Skip to main content

Posts

Showing posts from August, 2021

மானாவாரி பயிர்களை காக்கும் பாட்டில்கள்: விவசாயிகளின் வேதனையும், நெகிழ்ச்சியும்

தருமபுரி மாவட்ட மானாவாரி நில பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து காலி மதுபாட்டில்கள் தான் காப்பாற்றுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தின் 7 வட்டங் களிலும் கணிசமான அளவில் வனப்பகுதி உள்ளது. வனத்தை ஒட்டி விளைநிலங்களும் உள்ளன. மாவட்டம் முழுக்க உள்ள வனத்தில் காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்கள் வாழ்கின்றன. வனத்தை ஒட்டிய விளைநிலங்களில் நிலக்கடலை, சோளம், கேழ்வரகு, சாமை, திணை, பாசிப்பயிறு, உளுந்து, மரவள்ளி போன்ற பயிர்களை சாகுபடி செய்தால் அறுவடை செய்து முடிக்கும் வரை வயலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தவறினால், விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள், குறிப்பாக இரவு நேரங்களில் நுழைந்து பயிர்களை பெருமளவில் சேதப்படுத்து கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வனப்பகுதிகளில் 5 ஆண்டுகளில் 32 யானைகள் உயிரிழப்பு: பாதுகாப்பை பலப்படுத்துமா உடுமலை வனத்துறை?

உடுமலை வனப்பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 32 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், யானைகள் பாதுகாப்பில் வனத்துறை அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சூழல் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலையில் கரட்டுர் சடையன்பாறை வனப்பகுதியில் உயிரிழந்து கிடந்த காட்டு யானையின் சடலத்தில் இருந்த தந்தத்தை மர்மநபர்கள் வெட்டி, கடத்திச் சென்றுள்ளனர். பிரேத பரிசோதனையின்போது, யானையின் உடலில் இருந்து பால்ரஸ் குண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நெய்வேலி அருகே சென்னை- கும்பகோணம் 4 வழிச்சாலையில் ஊராட்சிக்கு சொந்தமான பொதுப்பாதையில் தடுப்புச்சுவர் எழுப்பி அரசு நிலம் ஆக்கிரமிப்பு?

நெய்வேலி அருகே தனியார் மனைப்பிரிவுகளுக்கு செல்லும் மருங்கூர் ஊராட்சிக்கு சொந்தமான தார் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர் எழுப்பி, அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள வீட்டு மனை உரிமையாளர்கள் 115 பேர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா மருங்கூர் கிராமத்தில் கும்பகோணம் - சென்னை 4 வழிச்சாலையில் டேனக்ஸ் பவர் என்ற தனியார் நிறுவனம் ‘எவர்கிரீன் நகர்’ என்ற பெயரில் வீட்டுமனைகளை விற்பனை செய்து வருகிறது. இதற்காக நகர் ஊரமைப்புத் துறையின் அங்கீகாரம் மற்றும் பொதுப்பாதை, பூங்கா உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான இடத்தை ஊராட்சி மன்றத்துக்கு தானமாக வழங்கி, சுமார் 115 வீட்டுமனைகளை இந்நிறுவனம் விற்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

65 ஆண்டுகளாக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் எல்ஐசி

எல்ஐசி எனப்படும் இந்திய ஆயுள்காப்பீடு நிறுவனம் 14 நாடுகளில் கால்பதித்த முதன்மையான நிறுவனமாகும் இது இன்று (செப்.1) தனது66-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1956-ம் ஆண்டு ரூ.5 கோடிமுதலீட்டுடன் தொடங்கப்பட்ட எல்ஐசி நிறுவனம் தற்போது ரூ.38,04,610 கோடி சொத்தும், ரூ.34,3,686 ஆயுள் நிதியையும்கொண்டுள்ளது. பிராண்ட் ஃபைனான்ஸ் இன்சூரன்ஸ் 100 என்ற அமைப்பு வெளியிட்ட கணக்கெடுப்பின்படி உலக அள வில் எல்ஐசி 3-வது வலுவானநிறுவனமாகவும், 10-வது மிகவும் மதிப்பு வாய்ந்த பிராண்டாகவும் விளங்குகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் தப்பியோட்டம்: 3 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தேடுதல் வேட்டை

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்து பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர் தப்பினார். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இதில் இலங்கை, பங்களாதேஷ், ரஷ்யா, நைஜீரியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 115 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இங்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நேற்று கணக்கெடுப்பு நடத்தினர். அப்போது பல்கேரியாவைச் சேர்ந்த இலியன் ஸ்ட்ராகோவ் மார்கோவ் (55) என்பவரைக் காணவில்லை. அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பிகளை அறுத்து, அதன் வழியாக அவர் தப்பியது தெரியவந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சமி நிலங்களை மீட்க தனி சட்டம் தேவை: பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வேண்டுகோள்

ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்தார். சட்டப்பேரவையில் தொழில், வருவாய், கனிமங்கள், சுரங்கங்கள் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீது பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை அருகே கிகா தொழிற்சாலை: 24 எம் டெக்னாலஜிஸ், லுகாஸ் டிவிஎஸ் கூட்டு முயற்சியில் அமைகிறது

லுகாஸ் டிவிஎஸ் நிறுவனம் 24 எம் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னைக்கு அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி தேர்வாய் கண்டிகையில் நாட்டின் முதல் கிகா தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இந்தியாவில் ஆற்றல் சேமிப்பு தயாரிப்புகள், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி, மற்றும் லெட்ஆசிட் பேட்டரி மாற்று சந்தைகள்ஆகியவற்றின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ள நிலையில் ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்புக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்ய லுகாஸ் டிவிஎஸ் நிறுவனமும் 24எம் டெக்னாலஜிஸ் நிறுவனமும் இணைந்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானாவில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

தெலங்கானாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தெலங்கானா மாநிலம் விகாராபாத்தில் மணமக்கள் நவாஸ் ரெட்டி – பிரவல்லிகா ஆகியோருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இவர்கள் காரில் ஹைதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்தனர். இவர்களுடன் மேலும் 4 பேர் காரில் இருந்தனர். வழியில் இந்த கார் வெள்ளத்தில் சிக்கியதில் அனைவரும் நீரில் மூழ்கினர். இதில் பிரவல்லிகா மட்டும் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். மற்றவர்களை தேடும் பணி தொடர்கிறது. இதுபோல் மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் கனமழைக்கு 6 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 11 பேரை காணவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன்: பக்தர்களின் கோரிக்கை மீது விரைவில் தேவஸ்தானம் முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோயி லில் கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல், கரோனா 2-ம் அலையால் இலவச தரிசனம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், சாமானிய பக்தர்கள் சுவாமியை தரிசிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ரூ.300 சிறப்பு தரிசனம் மட்டும் 2-ம் அலையிலும் இதுவரை நிறுத்தப்படாமல் தொடர்ந்து ஆன்லைனில் வழங்கப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெங்களூருவில் நடைபாதை தூண் மீது கார் மோதிய விபத்தில் ஒசூர் திமுக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழப்பு

பெங்களூருவில் நேற்று நள்ளிரவில் நடைபாதை தூண் மீது கார் மோதிய விபத்தில், ஒசூர் திமுக‌ எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் மகன் கருணா சாகர், 3 இளம்பெண்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். ஒசூர் திமுக‌ எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் மகன் கருணா சாகர் (25). இவர் நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் நண்பர்களை சந்திப்பதற்காக பெங்களூரு சென்றார். அங்கு நண்பர்கள் ரோஹித் (25), உத்சவ் (25), தனுஷ் (20) ஆகியோரை சந்தித்தார். பின்னர் அவர்களுடன் சென்று தனது உறவினரின் மகள் பிந்து (28), அவரது தோழிகள் இஷிதா (21), அக் ஷயா கோயல் (25) ஆகியோரையும் சந்தித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்மு - காஷ்மீரில் ஆட்சி அமைப்போம்: என்சிபி தலைவர் ஃபரூக் அப்துல்லா உறுதி

காஷ்மீரில் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிகாரமளிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மாநாடு கட்சியின் (என்சிபி) தலைவர் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது: காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் அவர்களை தீவிரவாதிகள் குறி வைக்கின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க காஷ்மீர் துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதிகள் தலைதூக்கி வருகிறார்கள். இதனால் மாநில மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது தெரியவில்லை. காஷ்மீரில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் என்சிபி கட்சி பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது. அந்த தேர்தலில் நாங்கள் பங்கேற்றிருக்க வேண்டும். காஷ்மீரில் அடுத்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்சிபி கட்சி பெருவாரியான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதனை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், காஷ்மீரில் தற்போது இருக்கும் க...

வெளியுறவுக் கொள்கை பற்றிய சிந்தனையை தூண்டும் நூல்: மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ‘இந்திய வழி’ நூல் குறித்து பிரபலங்கள் கருத்து

வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் ‘இந்திய வழி’ என்ற நூல் நமது வெளியுறவுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்ற சிந்தனையை தூண்டுவதாக உள்ளது எனபிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். வெளியுறவு அமைச்சரான எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் வெளியுறவு செயலாளர் ஆவார்.1977-ல் ஐஎப்எஸ் அதிகாரியான இவர் ஒரு தமிழர். பல்வேறு நாடுகளில் இந்திய தூதரகங்களில் பணியாற்றியவர். இவர்தனது பணியின்போது, இந்தியாவுக்கு இருந்த சவால்களை உற்றுநோக்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். அவரது முக்கிய கருத்துகள் தொகுக்கப்பட்டு, ‘India Way –Strategies for an Uncertain world’ என்ற ஆங்கில நூலாக வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி. விவசாயி குவாரியில் 6-ம் முறை வைரம் கண்டெடுப்பு

மத்திய பிரதேச விவசாயியின் குவாரியில் கடந்த 2 ஆண்டுகளில் 6-வது முறையாக விலைஉயர்ந்த வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பிரகாஷ் மஜும்தார். அந்த மாவட்டத்தின் ஜாரூவாபூர் கிராமத்தில் அரசு நிலத்தை அவர் குத்தகைக்கு எடுத்து குவாரி நடத்தி வருகிறார். அங்கு நேற்று முன்தினம் 6.47 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் மின்இணைப்பு வழங்க தமிழக அரசுக்கு உரிமையாளர்கள் கோரிக்கை: நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லவும் வலியுறுத்தல்

விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், மின்இணைப்பு வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்கள் புதிதாக வீடு கட்டும் போது, அந்த வீட்டுக்கானகட்டிட வரைபட அனுமதியை அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ளநகராட்சி, மாகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விற்பனைக்கான வழிவகை கோரி விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சட்டப்பேரவை முன் போராட்டம்

விநாயகர் சிலைகளை விற்பனை செய்வதற்கான வழிவகையை ஏற்படுத்தக் கோரி சிலை தயாரிப்பாளர்கள், சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கம் முன்பு நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தி விழா, வரும்10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா வைரஸ் பரவலை கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து கொண்டாடவும், ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடலோர மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் என்.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகநாளை (செப்.2) கடலூர், சேலம், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்கள் தொகை பெருக்கம் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்ய பரிசீலனை: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்வது குறித்து கோரிக்கைகள் வந்துள்ளதால் பரிசீலித்து முடிவு அறி விக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய சேலம் வடக்கு தொகுதி திமுக உறுப்பினர் ரா.ராஜேந்திரன், ‘‘சேலம், கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சியானது. தற்போது60 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில்,வார்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டும்’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேகேதாட்டு,குண்டாறு இணைப்பு திட்டம் பேசப்படவில்லை; தமிழகத்துக்கு 30.6 டிஎம்சி தண்ணீர்: உடனடியாக திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய 30.6 டிஎம்சி நீரை உடனடியாக வழங்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மேகேதாட்டு, காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கவில்லை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13-வது கூட்டம் டெல்லியில் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் பொதுப் பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், உறுப்பினர் பட்டாபிராமன் ஆகியோரும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் ப‌ங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆட்சிக்கு வந்தபிறகு அரசியல் செய்யக்கூடாது; அதற்கு சாட்சி உங்கள் செயல்பாடு: முதல்வர் ஸ்டாலினுக்கு பவன் கல்யாண் பாராட்டு

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஜனசேனா தலைவரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் அந்த அறிக்கை வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாரியப்பன் தங்கவேலுவுக்கு ரூ.2 கோடி ஊக்கப் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு ரூ.2 கோடி ஊக்கப் பரிசு அளிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் ‘தங்கமகன்’ என தடகள விளையாட்டுப் போட்டிகளில் புகழ்பெற்ற மாரியப்பன் தங்கவேலு, டோக்கியோ பாரலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் வாழ்த்து

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு குடியரசுத் தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இன்று நடந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போதைப் பொருள் வழக்கில் கன்னட நடிகை உட்பட 3 பேருடைய வீடுகளில் சோதனை: கஞ்சா சிக்கியதால் விரைவில் கைதாக வாய்ப்பு

பெங்களூருவில் போதைப்பொருள் தடுப்பு வழக்கில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 16 பேர் கைதுசெய்யப்பட்டன‌ர். அவர்கள்போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த தாமஸ்(31) பிரபலங்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. கடந்தசனிக்கிழமை அவரை கைது செய்தபோலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் நேற்று பெங்களூருவில் உள்ள கன்னட நடிகை சோனியா அகர்வாலின் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் 40 கிராம் கஞ்சா, 12 மது பாட்டில்கள் சிக்கின. இதே போல தொழிலதிபர் பரத், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வசனா சின்னப்பா ஆகியோரின் வீடுகளின் நடத்திய சோதனையிலும் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாளை முதல் பள்ளிகள் திறப்பு: ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

நாளை (செப். 1) முதல், பள்ளிகள் திறக்கப்படுவதால் செங்கை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பரவலையொட்டி பள்ளிகள் மூடப்பட்டன. இதனிடையே தொற்று பரவல் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு செப். 1-ம் தேதி (நாளை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பம்மல், பல்லாவரம், அனகாபுத்தூர் நகராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைய ஒப்புதல் அளித்து தீர்மானம்: 4 பேரூராட்சிகளும் கடிதம் அனுப்பியுள்ளன

தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பேரூராட்சி, நகராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக மாற்றப்பட உள்ளது. இதற்காக பேரூராட்சி. நகராட்சி மற்றும் ஊராட்சிகள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் பெரு நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனுடன் அருகில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் இணைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலையைச் சேர்ந்தவர் பத்திர எழுத்தர் குணசீலன் (65). இவர் ராசிபுரம் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தரக்கோரி 15 பேர் தன்னிடம் ரூ.76.50 லட்சம் பணம் அளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு செப்டம்பர் மாதத்தில் 1.04 கோடி கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு : ஓசூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்துக்கு செப்டம்பர் மாதம் 1.04 கோடி கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓசூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பாத்தகோட்டா கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணிகளை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு உதவ வேண்டும்: கேரள முதல்வரிடம் தமிழக விவசாயிகள் நேரில் வலியுறுத்தல்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு உதவ வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், தமிழக விவசாயிகள் நேற்று நேரில் வலியுறுத்தினர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுதலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் குழுவினர், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பத்திரிகையாளர் நலன் பாதிக்காத வகையில் பிரஸ் கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

பத்திரிகையாளர்கள் நலன் பாதிக்காத வகையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, பிரஸ் கவுன்சில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். ஈரோடு மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு விவசாயிகளிடம் தற்போது தேங்காய் பருப்பை கொள்முதல் செய்கிறது. இதனை மாற்றி முழு தேங்காயாக கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் தீர்மானம் இந்தக் கூட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று- தமிழகம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுமா?

கேரள மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், அங்கிருந்து தமிழகத்துக்கு ரயில்மூலமாக வருபவர்களால் தமிழகத்தில் கரோனா தொற்று பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கேரளாவில் இருந்து தமிழகம் வழியாக இயக்கப்படும் ரயில்களை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், கடந்த ஒருவாரமாக தினசரி கரோனா தொற்றுபாதிப்பு சுமார் 30 ஆயிரமாகஉள்ளது. அங்கு கரோனா பரிசோதனை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையில், தொற்று உறுதியாகும் வீதம் 19.67 சதவீதமாக உள்ளது. கேரளாவில் நேற்றுமுன்தின நிலவரப்படி மொத்தம் 2.12 லட்சம் பேர் கரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உடலியல் அம்சங்கள் உரிமைகளை கட்டுப்படுத்துமா?

"ராணுவத்தில் பெண்களை உயர் பதவிகளில் அமர்த் தாமல் இருப்பதற்கு 101 காரணங்களை தேடாதீர்கள்; பெண்களுக்கு உயர் பதவி வழங்காமல் இருப்பதற்கு நாங்கள் எந்த காரணத்தையும் இந்த வழக்கில் பார்க்க இயலவில்லை உங்களுடைய ஆணாதிக்க மனப்பான்மையை தவிர! உடல் சார்ந்த விஷயங்களை வைத்து பெண்களின் உரிமை சார்ந்த விஷயங்களை நிர்ணயிக்க முடியாது; பாலின பாகுபாடு பார்ப்பதற்கு அரசு ஒரு முடிவு கட்ட வேண்டும்" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆண்களின் கோட்டையான ராணுவத்தில் நீண்ட காலம் பெண்கள் நுழைய இயலவில்லை. இதற்கு உடல் பலம் ஒரு காரணமாக காட்டப்பட்டது. சட்டம் மாறிய போதும் சமூக கண்ணோட்டம் மாறவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விரல் நுனியில் கரோனா தகவல்கள்: கவனம் குவிக்கும் கேரள அரசு பணியாளர்

தேசிய அளவில் கரோனா குறித்த தகவல்களை மக்களுக்கு வழங்கி வரும் கேரள அரசுப் பணியாளரின் செயல் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸால் கவுர விக்கப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறையில் இளநிலை எழுத்தராக பணிபுரிபவர் கிருஷ்ண பிரசாத்(40). எம்பிஏ பட்டதாரியான இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கரோனா குறித்த புள்ளிவிவரங்களை பொழுதுபோக்காக சேகரிக்க தொடங்கினார். ஆனால், அதுவேஇப்போது நாடெங்கிலும் உள்ள மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் அனைவராலும் கவனிக்கப் படக்கூடிய விஷயமாக மாறியுள் ளது. இவரது கரோனா குறித்த தரவு சேகரிப்புகளுக்காகவே, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ண பிரசாத், இந்து தமிழ்திசையிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தந்தை வழியில் தலைமை நீதிபதி ஆகப் போகும் பி.வி.நாகரத்னா: நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமை கிடைக்கும்

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நீதிபதி பி.வி.நாகரத்னா ‘இந்தியா வின் முதல் பெண் தலைமை நீதி பதி’ எனும் பெருமையை பெற இருக்கிறார். இதனால் அவரது உறவினர்களும் சக பெண் வழக்கறிஞர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரையை ஏற்று, 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அண்மையில் நியமிக்கப்பட்டனர். இதில் ஒருவரான கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னாவுக்கு வரும் 2027-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி, தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜீன்ஸ் ஆடையில் பசையாக பூசி தங்கத்தை நூதன முறையில் கடத்தியவர் கேரளாவில் கைது

இரண்டு அடுக்கு ஜீன்ஸ் பேன்ட்-க்கு இடையில் தங்கத்தை பசையாக பூசி, நூதன முறையில் கடத்தி வந்தவரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று காலையில் பயணிகளிடம் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையிலான பயணி ஒருவரை சோதனையிட்டனர். இதில் அவர் 2 லேயர் துணியால் தைக்கப்பட்டிருந்த ஜீன்ஸ் அணிந்திருந்தது தெரியவந்தது. மேலும் அந்த ஜீன்ஸில் ஒரு துணிக்கும் மற்றொரு துணிக்கும் இடையில் தங்கத்தை பசையாக பூசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பாதிப்பு குறைந்ததால் 17 மாதத்துக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் நாளை முதல் வழக்குகள் நேரடி விசாரணை

கரோனா பாதிப்பு குறைந்ததால், உச்ச நீதிமன்றத்தில் 17 மாதங் களுக்குப் பிறகு குறிப்பிட்ட சில வழக்குகள் மீதான விசா ரணை மட்டும் நாளை முதல் நேரடியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டா கணினிமயமாக்கப்பட்டதில் பெயர், நிலத்தின் அளவு உள்ளிட்ட விவரங்களில் குழப்பம்: ஆவணங்களுடன் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

வருவாய்த் துறையில் பட்டா கணினிமயமாக்கப்பட்டபோது, உரிமையாளர் பெயர், நிலத்தின் அளவு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவேற்றம் செய்ததில் ஏற்பட்ட குழப்பத்தால், பொதுமக்கள் ஆவணங்களுடன் அலைக்கழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு நிர்வாகத்தில் காகிதமில்லா நிலையை உருவாக்கவும், ஆவணங்கள் தேடல் உள்ளிட்டவற்றுக்கான காலதாமதம் மற்றும் முறைகேடுகளை தவிர்க்கவும் பெரும்பாலான துறைகளின் செயல்பாடுகள் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இதில், வருவாய்த் துறையின் கீழ் உள்ள நில நிர்வாகத் துறை, அளவைத் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் கடந்த 1992-ம் ஆண்டு முதலே கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்துறை, நகராட்சி நிர்வாகம், ஆதிதிராவிடர் நலத் துறைகள் சார்பில் ரூ.593 கோடியில் குடியிருப்பு, விடுதி, குடிநீர் திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக உள்துறை, நகராட்சி நிர்வாகம், ஆதிதிராவிடர் நலத் துறைகள் சார்பில் ரூ.592.89 கோடி மதிப்பிலான காவலர் குடியிருப்பு கள், காவல், தீய ணைப்பு நிலையங்கள், விடுதிகள் உள்ளிட்ட திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூடுதலாக 58 ரயில்களுக்கு டெண்டர் வெளியீடு; ஐசிஎஃப்-பில் 44 ‘வந்தே பாரத்’ ரயில் டிசம்பரில் தயாரிப்பு

மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘வந்தேபாரத்’ விரைவுரயில் பிரிவில் மேலும் 58 ரயில்களைதயாரிக்க இந்திய ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப்-பில் 44 ரயில்களின் தயாரிப்பு பணி டிசம்பரில் தொடங்க உள்ளது. சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்-பில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் ‘ரயில் 18’ அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவேகரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டு டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்படுகிறது.இந்த ரயில், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு உரிய நேரத்தில் யூரியா, டிஏபி உரங்களை முழுமையாக வழங்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம்

தமிழகத்துக்கு உரிய நேரத்தில் யூரியா, டிஏபி உரங்களை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மண்டவியாவுக்கு தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் கையேடு வெளியீடு: வாக்காளருக்கு பரிசுப் பொருள், உறுதிமொழி அளிக்கக் கூடாது- வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும்போது, வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களையோ, உறுதிமொழிகளையோ அளிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்