தமிழகத்தில் கரோனா தொற்றுபரவியதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் வணிக வளாகங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுகளை ஏற்று செப்டம்பர் 1-ம் தேதி முதல் வணிக வளாகங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
169 நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்படும் நிலையில்,வளாக நிர்வாகத்தினர் நேற்றே முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். வளாகங்கள் முழுவதும் கிருமிநாசினிதெளிக்கும் பணிகள், குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள், அடிக்கடி தொடும் இடங்களை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள், கடைகளில் உள்ள பொருட்களை தயார்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தேவையான தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்
களின் உடல் வெப்ப நிலைபரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தபின்னர் கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முக கவசம் அணிவதையும் நிர்வாகத்தினர் உறுதி செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment