மருத்துவர்களின் தனிமைப்படுத்துதல் காலத்தை விடுப்பு நாட்களாக கருதாமல் சம்பளம் வழங்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கான சம்பளம் தொடர்பான வழிகாட்டுதல்களை ஜூன் 17 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் வெளியிட்டது. அதன்பிறகு ஜூன் 18 மத்திய அரசும் இது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. ஆனால் மஹாராஸ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, திரிபுரா போன்ற மாநிலங்கள் மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என்று சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
“மாநில அரசுகள் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவேண்டும். அவர்களின் தனிமைப்படுத்துதல் காலத்தை விடுப்புக்காலமாக கருதக்கூடாது என்றும், இதுபற்றி மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என்று நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Comments
Post a Comment