Skip to main content

சிஎஸ்கே அணிக்கு சென்னையில் இருந்து பரவியதா கொரோனா ?

ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னையில் இருந்து கொரோனா பரவியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் எதையும் முதல் அணியாக தொடங்குவது சிஎஸ்கேவின் வழக்கம். கொரோனா அச்சத்தால் நடப்பு சீசனுக்காக எந்த அணியும் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ளாத நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சேப்பாக்கத்தில் 5 நாட்கள் பயிற்சியை மேற்கொண்டனர்.

image

பயிற்சியை முடித்துக்கொண்டு மிகுந்த உற்சாகத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பறந்த சிஎஸ்கேவுக்கு, சிக்கலாக வந்தது கொடிய கொரோனா. இதர அணிகள் எல்லாம் அமீரகத்தில் ஆயத்தப் பணிகளில் இறங்கிவிட்டன. ஆனால் சென்னை அணியில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஹோட்டல் அறைகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர் சிஎஸ்கே வீரர்கள்.

துபாய் புறப்படும் முன்பு, கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த சென்னையில் சிஎஸ்கே அணியினர் பயிற்சி செய்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சென்னையில் இருந்து சென்ற ஒரு சில நாளில் கொரோனா பாதிப்பு உறுதியானதால், இங்கு ஒன்றுகூடி பயிற்சி மேற்கொண்டபோது தொற்று ஏற்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

image

தற்போது செப்டம்பர் 6ம் தேதி வரை சென்னை அணி பயிற்சியை தொடங்குவது சாத்தியமற்றதாக உள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து திட்டமிட்டபடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐ.பி.எல் 2020ன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுவதற்கான வாய்ப்பு தென்படுகிறது. செப்டம்பர் 19ம் தேதி தோனியை காண ஆவலோடு காத்திருந்த ரசிகர்களின் கனவு நனவாகுமா?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Comments

Popular posts from this blog

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்: நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 3 கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் புதிய சட்டத்தை முற்றிலும் தவறாக, அதில் உள்ள சாதக அம்சங்களுக்கு எதிர்ப்பதமாக நினைத்துக் கொண்டு போராடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. மதிப்பு உயரும். ரிஷபம்: உங்கள் பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேரளம்’ ஆகிறது கேரளா: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

கொச்சி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்