Skip to main content

Posts

Showing posts from November, 2021

இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம்: 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைக்கு சிக்கல்

இந்தியா முழுவதும் 412 தூர்தர்ஷன் நிலையங்களில் தரைவழிஒளிபரப்பு நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. இதனால் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராமேசுவரம் சல்லிமலையில் 1,060 அடி உயர உயர் சக்திஒளிபரப்பு கோபுரம் அமைந்துஉள்ளது. இது சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றான இக்கோபுரம், ஆசியாவிலும் உயரமான ஒளிபரப்பு கோபுரம் ஆகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சினிமா பார்த்துவிட்டு திரும்பிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: மதுரையில் காவலர் சஸ்பெண்ட்

மதுரையில் சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவில் திரும்பிய பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக காவலர் ஒருவரை, காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா பணியிடை நீக்கம் செய்தார். மதுரை வில்லாபுரம் கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் மகேஷ்(45). அவனியாபுரம் பகுதியில் கம்பெனி நடத்துகிறார். இவரது கம்பெனியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் உட்பட 5 பேர் கடந்த சனிக்கிழமை இரவு செல்லூர் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பார்த்துவிட்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். மதுரை டவுன் ஹால் சாலையில் வரும்போது அங்கிருந்த திலகர்திடல் குற்றப்பிரிவு காவலர் முருகன் உட்பட 3 பேர் அவர்களை நிறுத்தி விசாரித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 மாநிலங்களவை எம்.பி.க்கள்: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முதல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் ஆன 12 எம்.பி.க்கள் இன்று முதல் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றக் மழைக்கால கூட்டத் தொடரின்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மேஜையின் மீது ஏறி அவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக ஆகஸ்ட் 11-ம் தேதி மாநிலங்களவையில் பேசிய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக மறுநாள் அவையில் கண்ணீர் விட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவால் உயிரிழந்த இருவரின் சடலம் 16 மாதங்களுக்கு பின் கண்டெடுப்பு

பெங்களூரு: பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் பிணவறையை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளிர்ப்பதன கிடங்கை பார்த்தபோது 2 சடலங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கரோனா தொற்றினால் உயிரிழந்த இரு நோயாளிகளின் சடலங்கள் தகனம் செய்யப்படாதது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் பிணவறையை ஆய்வு செய்தனர். அதில் சாம்ராஜ்பேட்டையைச் சேர்ந்த துர்கா (40), கே.பி.அக்ரஹாராவைச் சேர்ந்த முனி ராஜு(35) ஆகிய இருவரின் சடல‌ங்கள் என தெரியவந்தது. இதையடுத்து இருவரின் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று இருவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் மேலும் 33 மாணவர்களுக்கு கரோனா

கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்தில் தார்வாட் மருத்துவக்கல்லூரி, மைசூரு நர்சிங் கல்லூரி, பெங் களூருவில் நர்சிங் கல்லூரி மற்றும் சர்வதேச உறைவிடப் பள்ளி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பரவியது. இதில் பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஹாசன் மாவட்டம் குமரனஹள்ளியில் உள்ள மொரார்ஜி தேசாய் விடுதியில் தங்கியிருந்த பள்ளி மாணவர்கள் 26 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, 26 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 500 பேருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒமைக்ரான் வைரஸ் பரவுவது நன்மையா? - சர்வதேச சுகாதார துறை வல்லுநர்கள் விளக்கம்

கரோனாவின் ஒமைக்ரான் வைரஸ் பரவுவது நன்மை பயக்கும் என்று சர்வதேச சுகாதார துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது கரோனாவின் டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில்தென்னாப்பிரிக்காவில் புதிய வகைகரோனா வைரஸ் பரவுவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்கள் காணப்படுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏழை தலித் மாணவிக்காக ரூ.15 ஆயிரம் கல்லூரி கட்டணம் செலுத்த முன்வந்த நீதிபதி

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சன்ஸ்கிரிதி ரஞ்சன் (17) என்ற மாணவி உயர் கல்விநிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் வெற்றி பெற்றார். தலித் மாணவியான இவர் அந்தபிரிவினருக்கான பட்டியலில் 1,469-வது இடம் பிடித்தார். இவருக்கு வாரணாசியில் உள்ள ஐஐடி-பிஎச்யுவில் (பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி) இடம் கிடைத்தது. ஆனால்குறிப்பிட்ட காலக்கெடுவுக் குள் கல்லூரிக்கான அடிப்படை கட்டணம் ரூ.15 ஆயிரத்தை செலுத்த முடியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வருவாய்க்கு அதிக சொத்து சேர்த்த புகார்: தனித்துணை ஆட்சியர் வீடு, பள்ளி, பங்க்கில் சோதனை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள வருவாய் நீதிமன்றத்தில் தனித்துணை ஆட்சியராக பணிபுரிபவர் பவானி. இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து போலீஸார் நேற்று முன்தினம் வழக்குப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, திருவானைக்காவலில் உள்ள பவானியின் வீடு, பவானியை நிர்வாக உறுப்பினராகக் கொண்டு மண்ணச்சநல்லூர் பகுதியில் இயங்கும் தனியார் பள்ளி, பவானியின் மகன் ஹர்ஷவர்தன் வாளாடியில் நடத்தி வரும் பெட்ரோல் பங்க் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை; சென்னையில் இன்று அதிமுக செயற்குழுக் கூட்டம்: தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்பு

அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சென்னையில் இன்று நடைபெற உள்ள செயற்குழுக் கூட்டம், தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வியூகம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கும் வகையில், அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 24-ம் தேதி நடைபெற்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி; ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி பண மோசடி செய்ததாக விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரின்பேரில், முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துபாண்டியன் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.‘எங்கள் மீது புகாரை கொடுத்துள்ள நபர்கள், ஏற்கெனவே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பல புகார்கள் உள்ளன. பணம் பறிக்கும் நோக்கில் எங்கள் மீதுபொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என மனுவில் தெரிவித்து இருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர் குழு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவம் வகையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம்அமைத்து தமிழக அரசு கடந்த2017-ல் உத்தரவிட்டது. அப்போலோமருத்துவர்கள் மற்றும் சாட்சிகளிடம் ஆணையம் ஓராண்டுக்கு மேல் விசாரணை நடத்தியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிச.5-ல் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், பழனிசாமி அஞ்சலி

அதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தொண்டர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழக மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்துவது அதிமுக தொண்டர்களின் கடமையாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லி பாஜக சுவரொட்டிகளில் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம்: சர்ச்சையில் முடிந்த ‘குடிசைவாசிகளை மதிக்கும் யாத்திரை’

டெல்லியில் மாநகராட்சி தேர்தல்சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஆம் ஆத்மிகட்சியை வீழ்த்த பாஜகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இங்கு மாநகராட்சிகளின் முக்கிய வாக்காளர்களாக குடிசைவாசிகள் கருதப்படுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகை அச்சுறுத்தும் புதிய வகை ஒமைக்ரான் கரோனா வைரஸை ஆர்டிபிசிஆர் பரிசோதனை மூலம் கண்டறியலாம்: பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை உத்தரவு

கரோனாவின் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத் துறை செயலாளர் நேற்று உயர்நிலை ஆலோசனை நடத்தினார். ஆர்டிபிசிஆர் பரிசோதனை, விரைவு பரிசோதனை (ஆர்ஏடி) மூலம் ஒமைக்ரான் வைரஸை கண்டறியலாம். எனவே அனைத்து மாநில அரசுகளும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டிச.15 வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு; கேரளாவுக்கு இன்று முதல் அரசு பேருந்துகள் இயக்கம்: பொதுப் போக்குவரத்துக்கு முதல்வர் அனுமதி

கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிச.15-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவுக்கு பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள தைத் தொடர்ந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது: இஸ்ரேலின் அதிநவீன உளவு விமானம்

இஸ்ரேலின் அதிநவீன ஹெரோன் உளவு விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன. ஆளில்லா உளவு விமானங்களை தயாரிப்பதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னோடிகளாக உள்ளன. இந்திய ராணுவத்தில் இஸ்ரேலின் ஹெரோன் உளவு விமானங்கள் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன. இவை லடாக் எல்லையில் உளவு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; விஜய் மல்லையா இந்தியா வரும்வரை காத்திருக்கப் போவதில்லை: ஜனவரி 22-ல் தீர்ப்பு என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அழைத்து வரும்வரை அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க காத்திருக்கப் போவதில்லை எனஉச்ச நீதிமன்றம் தெரிவித் துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கூட்டமைப்பு விஜய் மல்லையா மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. அதில் டியாகோபிஎல்சி நிறுவனத்திடமிருந்து பெற்ற 4 கோடி டாலரை தனது வாரிசுக்கு விஜய் மல்லையா மாற்றிவிட்டதாகவும், இது தொடர்பாக கடன் அளித்த வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி; வட ​ஆந்திரா அருகே புயலாக டிச 4-ல் கரையை கடக்கும்: 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

அந்தமான் அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று வரும் 4-ம் தேதி வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும். குமரிக்கடல் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்: விமான நிலைய இயக்குநர்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவு

தென் ஆப்பிரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட12 நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டறியப்பட்ட ‘ஒமைக்ரான்’ கரோனா வைரஸ் தடுப்புநடவடிக்கை குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களின் இயக்குநர்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நவீன தொழில்நுட்பத்துடன் வடிகால் வசதிகள் அவசியம்: சென்னையில் மழைநீர் தேங்கும் பிரச்சினையை தீர்க்க கட்டுமானப் பொறியாளர்கள் ஆலோசனை

பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கும் பிரச்சினையை தீர்க்க, நகர் முழுவதற்குமான மழைநீர் வடிகால் வரைபடத்தை உருவாக்கி, அதனை அதிநவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுத்த வேண்டும் என்று கட்டுமானப் பொறியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். சென்னையில் ஆண்டுதோறும் மழைப் பொழிவும், வெள்ள பாதிப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. சென்னையில் ஏற்கெனவே உள்ள மாஸ்டர் பிளான் மற்றும் அதன் செயலாக்கத்தில் உள்ள குறைகள்தான் மழைநீர் தேக்கத்துக்கான காரணம் என்று கூறும் கட்டுமானப் பொறியாளர்கள், சென்னை புறநகரில், குறிப்பாக பழைய மகாபலிபுரம் சாலையில் சிறுசேரி, கிழக்கு கடற்கரை சாலையில் கானாத்தூர், ஜிஎஸ்டி சாலையில் செங்கல்பட்டு உள்ளிட்ட வளர்ச்சியடைந்து வரும் பகுதிகளில் உள் கட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பிறகே வீடுகள் உள்ளிட்ட கட்டுமானங்களை கட்டுவதற்கும் நகரமயமாக்கலுக்கும் அரசு அனுமதிக்க வேண்டு்ம். இதில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது என்கின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்கள்; 2022 மார்ச் மாதம் வரை நீட்டிப்பு: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

ஏழைகளுக்கு ரேஷனில் இலவச உணவு தானியங்கள் வழங்கும் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம்அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றுபிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். கடந்த 2020 மார்ச் மாதம்கரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கிய நிலையில், முழுமையான பொது முடக்கம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு சிரமப்படக் கூடாது என்று மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா என்னும் ஏழைகளுக்கான நலத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதிலும் உள்ள 80 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு, ரேஷனில் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.க்கு வாக்குறுதி தருவதை விட்டுவிட்டு ராஜஸ்தானில் வேலையை ஏற்படுத்திக் கொடுங்கள்: காங்கிரஸுக்கு இளைஞர்கள் எதிர்ப்பு

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்று ராஜஸ்தானில் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. ஆனால், வேலை வாய்ப்புக்கு காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஜெய்ப்பூரில் இளைஞர் சங்கம் சார்பில் 47 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நடன இயக்குநர் சிவசங்கர் உடல் தகனம்

தமிழ், தெலுங்கு என மொத்தம் 10 மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடனஇயக்குநராக பணியாற்றியவர் சிவசங்கர் மாஸ்டர் (72). சென்னையில் கடந்த 1948-ம் ஆண்டில் பிறந்த இவருக்கு சுகன்யா என்கிற மனைவியும், விஜய், அஜய் என்கிற மகன்களும் உள்ளனர். தமிழில் 1996-ம் ஆண்டு வெளிவந்த பூவே உனக்காக, விஷ்வதுளசி (2003), வரலாறு (2006),உளியின் ஓசை (2008) ஆகியபடங்களில் பணியாற்றியதற் காக தமிழக அரசு சிறந்த நடன இயக்குநர் விருதை இவருக்கு வழங்கி கவுரவித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறுவர்களிடையே அதிகரிக்கும் உடல் பருமன் பிரச்சினை: தேசிய குடும்ப நல ஆய்வில் தகவல்

பல்வேறு மாநிலங்கள், யூனியன்பிரதேசங்களில் தேசிய குடும்பநல ஆய்வு-5 (என்எஃப்எச்எஸ்) நடத்தப்பட்டது. சிறார், பெரியவர்களிடையே உடல் பருமன் பிரச்சினை அதிகரித்துள்ளதாக அந்தஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த முறை நடைபெற்ற என்எஃப்எச்எஸ்-4 ஆய்வில் 2.1% சிறுவர்கள் உடல் பருமனாக இருந்தனர். தற்போது நடைபெற்ற ஆய்வில் அது 3.4% ஆக அதிகரித்துள்ளது. சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களிடத்திலும் இந்த உடல் பருமன் பிரச்சினை உள்ளது. கடந்த ஆய்வில் 20.6%ஆக இருந்த உடல் பருமனான பெண்களின் எண்ணிக்கை தற்போது 24% ஆக உயர்ந்துள்ளது. இதுபோல ஆண்களின் எண்ணிக்கை 18.9 சதவீதத்தில் இருந்து 22.9% ஆக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நீரிழிவு நோயாளிகளுக்கு அரசின் ஆதரவு, மானியம் தேவை: தலைமை நீதிபதி ரமணா வலியுறுத்தல்

நீரிழிவு நோயாளிகளுக்கு அரசின் ஆதரவும் மானியமும் தேவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தி உள்ளார். நீரிழிவு நோய் குறித்த அஹுஜா-பஜாஜ் கருத்தரங்கு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு: கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு போக்ஸோ சட்டத்தின்கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவை வெள்ளலூர், காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் நாகமுத்து என்கிற பேச்சி(30). பெயின்டர். இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்ளுவதாக கூறி, கடந்த 2018 ஆக.15-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசுடமையை நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் வேதா இல்லம் தொடர்பாக அதிமுக சார்பில் மேல் முறையீடு: இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தகவல்

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் தொடர்பாக மேல்முறையீடு செய்வோம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள மாநகர, மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு 4-வது முறையாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது: தமிழக விவசாயிகள் கொண்டாட்டம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, 4-வது முறையாக நேற்றிரவு 142 அடியை எட்டியதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 1979-ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு தொடர் சட்டப் போராட்டங்களின் பயனாக 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடியாக நிலைநிறுத்தலாம் என்றும் தீர்ப்புஅளித்தது. இதன்படி 2014, 2015, 2018-ம் ஆண்டுகளில் 3 முறை 142 அடி உயரத்துக்கு நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருச்சி அருகே விவசாயி கொலை; திமுக ஒன்றியச் செயலாளர், ரியல் எஸ்டேட் அதிபர் மீது வழக்கு: மேலும் 2 பேரை கைது செய்து விசாரணை

திருச்சி மாவட்டம் அல்லித்துறை அருகே மல்லியம்பத்து பகுதியில் உள்ள செங்கதிர் சோலை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(50). விவசாயியான இவர் ரியல் எஸ்டேட்தொழில் செய்து வந்தார். இவரதுமனைவி மைதிலி. இத்தம்பதிக்குஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த வாரம் மல்லியம்பத்து ஊராட்சித் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் அரசு அதிகாரிகள் செங்கதிர்சோலை கிராமத்தில் இருந்த மயான ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அந்த இடத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் தொடர்புடைய சிலர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு கிடைக்காமல், அந்த நிலத்தை அரசு கையகப்படுத்தியதற்கு சிவக்குமார்தான் முக்கியக் காரணம் என நினைத்த ரியல் எஸ்டேட் கும்பல், சிவக்குமாரிடம் கடந்த சில நாட்களாக பிரச்சினை செய்து வந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமைச்சர் செந்தில் பாலாஜி - ஜோதிமணி எம்பி இடையேயான நட்பில் விரிசல்: வெட்டவெளிச்சமாக்கிய உள்ளிருப்புப் போராட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொண்ட எம்பி ஜோதிமணியின் உள்ளிருப்புப் போராட்டத்தால், அவருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே இருந்து வந்த ஈகோ மோதல் தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது அமைச்சராக உள்ளசெந்தில்பாலாஜி, 2018 டிசம்பரில் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த பிறகு அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், 2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் ஜோதிமணிக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால், இந்தத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தம்பிதுரையை 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜோதிமணி வென்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி கோயில் தேவஸ்தான அதிகாரி டாலர் சேஷாத்ரி மாரடைப்பால் காலமானார்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இரங்கல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும், நாட்டில் உள்ள அனைத்து விவிஐபி மற்றும் விஐபிபக்தர்களுக்கும் மிகவும் பழக்கமானவர் ‘டாலர்’ சேஷாத்ரி (73).திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கடந்த 43 ஆண்டுகளாக பணியாற்றி வந்த இவர், நேற்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடு, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், அமைச்சர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒமைக்ரான் சாத்தியக் கூறுகளை கண்டறிய 12 ஆய்வகங்களுக்கு அனுமதி

தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம், அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸின் முதல்கட்ட சாத்தியக் கூறுகளை கண்டறியும் பரிசோதனையை, சென்னை, கோவை,திருச்சி, சேலம், மதுரை, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆய்வகங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி: சென்னையில் பாஜக முற்றுகைப் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி பாஜக சார்பில், சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம்அருகே நேற்று மாநில பொதுச் செயலர் கரு.நாகராஜன் தலைமையில் திரண்ட கட்சியினர், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி கோஷமெழுப்பினர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களைத் தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோயம்பேட்டில் தக்காளி லோடுகளை இறக்கி, ஏற்ற ஒரு ஏக்கர் இடத்தை ஒதுக்க நீதிபதி உத்தரவு: அனைத்து வியாபாரிகளையும் அனுமதிக்க பரிந்துரை

கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த மைதானம் ஏற்கெனவே மூடப்பட்டது. இந்த மைதானத்தை திறந்து விடக் கோரி கோயம்பேடு மார்க்கெட் தந்தை பெரியார் தக்காளிமொத்த வியாபாரிகள் சங்கத்தலைவர் சாமிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போக்சோ, வன்கொடுமை வழக்கில் கைதான சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து சோதனை: ஆவணங்களை கைப்பற்றியது சிபிசிஐடி

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா (79). இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜூன் 16-ம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 4 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருக்கு உடந்தையாக இருந்ததாக நடன ஆசிரியை சுஷ்மிதாவையும் சிபிசிஐடி போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குறுக்கு வழியில் சம்பாதித்தால் சிக்கிக் கொள்வீர்கள்: அரசு அலுவலர்களுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தல்

நேர்மை தவறி, குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தால் சிக்கிக் கொள்வீர்கள் என்று அரசு அலுவலர்களுக்கு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவுறுத்தினார். அரசுப் பணியில் புதிதாக சேரும்பணியாளர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே அடிப்படைப் பயிற்சி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த ஆண்டு 80% அதிகமாக பெய்துள்ளது; தமிழகம், புதுச்சேரியில் இனி மழை குறையும்: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் நாட்களில் மழை குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திரிபுராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 217 இடங்களை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3; திரிணமூல் காங்கிரஸுக்கு ஒரு இடம் கிடைத்தது

திரிபுராவில் அண்மையில் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 217 இடங்களை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. அதே சமயத்தில், பிரதான எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் ஓரிடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றிருக்கின்றன. பாஜக ஆளும் திரிபுராவில் 20 மாநகராட்சிகளில் மொத்தமுள்ள 334 பஞ்சாயத்து மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் 112 இடங்களில் போட்டி இல்லாமலேயே பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் வினாத்தாள் வெளியானதால் ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து

வினாத்தாள் வெளியானதால் உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது. உத்தரபிரதேசத்தில் நேற்று ஆசிரியர் தகுதித் தேர்வு நடப்பதாக இருந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 20 லட்சம் பேர் தேர்வு எழுத இருந்தனர். ஆனால், தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீஸார் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளில் மாநிலம் முழுவதும் 23 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வினாத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அரசுக்கு முறைப்படி போலீஸார் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூவம் ஆற்றில் பெருக்கெடுத்த மழை வெள்ளம்: நீரில் மூழ்கிய அடையாளம்பட்டு, வேலப்பன்சாவடி தரைப்பாலங்கள்

கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தால், அடையாளம்பட்டு, வேலப்பன்சாவடி தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால், அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்தும் கன மழையாக பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில், கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்