Skip to main content

RCB VS SRH : வாழ்வா? சாவா? ஆட்டத்தில் வெற்றி பெற்றது ஹைதராபாத்

ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 52வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின. 

image

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் பவுலிங் தேர்வு செய்தார்.  

இதையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது.

தேவ்தத் படிக்கலும், ஜோஷ் பிலிப்பும் பெங்களூரு அணிக்காக இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். 

 image

படிக்கல் 8 பந்துகளை சந்தித்த நிலையில் 5 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் ஷர்மா பந்து வீச்சில் கிளீன் போல்டானார்.

தொடர்ந்து களம் இறங்கிய கோலியும் 7 ரன்களில் வெளியேற பவர் பிளே ஓவர் முடிவில் 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆர்.சி.பி.

டிவில்லியர்ஸும், ஜோஷ் பிலிப்பும் இன்னிங்க்ஸை ஸ்டெடி செய்ய முயன்றனர். இருப்பினும் அந்த முயற்சியில் தோல்வியை தழுவினர்.

டிவில்லியர்ஸ் 24 ரன்களிலும், பிலிப் 32 ரன்களிலும் வெளியேறினர்.

வாஷிங்க்டன் சுந்தர் தன் பங்கிற்கு 21 ரன்களை எடுத்தார். 

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்களை எடுத்தது பெங்களூரு. 

 image

ஹைதராபாத் அணிக்காக தமிழகத்தை சேர்ந்த நடராஜன் பந்து வீச்சில் மிரட்டினார். 4 ஓவர்கள் வீசி வெறும் 11 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர்.

தொடர்ந்து ஹைதராபாத் அணி 121 ரன்களை சேஸ் செய்தது.

வார்னரும், சாஹாவும் ஓப்பனர்களாக களம் இறங்கினர்.

image

வாஷிங்க்டன் சுந்தரின் பந்து வீச்சில் இரண்டாவது ஓவரிலேயே வார்னர் எட்டு ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 

தொடர்ந்து இறங்கிய மணீஷ் பாண்டே, சாஹாவோடு இணைந்து 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். 

19 பந்துகளில் 26 ரன்களை சேர்த்த மணீஷ் பாண்டே சஹாலின் சுழலில் விக்கெட்டை இழந்தார். 

சாஹா 32 பந்துகளில் 39 ரன்களை குவித்தார். 

image

கடைசியாக களம் இறங்கிய ஜேசன் ஹோல்டர் 10 பந்துகளில் 26 ரன்களை குவித்தார்.

14.1 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 121 ரன்களை குவித்து 35 பந்துகள் எஞ்சிய நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Comments

Popular posts from this blog

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்: நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 3 கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் புதிய சட்டத்தை முற்றிலும் தவறாக, அதில் உள்ள சாதக அம்சங்களுக்கு எதிர்ப்பதமாக நினைத்துக் கொண்டு போராடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. மதிப்பு உயரும். ரிஷபம்: உங்கள் பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேரளம்’ ஆகிறது கேரளா: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

கொச்சி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்