Skip to main content

“காத்துல பறந்துக்கிட்டு இருக்கேன்…” - ரஜினி பாராட்டால் மகிழும் துல்கர் பட இயக்குநர்!!

 நல்ல படங்கள் ஓடாமல் போவதும், கண்டுகொள்ளாமல் விடப்படுவதும் தமிழ் சினிமாவில் சகஜமாக நடக்கும் விசித்திரங்கள். மார்ச் மாதம் ஊரடங்கால் ஊரெல்லாம் தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. 2020 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்கள் வெளியான படங்களில் சில மட்டுமே அமோக வரவேற்பைப் பெற்றன.

அந்த வரிசையில் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படமும் வருகிறது. படத்தை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்துவிட்டுப் பாராட்டியிருப்பதுதான் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்குக் கிடைத்த கொரோனா காலத்துக் கொடையாக மாறியிருக்கிறது.

image

இதுபற்றி ட்விட்டரில் மிகுந்த உற்சாகத்துடன் எழுதியுள்ள பெரியசாமி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை அங்கீகரித்துள்ளதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாராட்டுவதால்தான் ரஜினிகாந்த் சந்திரனுக்கு மேலே இருக்கிறார் என்றும் நெகிழ்ந்துள்ளார்.  

என்ன சொன்னார் சூப்பர்ஸ்டார். “சூப்பர்ர்ர்… அற்புதம்… ஹாஹாஹா… உண்மையில் நான் பழைய. காலத்துக்குப் போய்விட்டேன். வாழ்த்துகள். பெரிய எதிர்காலம் உங்களுக்கு” என்று வாழ்த்தியுள்ளார்.

image

பாராட்டு மழையில் நனைந்த இயக்குநர் பெரியசாமி, “காலையில் இருந்து இது மட்டும்தான் கேட்டுக்கிட்டு இருக்கு. காத்துல பறந்துக்கிட்டே இருக்கேன். கடவுளே நன்றி. இந்த நாளுக்காக காத்திருந்த அனைவருக்கும் நன்றி” என்று ஆனந்தம் பொங்க  பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Comments

Popular posts from this blog

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்: நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 3 கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் புதிய சட்டத்தை முற்றிலும் தவறாக, அதில் உள்ள சாதக அம்சங்களுக்கு எதிர்ப்பதமாக நினைத்துக் கொண்டு போராடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. மதிப்பு உயரும். ரிஷபம்: உங்கள் பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேரளம்’ ஆகிறது கேரளா: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

கொச்சி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்