Skip to main content

Posts

Showing posts from September, 2020

முதல்வர் வேட்பாளரை கட்சியின் தலைமை 4 சுவருக்குள் முடிவெடுக்கும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுக தலைமைக்கழகம் 4 சுவர்களுக்குள் முடிவெடுக்கும் என தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார். நாகப்பட்டினத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: துணை முதல்வர் பன்னீர்செல்வம் வீட்டில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்துகொள்வது என்பது சகஜமானது. ஒரு அமைச்சர் வீட்டில், அதிலும் மூத்த அமைச்சர் வீட்டில், அதைவிட முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீட்டில் நடக்கும் கூட்டங்களில் மற்ற அமைச்சர்கள் கலந்துகொள்வது வழக்கமானதுதான். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விலை மதிப்பற்ற மனித உயிர்களை காக்க தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்வோம்: மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

தன்னார்வ ரத்த தானத்தில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரையில் சிறப்பு ரயிலில் அனுமதிக்கப்படாததால் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அவதி

செங்கல்பட்டில் சிறப்பு ரயிலில் அனுமதிக்கப்படாததால் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் அவதிக்குஉள்ளாயினர். ‘கரோனா’ முழு ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தமிழக அரசு அனுமதியுடன் தலைமைச் செயலக ஊழியர்கள், மருத்துவத் துறை, நீதிமன்ற ஊழியர்கள், வணிகவரித் துறை, கல்வித்துறை உள்ளிட்ட அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள், ரயில்வே துறையின் சிறப்பு அனுமதியுடன் பயணித்து வந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஎட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்பு: இன்று முதல் மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பிஎட் சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று (அக்டோபர் 1) முதல் தொடங்குகிறது. இதுபற்றி பல்கலைக்கழகப் பதிவாளர் கே. ரத்னகுமார் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். 2021ம் ஆண்டுக்கான பிஎட் சிறப்புக்கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணையவழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு அக்டோபர் 1ம் தேதி முதல் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. பிஎட் சிறப்புக் கல்வி படிப்பு - பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்பிடிப்பு அல்லது பட்ட மேற்படிப்பைப் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி தேதி: அக்டோபர் 31 தொடர்புக்கு: 044 2430 6617, 98416 85515 விவரங்களுக்கு: www.tnou.ac.in Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News...

தமிழகத்தில் எங்கும் ரேஷன் பொருள் வாங்கிக் கொள்ளும் வகையில் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ இன்று அமல்: திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

மத்திய அரசின் ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் இணைந்த தமிழக அரசு, இதற்கான பணிகளை தொடங்கியது. குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ள நிலையில், விரல் ரேகை பதிவு மூலம் பொருட்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், முதலில் கடந்த ஆண்டு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மாவட்ட அளவில் இத்திட்டம் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தமிழகம்முழுவதும் எங்கு வேண்டுமானாலும் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில், ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டம் இன்று முதல் அமலாகிறது. இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 87 ஆயிரம் இடங்கள் உள்ளன. சில கல்லூரிகளில் கணிசமான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது. எனவே மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கான முயற்சிகளில் கல்லூரிகள் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில், மறு அறிவிப்பு வரும் வரையில் புதிய மாணவர் சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு ஆகஸ்ட் 31 ம் தேதி முதல் இணைய வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. அரசு கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். திரையரங்குகள், மதுபான பார்களை திறக்க புதுச்சேரி அரசு அனுமதி Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online...

"இயக்குநர் பாரதிராஜாவை நேரில் பார்த்தேன்" - இயக்குநர் சீனு ராமசாமியின் தியேட்டர் அனுபவம்

மக்களின் பொழுதுபோக்குப் பூங்காவாகத் திகழ்ந்த தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. அக்டோபர் 15 ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தியேட்டர் என்பது கனவுகளின் நினைவாக அனுபவங்களில் சேகரமாகியிருக்கும். தன்னுடைய பால்யகால தியேட்டர் அனுபவங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார். "என் சொந்த ஊரில் மணி இம்பாலா, லஷ்மி என இரண்டு தியேட்டர்கள் இருந்தன. நான் குழந்தையாக இருந்தபோது, 'மணி' தியேட்டருக்குச் செல்ல ஓர் ஓடையைக் கடக்கவேண்டியிருந்தது. எனக்கு சட்டை போட்டுவிட்டு தியேட்டருக்கு அழைத்துச் செல்வார்கள். கிராமங்களின் வழியாக நீண்ட தூரம் நடந்தால்தான் தியேட்டருக்குச் செல்லமுடியும். ஆனால் விரைவாகச் செல்லமுடியாது, ஓடையைக் கடக்கவேண்டியிருக்கும். அதன் முனையை அடைந்ததும் என்னை நிறுத்தி, உடைகளைக் கழற்றி தண்ணீரில் தூக்கிச் செல்வார்கள். கரையைக் கடந்ததும் மீண்டும் டிரெஸ் போட்டுவிடுவார்கள். தியேட்டருக்குச் செல்லும்போது போர்வைகளையும் எடுத்துச் செல்வோம். அந்த தியேட்டரில்தான் முதன்முதலாக இயக்குநர் பார...

திரையரங்குகள், மதுபான பார்களை திறக்க புதுச்சேரி அரசு அனுமதி

மதுபான பார்கள், சினிமா திரையரங்குகள் திறக்க அனுமதியளித்து புதுச்சேரி அரசு உத்தரவு, பொது முடக்கத்துடன் கூடிய தளர்வுகள் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் எனவும் அறிவிப்பு. புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 5ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் மாணவர்கள் சந்தேகம் இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வரலாம் அதே போன்று 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 12ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். விளையாட்டு வீரர்களுக்கான நீச்சல் குளம் அக்டோபர் 15ந்தேதி முதல் திறக்கலாம், சினிமா திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் அக்டோர்பர் 15ந்தேதி முதல் திறக்கலாம் என்று புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது. பொழுது போக்கு பூங்காக்கள், சுற்றுலாத்தளங்கள் அக்டோபர் 15 முதல் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகள் மற்றும் தனியார் அலுவலங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்கவும், உணவங்கள் மட்டும் இரவு 9 மணி வரை அமர்ந்து சாப்பிடவும் 10 மணிவரை பார்சல் விநியோகம் செய்யவும் அனுமத...

“ஒரே நாடு-ஒரே ரேசன்” திட்டத்தை இன்று தொடங்கிவைக்கிறார் தமிழக முதல்வர்..!

தமிழகத்தில் “ஒரே நாடு-ஒரே ரேசன்” திட்டத்தை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தால் என்னென்ன பயன்கள் என்று பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் “ அனைவருக்கும் நியாயவிலை பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அப்பகுதியில் இருக்கக்கூடிய ரேசன் கடைகளில் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு சென்று வசிப்போரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். யாருக்கும் ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்காது. ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் ரேசன் பொருட்கள் கையிருப்பு வைத்திருக்க கூடுதலாக 5 சதவீத பொருட்கள் வழங்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்...

பஞ்சாப் - மும்பை இன்று பலப்பரீட்சை: பலம் பலவீனம் என்ன?

இன்றைய போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ள பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளின் பலம் பலவீனம் என்ன? பெங்களூர் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய போட்டியில் சூப்பர் வரை சென்று தோல்வியைச் சந்தித்துள்ளது மும்பை அணி. அணியின் பேட்டிங்கில் இஷான் கிஷன் மற்றும் பொல்லார்டு ஃபார்மில் உள்ளது அணிக்கு பலம். ரோகித் சர்மா, டி காக், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முந்தைய போட்டியில் சறுக்கலைச் சந்தித்துள்ளது பலவீனமாக பார்க்கப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹார்திக் பாண்ட்யா மற்றும் க்ரூணல் பாண்ட்யா ஃபார்முக்கு வர திணறி வருகின்றனர். இளம் வீரர் ராகுல் சாஹர் சுழற்பந்து வீச்சின் மூலம் அணிக்கு வலு சேர்த்து வருகிறார். டிகாக் ரன் சேர்க்க தடுமாறி வரும் அதே சூழலில், விக்கெட் கீப்பர் OPTION ஆக‌ கிஷனும் உள்ளதால் ஓபனிங்கில் அதிரடி மன்னன் கிறிஸ்‌ லின்‌ களமிறக்கப்படுவார் என எதிர்பார்ப்படுகிறது. பஞ்சாப் அணியும் விளையாடிய 3 போட்டிகளில் இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ராகுல், மயங்க் அகர்வால் பலம் வாய்ந்த தூண்களாக உள்ளனர். மேக்ஸ்வெல் மற்றும் பூரன் கடைசியாக விளையாடிய போட்டியில் ஓரளவு சோபித்துள்ளது பக்...

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மதுரை, ஈரோடு, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதேபோல் மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், சிம்மக்கல், தமுக்கம், கே.கே.நகர், உள்ளிட்ட மதுரை நகரின் பல இடங்களிலும் மழை பெய்தது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 2வது நாளாக கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி, அரேப்பாளையம், ஆசனூர் மழைப்பகுதியில் பெய்த மழையால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை மூன்றாவது நாளாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சீர்காழி நகரின் பல பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. பழைய பேருந்து நிலையம்,மணிக்கூண்டு சாலை,திருமுல்லைவாசல் சாலை என முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, திருக்கட்...

ப்ளே ஆஃப் சுற்றில் சென்னை இல்லாததை நினைத்துப் பார்க்க முடியாது: ஷேன் வார்ன் நம்பிக்கை

நடப்பு ஐபிஎல் தொடரில் 3 போட்டிகள் ஆடி 2-ல் தோற்று முதல் போட்டியில் வென்ற ‘டாடீஸ் ஆர்மி’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சிஎஸ்கே அட்டவணையில் 8ம் இடத்தில் உள்ளது. நிகர ரன் விகிதமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. -0.84 என்று அதன் நிகர ரன் விகிதம் உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் 0.483 என்ற நிகர ரன்விகிதத்தில் டாப் இடத்தில் உள்ளது, டெல்லி கேப்பிடல்ஸுக்கும் சிஎஸ்கேவுக்கும் இடையே இப்போதைக்கு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

7-லிருந்து 2-வது இடம்: தினேஷ் கார்த்திக் தலைமை அபாரம்: ராஜஸ்தானுக்கு முதல் தோல்வியை அளித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சுப்மான் கில், மோர்கனின் பொறுப்பான பேட்டிங், கம்மின்ஸ், நாகர்கோட்டி, மாவி ஆகியோரின் பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு137 ரன்கள் சேர்த்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அத்வானி பங்களிப்பை மறக்க முடியாது: கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து

கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். இந்த நாள் மிகவும் புனிதமான நாளாக மாறியுள்ளது. ராம ஜென்ம பூமிக்காக போராடிய எல்லா போராளிகளுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தனிப்பட்ட முறையில் இந்த போராட்டத்தில் நான் தொடர்ந்து பங்கெடுத்துள்ளேன். அந்த நாட்கள் என் வாழ்நாளுக்கு உண்மையான அர்த்தம் அளித்தன. போராளிகளுக்கு ஒவ்வொரு வெற்றியும் புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த தீர்ப்பின் மூலம் உண்மை வென்றுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“ஒரே நாடு-ஒரே ரேசன்” திட்டத்தை இன்று தொடங்கிவைக்கிறார் தமிழக முதல்வர்..!

தமிழகத்தில் “ஒரே நாடு-ஒரே ரேசன்” திட்டத்தை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தால் என்னென்ன பயன்கள் என்று பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் “ அனைவருக்கும் நியாயவிலை பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தை தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் எந்த இடத்தில் வசித்தாலும், அப்பகுதியில் இருக்கக்கூடிய ரேசன் கடைகளில் பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம். ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்திற்கு சென்று வசிப்போரும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். யாருக்கும் ரேசன் பொருட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை இருக்காது. ஒவ்வொரு ரேசன் கடைகளிலும் ரேசன் பொருட்கள் கையிருப்பு வைத்திருக்க கூடுதலாக 5 சதவீத பொருட்கள் வழங்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்...

6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மதுரை, ஈரோடு, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில் 6 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதேபோல் மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், சிம்மக்கல், தமுக்கம், கே.கே.நகர், உள்ளிட்ட மதுரை நகரின் பல இடங்களிலும் மழை பெய்தது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 2வது நாளாக கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி, அரேப்பாளையம், ஆசனூர் மழைப்பகுதியில் பெய்த மழையால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முதல் தரங்கம்பாடி வரை மூன்றாவது நாளாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சீர்காழி நகரின் பல பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. பழைய பேருந்து நிலையம்,மணிக்கூண்டு சாலை,திருமுல்லைவாசல் சாலை என முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, திருக்கட்...

சமையல் எண்ணெய் சேமிப்பு நிலையம்; உரிய அனுமதி பெறாததால் அகற்ற வேண்டும்: ரூ.25 லட்சம் அபராதம் விதித்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த எம்.ஆர்.தியாகராஜன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2016-ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், “திருவொற்றியூரில் இயங்கி வரும் கேடிவி ஆயில் மில், தண்டையார்பேட்டையில் இயங்கி வரும் கேடிவி ஹெல்த் ஃபுட் ஆகிய சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி நிறுவப்பட்டுள்ளன. எனவே இந்நிறுவனங்களை மூட உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இதை விசாரித்த அமர்வு, இந்நிறுவனங்களை மூட உத்தரவிட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியதற்காக கேடிவி ஆயில் மில் நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம்அபராதம் விதித்தது. அதன் பின்னர் அந்நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று இயங்கத்தொடங்கின. அதை எதிர்த்து மனுதாரர் பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது ரயில் பாதை பணி: 6 மாதங்களில் முடிக்கப்படும்

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 3-வது புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த 6 மாதங்களில் முடிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ தொலைவுக்கு 3-வது பாதை அமைக்கும் பணிகடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கான மொத்த திட்ட மதிப்பு ரூ.256 கோடி. முதல் கட்டமாக கூடுவாஞ்சேரி - சிங்கபெருமாள் கோயில் இடையே 11 கி.மீதொலைவுக்கு பணிகள் நிறைவு பெற்று, ரயில்கள் இயக்கி சோதனைநடத்தப்பட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஒரே பரிசோதனையில் இதய நோய்களை கண்டறியும் நவீன கருவி அறிமுகம்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதய நோய்களை ஒரே பரிசோதனையில் கண்டறியும் அதிநவீனசி.டி.ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதய நோய்களை ஒரே பரிசோதனையில் கண்டறிய அதிநவீன ‘அக்விலியன் ஒன் பிரிசம் 640 ஸ்லைஸ் சி.டி.ஸ்கேனர்’ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிநவீன கருவியின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இன்று சர்வதேச முதியோர் தினம்: மூத்த குடிமக்கள் நலன் காப்பது நம் கடமை முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்

மூத்த குடிமக்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, நலனைக் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை என்று சர்வதேச முதியோர் தினத்தில் முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லடாக் எல்லையில் நிலைமை முன்பு போல் இல்லை: சீனாவை தெறிக்கவிடுகிறது இந்திய ராணுவம்

கடந்த 2004-ம் ஆண்டில் சீன எல்லை விவகாரம் தொடர்பாக அப்போதைய ராணுவ துணை தளபதி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அன்றைய மத்திய உள்துறை செயலாளர், "எல்லையில் ஏன் சாலை வசதிகளை மேம்படுத்தவில்லை" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அளிக்கப்பட்ட பதில் உள்துறை செயலாளரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. "எல்லையில் சாலைகளை அமைத்தால் சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊருடுவ வசதியாக அமைந்துவிடும்" என்று பதில் அளிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த உள்துறை செயலாளர், "அப்படியென்றால் டெல்லியில் கூட சாலை அமைக்க முடியாதே" என்று கண்டித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம் : பிறமொழி பேசுபவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பால்ய நண்பர்களால் எதிர்பாராத தொல்லைகள் ஏற்படக் கூடும். ரிஷபம்: எதிலும் வெற்றி கிட்டும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும் புது வாகனம் வாங்குவீர்கள். வீடு வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

01-10-2020 வியாழக்கிழமை from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உயிருடன் இருப்பவர் இறந்ததாக, வேறு உடல் ஒப்படைப்பு: இடுகாட்டுக்கு வந்த பிறகு முகத்தைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர் இறந்துவிட்டதாகக் கூறி, அவரது உறவினர்களிடம் வேறு ஒருவரின் உடலை ஒப்படைத்துள்ளனர். இடுகாட்டில் முகத்தைப் பார்த்துவிட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன்(55). சுய நினைவின்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். உடல் சற்று முன்னேற்றமடைந்த நிலையில், மற்றொரு வார்டுக்கு மாற்றப்பட்டார். கரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 பேருக்கு அபராதம்

இந்தோனேசியாவைச் சேர்ந்த 11 மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தோனேசியாவைச் சேர்ந்த11 பேர் சேலத்தில் மத பிரசங்கம்செய்ய கடந்த சில மாதங்களுக்குமுன்னர் வந்திருந்தனர். அவர்கள்மற்றும் சென்னையைச் சேர்ந்தஒருவரும் சேலம் கிச்சிப்பாளையம், செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு சென்றுமத பிரசங்கத்தில் ஈடுபட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வரும் தேர்தலுக்குள் திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: திருவாரூரில் டி.ஆர்.பாலு எம்.பி. கருத்து

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது என்று அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார். திமுக பொருளாளரான பின்னர் தனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு நேற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, காட்டூரில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திலும், பின்னர் நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி பிறந்த இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா, மழையால் கீழடி 6-ம் கட்ட அகழாய்வை முடிப்பதில் சிக்கல்

மத்திய அரசின் அனுமதி இன்றுடன் நிறைவடையும் நிலையில் கரோனா, மழை போன்ற காரணங்களால் கீழடி 6-ம் கட்ட அகழாய்வுப் பணியை முழுமையாக முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் பிப்.19 முதல் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இதுவரை 4 இடங்களிலும் 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. கீழடியில் விலங்கின எழும்புகள், கட்டிடச் சுவர்கள், மண்பானைகள், கழிவுநீர் கால்வாய்கள், இரும்பு உலைகள், 11 அடுக்கு உறைகிணறு ஆகியன கண்டெடுக்கப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரை நூற்றாண்டு காலம் ‘தி இந்து’ குழுமத்தில் பணியாற்றிய கே.நாராயணன் மறைவு

இந்து குழுமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த கே.நாராயணன்(88) (எ) கே.என். கோவையில் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். கே.நாராயணன், `தி இந்து' ஆங்கிலப் பத்திரிகையில் மிக நீண்டகாலம் செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் படித்த இவர், 1955-ல் இந்து பத்திரிகையில் கஸ்தூரிரங்கன் ஸ்காலராகச் சேர்ந்தார். 1956-ல் உதவி ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்ட இவர், 1978-ல் செய்தி ஆசிரியர் நிலைக்கு உயர்ந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அக்.2-ம் தேதி டிஜிட்டல் முறையில் 1,500 கிராமங்களில் பேசுகிறார் கமல்

கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் நடந்த கிராமசபை கூட்டங்களில் பங்கேற்று வந்தார். இந்நிலையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்படுவது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, 1,500 கிராமங்களில் டிஜிட்டல் முறையில் உரையாற்ற கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக கட்சியினருக்கு மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் ஆர்.மகேந்திரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பண மதிப்பிழப்பின்போது ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்; சேகர் ரெட்டி மீதான வழக்கு முடித்துவைப்பு: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரூ.2000 நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தொழிலதிபர் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. கடந்த 2016 நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்தது. அப்போது, தொழிலதிபர் சேகர்ரெட்டியின் வீட்டில் ரூ.2000 நோட்டுகள் அதிக அளவில் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக சேகர் ரெட்டி மற்றும் அவரதுநண்பர்கள் 6 பேர் மீது சிபிஐ போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.12,250 கோடி வழங்கக் கோரி வழக்கு

ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.12,250 கோடியை தமிழக அரசுக்கு உடனே வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஜி.சுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்