சொத்துக்குவிப்பு வழக்கில் தனது மகனுடன் கைது செய்யப்பட்ட ஐஎப்எஸ் (இந்திய வனப் பணி) அதிகாரி அபே காந்த் பதக்கை ஒடிசா அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஒடிசா அரசில் கூடுதல் முதன்மைதலைமை வனப் பாதுகாவலர் (ஏபிசிசிஎப்) ஆக இருந்தவர் அபேகாந்த் பதக். 1987-ம் ஆண்டு பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரி ஆவார். இந்நிலையில் சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக அபே காந்த் பதக்மற்றும் அவருக்கு நெருக்கமானவர் களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment