400 கனஅடி நீர் வீணாகக் கடலில் கலப்பு: செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளை உடனடியாக சீரமைக்க துரைமுருகன் வலியுறுத்தல்
செம்பரம்பாக்கம் ஏரி நீர் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் மதகுகளை சரி செய்ய வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: ‘நிவர்' புயலையொட்டி செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீரை வெளியேற்றத் திறந்துவிடப்பட்ட 2 மற்றும் 3-வது மதகுகளை மூடமுடியாமல் இப்போது 400 கனஅடி நீர் வீணாக வெளியே போய்க் கொண்டிருக்கிறது என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment