கு பதிவு

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் கரோனாவால் முதியவர் உயிரிழந்ததை மறைத்து, சடலத்தை வீட்டில் வைத்து இறுதிச் சடங்கு நடத்திய மனைவி, மகன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் வடக்கு முதலியார் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி(69). இவர், கோ-ஆப்டெக்ஸில் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பிச்சையம்மாள்(61). இவர்களின் மகன் முருகானந்தம் ஊட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வங்கிகளில் இருந்து அழைப்பதாக கூறி மூத்த குடிமக்களை குறிவைத்து நடைபெறும் பண மோசடி: கோவையில் ஒரே குடியிருப்பில் பலருக்கும் அழைப்பு வந்ததால் அதிர்ச்சி

வங்கிகளில் இருந்து அழைப்பதாக கூறி கோவையில் மூத்த குடிமக்களை குறிவைத்து நடைபெறும் பண மோசடி விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சென்னையில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலரிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.53 லட்சம் மோசடியாக எடுக்க முயற்ச்ி நடந்தது. ஆனால் அந்த பணத்தை சேமிப்பு கணக்குக்கு மாற்றி பின்னர்தான் பணத்தை எடுக்க முடியும் என்ற நிலை இருந்ததால், சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கையால் பணம் மீட்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தடுப்பூசி முகாம்களில் கட்சியினர் தலையீட்டை தடுக்க வேண்டும்: முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட லக்காபுரத்தில் கடந்த 27-ம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடப்பதாக முன்களப்பணியாளர்களுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, அவர்கள் அங்கு சென்றுள்ளனர். ஆனால்,உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும், பக்கவாட்டு வழியாக திமுக பிரமுகர்களின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்ட சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாகவும், முன்களப் பணியாளர்கள் காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டு ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சைவ பால் தயாரிக்க ‘அமுல்’ நிறுவனத்துக்கு கடிதம்: பால் உற்பத்தியில் கை வைக்க முயற்சிக்கிறது ‘பீட்டா’

‘‘மாட்டுப் பாலுக்குப் பதில் சோயா பால் உட்பட சைவ பால் உற்பத்திக்கு மாற வேண்டும்’’ என்று இந்தியாவின் மிகப்பெரிய அமுல் நிறுவனத்துக்கு ‘பீட்டா’ அமைப்பு கடிதம் எழுதி உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பி உள்ளது. விலங்குகள் நல உரிமை அமைப்பான ‘பீட்டா’ அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள நார்போல்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இறைச்சிக்காகவும், தோல் ஆடைகளுக்காகவும், ஆய்வுக் கூடங்களில் சோதனை செய்வதற்கும், சர்க்கஸ் போன்ற பொழுது போக்குகளுக்காகவும் விலங்குகள் பயன்படுத்துவதை எதிர்த்து வருகிறது. விலங்குகளை சித்ரவதை செய்ய கூடாது என்று பிரச்சாரம் செய்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 7-ம் ஆண்டு நிறைவு: ஒரு லட்சம் கிராமங்களில் பாஜக தொண்டர்கள் கரோனா சேவை

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, மே 26-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். அதன் பிறகு 2019-ல் நடைபெற்ற தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றதை யடுத்து மோடி மே 30-ம் தேதி 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். மோடி பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறை வடைந்தன. இதையொட்டி பாஜகசார்பில் நேற்று ‘சேவை தினம்’ கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாக உள்ள நிலையில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உத்தர பிரதேசத்தின் பாரபங்கியை அடுத்து முசாபர் நகரிலும் மசூதி இடிக்கப்பட்டது

பாஜக ஆளும் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த மார்ச்சில் ஒரு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டார். அதில், 2011-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு அரசு மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்படும் அனைத்து மத புனிதத் தலங்கள் அகற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து மாநிலத்தின் 75 மாவட்ட ஆட்சியர் மற்றும் மண்டல ஆணையர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதிலும் துவங்கிய நடவடிக்கையில் இரண்டு மசூதி கள் இடிக்கப்பட்டுள்ளன. இதில், ஒன்று பாரபங்கியில் ராம் ஸனேஹி காட் தாலுக்காவின் 100 வருடம் பழமையானதாகக் கருதப்படும் மசூதி. கடந்த 17-ம் தேதி இந்த மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து முசாபர் நகரின் கத்தோலி தாலுக்காவிலும் ஒரு மசூதி இடிக்கப்பட்டது. இதன் புதானா சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் உ.பி. முஸ்லிம் களை அதிர்ச்சியடைய வைத்துள் ளது. இந்த நிலம் சன்னி முஸ்லிம் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாகக் கருதப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online:...

முஸ்லிம், கிறிஸ்தவருக்கு கல்வி உதவித் தொகை: கேரள அரசுக்கு நீதிமன்றம் புது உத்தரவு

கேரளாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சிறுபான் மையினருக்கான கல்வி உதவித் தொகை முறையே 80:20 என்ற அளவில் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கேரள அரசு ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், கல்வி உதவித் தொகை சதவீதம் மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி கேரளாவில் 26.56 சதவீதம் முஸ்லிம்களும் 18.38 சதவீதம் கிறிஸ்துவர்களும் இதர சிறுபான்மையினர் 0.33 சதவீதமும் உள்ளனர். சிறுபான்மையினர் என்ற பிரிவை தனியாக எடுத்துக் கொண்டால் அதில் 58.67 சதவீதம் முஸ்லிம்களும் 40.06 சதவீதம் கிறிஸ்துவர்களும் உள்ளனர். எனவே, அதன் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

1,000 டாக்டர்களை ஆயுர்வேதத்துக்கு மாற்றுவதற்கு பாபா ராம்தேவ் இலக்கு

அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று சமீபத்தில் பாபா ராம்தேவ் கூறியதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. பின்னர், தனது கருத்துக்கு ராம்தேவ் வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் ஹரித்வாரில் நடந்த யோகா முகாமில் பாபா ராம்தேவ் பேசியதாவது: அலோபதி மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தி வருவதால் எம்பிபிஎஸ், எம்.டி. படித்த டாக்டர்கள் யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் பக்கம் திரும்பி நமது முகாமில் கலந்து கொண்டுள்ளனர். சில அலோபதி டாக்டர்கள் தங்கள் தொழிலில் இருந்து விலகி நமது பாதையை பின்பற்ற முடிவு செய்துள்ளனர். அடுத்த ஒரு ஆண்டுக்குள் 1,000 அலோபதி மருத்துவர்களை ஆயுர்வேத மருத்துவர்களாக மாற்ற முடிவு செய்துள்ளேன். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொடரும் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள்; குழந்தை வளர்ப்பு முறையில் மாற்றம் தேவை: உளவியல் நிபுணர் சங்கீதா வலியுறுத்தல்

கரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு கடந்தஓரண்டாகவே கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகள் வழியே பாலியல் தொந்தரவு அளிப்பதாக மாணவிகள் பலர் வலைதளங்களில் புகார்களை பதிவு செய்துவருகின்றனர். இது தமிழகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இணைய வகுப்புகளை ஒழுங்குப்படுத்தி கண்காணிக்க தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அதேநேரம், இந்த சிக்கலில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உள்ளது என்ற கருத்தும் வலியுறுத்தப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாளை உலக பால் தினம்: பால்வளத் துறை மேம்பாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு- நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் தகவல்

தமிழ்நாடு, புதுச்சேரியின் பால்வளத் துறை மேம்பாட்டுக்கு நபார்டுவங்கி தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து நபார்டு வங்கியின்மண்டல தலைமைப் பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மே மாத மின் கட்டணத்தை கணக்கிடுவது எப்படி?- இணையதளத்தில் மின் வாரியம் விளக்கம்

கரோனா ஊரடங்கால் இம்மாத மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற விளக்கம், மின் வாரியஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக,மின் வாரிய ஊழியர்கள், மே மாதத்துக்கான மின் கணக்கீடு செய்ய வீடுகளுக்கு நேரில் செல்வதை தவிர்க்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு; வாகனங்களில் இன்றுமுதல் மளிகை பொருட்கள் விற்பனை: ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி

தமிழகத்தில் தளர்வுகற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறி, பழங்கள் போல மளிகை பொருட்களும் இன்றுமுதல் வாகனங்களில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா வைரஸ் தினசரி பாதிப்பு 35 ஆயிரத்தை தாண்டியதைத் தொடர்ந்து, கடந்த மே 10-ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், மே 15-ம் தேதி தளர்வுகள் குறைக்கப்பட்டன. தொடர்ந்து மே 24-ம் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.இந்த ஊரடங்குக்கான காலம் இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்