Skip to main content

Posts

Showing posts from October, 2021

உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் முதல்வரை சந்திக்க முடிவு

காங்கயம் தாலுகாவில் மட்டும்40 உயர் மின்கோபுரங்கள் நிறுவப் படஉள்ளன.இத்திட்டப் பணிகளுக்காக ஏற்கெனவே விவசாயிகளிடம்இருந்து பெறப்பட்ட நிலங்களுக்கான வாடகை அளிப்பது, இனிவரும் திட்டப்பணிகளை சாலையோரம் புதைவடமாக செயல்படுத்துவது, நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றாமல், காங்கயம் அடுத்த காடையூர் பகுதியில் உயர்மின் கோபுர திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழியை விவசாயிகள் மூடினர். இந்நிலையில், உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில்காங்கயத்தை அடுத்த கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கடையம் ஒன்றியக்குழு தலைவர் பதவி விவகாரம்; முதல்வர் தலையிட்டு தீர்வு காண கோரிக்கை: ராஜினாமா செய்தவரின் மகன் வீடியோ வெளியீடு

கடையம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த பெண்ணின் மகன், மாவட்ட திமுக பொறுப்பாளர் பணம் கேட்டதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் தீர்வு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெயக்குமார், மறைமுகத் தேர்தலில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதே கட்சியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் வெற்றிபெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஒன்றரை ஆண்டில் 19 லட்சம் மனுக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் பெருமிதம்

“இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஒன்றரை ஆண்டில் 19 லட்சம் மனுக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுஉள்ளது” என, உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் தெரிவித்தார். இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-வது ஆண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிய மெகா சட்டசேவை முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஒன்றரை ஆண்டில் 19 லட்சம் மனுக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு: உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் பெருமிதம்

“இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் ஒன்றரை ஆண்டில் 19 லட்சம் மனுக்களுக்கு மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுஉள்ளது” என, உச்ச நீதிமன்ற நீதிபதி உதித் உமேஷ் லலித் தெரிவித்தார். இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினம், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-வது ஆண்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி, பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிய மெகா சட்டசேவை முகாம் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜ்குமாரின் இறுதி நிமிடங்கள் எப்படி இருந்தது? - இறுதியாக பரிசோதித்த மருத்துவரின் பேட்டி

கன்னட முன்னணி நடிகர் புனித் ராஜ்குமாரை கடைசியாக பரிசோதித்த மருத்துவர் ரமண ராவ் பெங்களூருவில், 'இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது: நான் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் குடும்ப மருத்துவர் என்பதால், அப்புவை (புனித்) சிறுவயதில் இருந்தே தெரியும். அவரது தந்தையை அழைப்பதை போலவே என்னையும் 'அப்பாஜி' என்றே அழைப்பார். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அப்புவும் அவரது மனைவியும் மருத்துவமனைக்கு வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முல்லைப்பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க கோரி உண்ணாவிரதம்: விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி தேனி மாவட்டம் கூடலூரில் நவ.12-ல் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் பிஆர். பாண்டியன் தெரிவித்தார். அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் மதுரை மண்டல நிர்வாகிகள் அவசரக் கூட்டம் அதன் கவுரவத் தலைவர் ஆதிமூலம் தலைமையில் மதுரையில் நடந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சார்பில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம்: தமிழ்ப் புத்தகக் கண்காட்சி

அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. அமெரிக்காவில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் அண்மையில் நியூ ஜெர்சியில் நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மகாவீரர் நினைவு தினத்தில் இறைச்சி கடைகளை அனுமதிப்பதா?- பாஜக நாராயணன் திருப்பதி கண்டனம்

பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டு மகாவீரர் நினைவு தினத்தில் தீபாவளி வருவதால், இறைச்சி கடைகளை அடைக்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அடுத்த 2 மாதங்கள் சவாலாக இருக்கும் நோய் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறை செயலாளர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் அடுத்த 2 மாதங்கள் சவாலாக இருக்கும் என்பதால் நோய் தடுப்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தடுப்பூசி முகாம்களை தவிர மற்ற நாட்களிலும் தடுப்பூசி அதிகளவில் செலுத்தவதை உறுதிப்படுத்த வேண்டும். வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுபடுத்த, நோய் தடுப்பு பணிகளை தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்த வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான கால அவகாசம் முடிந்தும் செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட வேண்டும். பண்டிகை நாட்களில் கரோனாபரவதலை தடுக்கும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரஜினியின் உடல்நிலையை விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காவேரி மருத்துவமனைக்கு சென்று, நடிகர் ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். டெல்லியில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாய், தந்தையின் கல்லறைக்கு அருகில் அரசு மரியாதையுடன் நடிகர் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்: நெற்றியில் முத்தமிட்டு விடை கொடுத்த கர்நாடக முதல்வர் பசவராஜ்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் கர்நாடக அரசின் முழு மரியாதையுடன் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கண்டீரவா ஸ்டுடியோவில் அவரது தாய், தந்தையின் கல்லறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார் (46) கடந்த 29-ம் தேதி பெங்களூருவில் மாரடைப்பினால் காலமானார். அவரது திடீர் மறைவு கன்னட திரையுலகினரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கர்நாடக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது இறப்பினை தாங்க முடியாமல் பெலகாவியில் 2 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழக அரசின் வெளிநாட்டு உறவுகளுக்கான ஒருங்கிணைப்பு பணியில் வெளியுறவுத் துறையின் சென்னை கிளை: இயக்குநர் எம்.வெங்கடாச்சலம் ஐஎப்எஸ் பேட்டி

தமிழக அரசின் வெளிநாட்டு உறவுகளுக் கான ஒருங்கிணைப்பு பணியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கிளை செயலகம் 2007 முதல் சென்னையில் செயல்படுகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து அதன் இயக்குநரான முனைவர் எம்.வெங்கடாச்சலம், டெல்லி வந்தபோது பேட்டி அளித்தார். சென்னையிலுள்ள குடிபெயர்வோர் பாதுகாவலர் மத்திய அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பிலும் இவர் உள்ளார். நமது நாளேட்டின் கேள்விகளுக்கு இவர் அளித்த பதில்கள் வருமாறு: மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு மாநிலங்களில் கிளைகள் என்பதே புதிய தகவலாக உள்ளதே? from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் 21-வது நாளாக அடர்ந்த காட்டில் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்கிறது: மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திறப்பு

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் அருகே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகளுடன் கடந்த அக்டோபர் 11-ம் தேதி என்கவுன்ட்டர் நடைபெற்றது. அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சூரன்கோட் அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதிக்கும் ரஜவுரி மாவட்டம் தானமண்டி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கும் தப்பியோடினர். அந்தப் பகுதிகளில் தீவிரவாதி களை தேடும் பணி அன்றைய தினமே முடுக்கி விடப்பட்டது. இதற்கிடையில், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி ஜம்மு - ரஜவுரி இடையே தேசிய நெடுஞ்சாலை அக்டோபர் 15-ம் தேதி மூடப்பட்டது. தீவிரவாதிகள் மறைந்துள்ள காட்டுப் பகுதி வழியாக இந்த நெடுஞ்சாலை செல்வதால் மூடப்பட்டது. இதற்கிடையில், தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நேற்று 21-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடகிழக்கு பகுதியில் வங்கி சேவை விழிப்புணர்வு: வங்கியாளர்கள் குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு

வடகிழக்கு மாநிலங்களில் வங்கி சேவைகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷண்ராவ் காரத், அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது குவாஹாட்டி மற்றும் இம்பால் நகரங்களில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பல்வேறு வங்கிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பட்டாசு இறக்குமதிக்கு எதிர்ப்பு: சீனாவுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நஷ்டம்

இந்தியாவில் சீன பட்டாசுகளுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதால் அந்நாட்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையின்போது பொதுமக்கள் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு செலவிடுவர். குறிப்பாக சீன பட்டாசுகள் கணிசமாக இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின்போது சீன தயாரிப்புகளை புறக்கணிக்க இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்திய ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி சிறப்பு கலந்துரையாடல்: அப்துல் கலாம் குறித்து விஞ்ஞானிகள் பெருமிதம்

இந்தியா போர் விமானத்துறையில் சுயசார்பை அடைய வேண்டும் என்று கனவு கண்டவர் அப்துல் கலாம் என்று ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில், கலாமுடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர். இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும்இணையவழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவுக்கு நீர்திறப்பு அதிகரிப்பு; முல்லை பெரியாறு அணை பகுதியில் தமிழக தலைமை பொறியாளர் ஆய்வு: கேரள அமைச்சர்கள் தொடர்ந்து முகாம்

கேரளாவுக்கு முல்லை பெரியாறு அணை நீர் திறப்பை அதிகரித்த நிலையில், அணையில் சிறப்புக் கோட்ட மண்டலத் தலைமைப் பொறியாளர் ம.கிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டு தண்ணீர் திறப்பை பார்வையிட்டார். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்த உச்ச நீதிமன்றம் 2014-ம் ஆண்டில் உத்தரவிட்டது. இருப்பினும் அணையின் பலம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை கேரள அரசு எழுப்பி, நீர்மட்டத்தை உயர்த்துவதில் தொடர்ந்து தடை ஏற்படுத்தி வருகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு 2014, 2015 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மட்டுமே 142 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜூலை 18-க்கு மாற்றியது கண்டனத்துக்குரியது, பொருத்தமற்றது; நவ.1-ம் தேதியே ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்பட வேண்டும்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

‘தமிழ்நாடு நாள்’ நவ.1-ம் தேதிதான் கொண்டாடப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். அந்த நாளை ஜூலை 18-ம் தேதிக்கு மாற்றியதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் நேற்றுவெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குழந்தைகளிடம் இருந்து கற்கவேண்டிய பாடங்கள்

பள்ளிகள் திறந்தாகிவிட்டது. பள்ளித் திறப்பை பெரும் திருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று கல்வியாளர்கள், கல்வி நேசர்கள், ஆசிரியர்கள் திட்டமிட்டனர். தமிழக முதல்வரின் அறிவிப்பும்,அழைப்பும் இந்த கொண்டாட்டத்தை வெகுவீச்சோடு கொண்டு சென்றுவிடும். கொண்டாட்டத்தின் பல்வேறு வடிவங்களை பல்வேறு ஊடகங்களில் கண்டு மகிழலாம். துவண்டு கிடந்த குழந்தைகள் மனதில் புதிய உற்சாக விதையை இந்த கொண்டாட்டம் ஊன்றும். தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம், குழந்தைகளின் கற்றல் மனத்தை மீட்டெடுக்கவும், கற்றல் இணை செயல்பாடுகள் வழியாக கற்கும் வேகத்தை தூண்டவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வளவுதான் என்று அளவிடமுடியாத இழப்புகளை சரிக்கட்ட இதெல்லாம் அவசர அவசியம். கற்றல் இழப்பு, கற்றல் இடைவெளி, அதை ஈடுசெய்தல் அல்லது குறைத்தல் என்று எடுக்கப்படும் நடவடிக்கைகள் மத்தியில், குழந்தைகள் மனதில் இருந்து வெளிக்கொண்டு வரவேண்டிய ஓர் உன்னதப் பகுதி உள்ளது. அது, கல்வியாளர்களுக்கே கல்வி கற்றுத்தர வல்லது. வருங்கால பாடத் திட்டம், கலை திட்டம், ஆகியவற்றில் புதிய வெளிச்சம் பாய்ச்சவல்லது. குழந்தைகள் மனதில் கொட்டிக் கிடக்கும் கரோனா கால...

கைலாசநாதர், கரிவரதர் கோயில்களில் புதிய குளம்: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை மாதவரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில், கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். கோயில்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாதவரம் கைலாசநாதர், கரிவரதராஜப் பெருமாள் கோயில்களில் பக்தர்கள், இறையன்பர்களுக்கு வசதியாக என்னஅடிப்படை தேவைகளை நிறைவேற்றலாம் என்பது பற்றி ஆலோசித்தோம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் புதிய ரேடார் செயல்படத் தொடங்கியது

சென்னையில் வானிலை ஆய்வு மையத்தின் புதிய ரேடார் பள்ளிக்கரணையில் நேற்று செயல்படத் தொடங்கியது. மழை மேகங்களின் தன்மை,நகர்வு, மழை அளவு போன்றவற்றை ரேடார் மூலம் கிடைக்கும் தரவுகள் மூலம் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது. ரேடார்களில் இருந்து செலுத்தப்படும் மின் காந்த அலைகள் மூலமாகக் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு, குறுகியகால வானிலை முன்னறிவிப்பு, நிகழ்நேர மழை நிலவரம் போன்றவற்றை ஆய்வு மையத்தால் வழங்க முடியும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்களை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

சென்னையில் வேளச்சேரி மற்றும் கோயம்பேடு மேம்பாலங்களைக் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அவற்றை திறந்து வைக்கவுள்ளார். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம், ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம், ரூ.93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலப் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

கர்நாடக சட்டப்பேரவையில் காலியாக உள்ள விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி, ஹாவேரி மாவட்டம் ஹனகல் ஆகிய 2 தொகுதிகளில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான‌ காங்கிரஸ், மஜத ஆகியவை தனித்தனியாக போட்டியிடுகின்றன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பசவராஜ் அனைத்து அமைச்சர்களையும் களத்தில் இறக்கினார். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோரும், மஜத வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் பிரதமரும் மஜத தேசிய தலைவருமான தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழக அரசுக்கு தெரிந்துதான் பெரியாறு அணை திறக்கப்பட்டதா?- முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பசும்பொன்னில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரியாறு அணை முதல் முறையாக தமிழக அரசின் அனுமதி பெறாமல் கேரள அரசால் திறந்துவிடப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மாநில அரசுக்கு தெரிந்துதான் இது நடந்ததா? அனுமதி பெற்றுத்தான் செய்தனரா என்று தெரியவில்லை. அணையில் நீர்மட்டம் 136 அடியை எட்டும்போது அவசரமாக திறந்து விடப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் எங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ளனர். இது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாகக் கூற வேண்டும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நெருக்கடி காரணமாக பதவியை ராஜினாமா செய்த கடையம் ஒன்றிய குழு தலைவரிடம் ரூ.1 கோடி கேட்டதாக சர்ச்சை: எஸ்பி.யிடம் மாவட்ட திமுக பொறுப்பாளர் புகார்

நெருக்கடி காரணமாக பதவியை ராஜினாமா செய்த கடையம் ஒன்றியக் குழு தலைவர் செல்லம்மாள், தன்னிடம் திமுக மாவட்டப் பொறுப்பாளர் ரூ.1.10 கோடி கேட்டதாக கூறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட திமுக பொறுப்பாளர் போலீஸில் புகார் அளித்தார். தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில், திமுக சார்பில் 11 பேர், அதிமுக சார்பில் 5 பேர்,காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றிபெற்றனர். திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராக, ஜெயக்குமார் என்பவரை தேர்ந்தெடுக்குமாறு, திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. கடந்த 22-ம் தேதி நடந்த மறைமுக தேர்தலில் திமுகவைச் சேர்ந்த செல்லம்மாள் 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பேருந்து நிலையங்களில் முன்னேற்பாடுகள் தீவிரம்; தீபாவளி சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கம்: போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு தமிழகம்முழுவதும் நாளை (நவ. 1) முதல்சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறைஅமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற 7-ம் கட்ட மெகா முகாமில் 17 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

தமிழகம் முழுவதும் நடந்த 7-வது கட்ட மெகா முகாமில் 17.14 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த அரசு முடிவு செய்தது. அதன்படி, 5 கட்டங்களாக முகாம்கள் நடத்திதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நேற்று 50 ஆயிரம் இடங்களில் 7-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாயகம் கவி, அசன் மௌலானா ஆகியோர் உடனிருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தரை இலக்கை தாக்கும் அதிநவீன வெடிகுண்டு பரிசோதனை வெற்றி

விமானத்தில் இருந்து தொலை தூரத்தில் இருக்கும் தரை இலக்கை தாக்கும் அதிநவீன வெடிகுண்டு பரிசோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கவல்ல வெடிகுண்டுகளை ஹைதரா பாத்தில் உள்ள டிஆர்டிஓ-வின் இமாரத் ஆராய்ச்சி மையம் அண்மையில் உருவாக்கியது. இந்த வெடிகுண்டு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயா ரிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி. ஆக்ராவில் இயங்கி வந்த போலி உரத் தொழிற்சாலை: தமிழகத்துக்கும் விநியோகித்ததாக தகவல்

பாஜக ஆளும் உ.பி.யில் சமீப காலமாக உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரம் பெறுவதற் காக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. உரம் கிடைக்காததால் லலித்பூரில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து மாநிலம் முழுவதிலும் உர விநியோகம் மீது தீவிர கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இச்சூழலில், புகாரின் அடிப் படையில் நேற்று ஆக்ராவின் ரஹன்காலா பகுதியில் போலீஸார் உதவியுடன் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி னர். இதில், போலி உரம் தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த இயந்திரங் கள், 30 குவிண்டால் போலி உரம், 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.போலி உரத்தை ரூ.50 செலவில் தயாரித்து ரூ.1,000-க்கு விற்பனை செய்து வந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெட்ரோலில் லாபம் பார்க்கும் தொழிலதிபர்கள்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் குற்றச்சாட்டு

கோவா சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அம்மாநிலத்தில் ராகுல் காந்தி நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வெல்ஸோ கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் உணவுப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்றைக்கு கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. அப்படி இருந்தும் கூட, பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் அவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பிரதமருக்கு நெருக்கமான 4 முதல் 5 தொழிலதிபர்களே லாபம் அடைகிறார்கள் என்பது தெரியவரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின்னணு முகவரி குறியீடு வழங்க மத்திய அரசு திட்டம்: வர்த்தக நிறுவனங்கள் இணைய வழியில் உறுதிப்படுத்த முடியும்

ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின்னணு முகவரி குறியீடு (டிஏசி) வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள் இணைய வழியில் முகவரியை சுலபமாக உறுதிப்படுத்த முடியும். இந்த குறியீட்டை வைத்து சொத்து வரியை சுலபமாக செலுத்துவது முதல் இணையவழியில் பொருட் களை வாங்குவது வரை பயன் படுத்தலாம். இப்போது முகவரிக்கான ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் இடம்பெற்றுள்ள முகவரியை மின்னணு முறையில் உறுதிப்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக நாட்டில் உள்ள அனைத்து முகவரியையும் புவியியல் ரீதியாக மின்னணு முகவரி குறியீடாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் எந்த ஒரு முகவரி யையும் இணையதளம் மூலம் உறுதிப்படுத்த முடியும். இந்தக் குறியீடை உருவாக்கும் பணியில் அஞ்சல் துறை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை இணையதளத்தில் வெளியிட்டுள்ள அஞ்சல் துறை, பொதுமக்களின் கருத்தை கோரியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீர் தால் ஏரியில் மிதக்கும் திறந்தவெளி திரையரங்கம் தொடக்கம்

காஷ்மீரின் தால் ஏரியில் இருக்கும் படகு வீடுகள் உலகப் புகழ்பெற்றவை. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு வீடுகளில் தங்கி இயற்கை அழகை ரசிக்க தவறுவதில்லை. இந்நிலையில் தால் ஏரியில் உள்ள ஒரு படகு வீட்டில் திறந்தவெளி திரையரங்கை உருவாக்கியுள்ளனர். காஷ்மீரிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட மிதக்கும் திறந்தவெளி திரையரங்கம் இதுதான். ஜம்மு-காஷ்மீர் தலைமைச் செயலர் அருண் குமார் மேத்தா அண்மையில் இதை தொடங்கி வைத்தார். முதல் நாளில் இந்திப் படமான காஷ்மீர் கி காளி திரைப்படம் சுற்றுலாப் பயணிகளுக்காகவும், தால் ஏரி பகுதி மக்களுக்காகவும் திரையிடப்பட்டது. இந்த திரையரங்கம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் என்றும், இங்கு சுற்றுலா மேம்படும் என்று ஜம்மு-காஷ்மீர் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை செயலர் சர்மத் ஹபீஸ் தெரிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு: தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

முல்லை பெரியாறு அணையில் மேலும் ஒரு மதகு திறக்கப்பட்டு கூடுதல் நீர் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஏற்கெனவே 2 மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மேலும் 1 மதகு திறக்கப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் கேரளப் பகுதிக்கு நீர் திறக்கப்பட்டது. அணையில் உள்ள 13 மதகுகளில் 3 மற்றும் 4-வது மதகுகள் திறக்கப்பட்டு விநாடிக்கு 514 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அன்று இரவு வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 825 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாரடைப்புக்கு வழிவகுக்கும் கடும் உடற்பயிற்சி: 2 இளம் நடிகர்களின் உயிரை பறித்த ‘ஃபிட்னஸ் விருப்பம்’

கன்னட திரையுலகில் ‘ஃபிட்னஸ் ப்ரிக்' ஆக இருந்த நடிகர்கள் சிரஞ்சீவி சர்ஜா, புனித் ராஜ்குமார் ஆகிய இருவரும் உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக உயிரிழந்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. நடிகர் அர்ஜூனின் அக்கா மகன்சிரஞ்சீவி சர்ஜா (36), கடந்த ஆண்டு ஜூன் 7-ம் தேதி தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரைபரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவமனைக்கு வரும் வழியிலே சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பல்கலை.யில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்களை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்: துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அறிவுறுத்தல்

தேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி, கடந்த செப்.18-ம்தேதி பதவியேற்றார். பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பும் ஆளுநர் வசமுள்ளது. அதன்படி அனைத்து பல்கலை.களின் துணைவேந்தர்களுடன் கலந்துரையாடல்கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவிதலைமையில் நடந்த இக் கூட்டத்தில் உயர்கல்வித் துறையின்கீழ்உள்ள பல்கலை.களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புனித் ராஜ்குமாரின் உடலுக்கு லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது

மாரடைப்பால் காலமான கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் (46) உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் உட்பட லட்சக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார்(46) நேற்று முன்தினம் பெங்களூருவில் திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது விருப்பப்படி உடனடியாக கண்கள் தானம்செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தீபாவளியன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அரசு அனுமதி

தீபாவளியன்று தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்து விளக்கம்; முதல்வரின் பொறுப்புணர்வு மெச்சத்தக்கது: இந்திய கம்யூ. கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் பாராட்டு

தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் குறித்து உரிய விளக்கம் அளித்துள்ள முதல்வர் ஸ்டாலினின் பொறுப்புணர்வு மெச்சத்தக்கதாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கல்லூரி மாணவியை கொன்ற இளைஞருக்கு அதிக தண்டனை கிடைக்க நடவடிக்கை: டிஜிபி அலுவலகத்தில் பெற்றோர் வலியுறுத்தல்

தாம்பரம் ரயில் நிலையம் அருகே மகளைக் கொன்ற இளைஞருக்கு, அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். சென்னை குரோம்பேட்டை பாரதிபுரத்தைச் சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(20). தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ லேப் டெக்னீஷியன் இரண்டாமாண்டு படித்து வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்