கணக்கில் வராத தங்கம் வைத்திருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வரி ஏய்ப்பையும், தங்கம் இறக்குமதியையும் குறைக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியர்கள் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். இதனால், இந்தியாவில் தங்கத்துக்கான தேவை எப்போதுமே அதிகமாகவே இருக்கும். அதேசமயம் வரி ஏய்ப்பு செய்பவர்களும், வருவாய் கணக்கை மறைப்பவர்களும் தங்கத்தை வாங்கி குவிப்பதும் வழக்கம். இந்நிலையில், கணக்கில் வராத தங்கத்தை வைத்திருந்தால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment