Skip to main content

"இயக்குநர் பாரதிராஜாவை நேரில் பார்த்தேன்" - இயக்குநர் சீனு ராமசாமியின் தியேட்டர் அனுபவம்

மக்களின் பொழுதுபோக்குப் பூங்காவாகத் திகழ்ந்த தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. அக்டோபர் 15 ம் தேதி முதல் தியேட்டர்களைத் திறக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் தியேட்டர் என்பது கனவுகளின் நினைவாக அனுபவங்களில் சேகரமாகியிருக்கும். தன்னுடைய பால்யகால தியேட்டர் அனுபவங்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்துள்ளார்.

"என் சொந்த ஊரில் மணி இம்பாலா, லஷ்மி என இரண்டு தியேட்டர்கள் இருந்தன. நான் குழந்தையாக இருந்தபோது, 'மணி' தியேட்டருக்குச் செல்ல ஓர் ஓடையைக் கடக்கவேண்டியிருந்தது. எனக்கு சட்டை போட்டுவிட்டு தியேட்டருக்கு அழைத்துச் செல்வார்கள். கிராமங்களின் வழியாக நீண்ட தூரம் நடந்தால்தான் தியேட்டருக்குச் செல்லமுடியும். ஆனால் விரைவாகச் செல்லமுடியாது, ஓடையைக் கடக்கவேண்டியிருக்கும்.

image

அதன் முனையை அடைந்ததும் என்னை நிறுத்தி, உடைகளைக் கழற்றி தண்ணீரில் தூக்கிச் செல்வார்கள். கரையைக் கடந்ததும் மீண்டும் டிரெஸ் போட்டுவிடுவார்கள். தியேட்டருக்குச் செல்லும்போது போர்வைகளையும் எடுத்துச் செல்வோம். அந்த தியேட்டரில்தான் முதன்முதலாக இயக்குநர் பாரதிராஜாவை நேரில் பார்த்தேன். புதுமைப் பெண் படத்தை புரோமோட் செய்வதற்காக வந்திருந்தார். தியேட்டருக்குள் ரேவதியுடன் அவர் நடந்துசென்றார். பெரும் கூட்டத்திற்கு இடையில் அவர்கள் இருவரையும் பார்த்தேன்.

image

(புதுமைப் பெண் படத்தில் ரேவதி )

இன்று சினிமா தொழில்நுட்பத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்துவிட்டன. ஆனால் பெரிய திரைக்கும் பார்வையாளர்களுக்குமான உறவு இன்னும் மாறவில்லை. சமூக அனுபவம் என்பது மனிதர்களின் அடிப்படை உள்ளுணர்வாக இருந்துவருகிறது. எத்தனையோ தியேட்டர்கள் மூடப்பட்டாலும், தியேட்டர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்" என்று நெகிழ்ந்துள்ளார்.

பஞ்சாப் - மும்பை இன்று பலப்பரீட்சை: பலம் பலவீனம் என்ன?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Comments

Popular posts from this blog

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்: நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 3 கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் புதிய சட்டத்தை முற்றிலும் தவறாக, அதில் உள்ள சாதக அம்சங்களுக்கு எதிர்ப்பதமாக நினைத்துக் கொண்டு போராடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. மதிப்பு உயரும். ரிஷபம்: உங்கள் பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேரளம்’ ஆகிறது கேரளா: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

கொச்சி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்