Skip to main content

Posts

Showing posts from March, 2021

தியாகராயநகர் தொகுதியில் அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி வேட்பாளர்கள் பிரச்சாரம்

தியாகராயநகர் சட்டப்பேரவை தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராயநகர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவின் சத்தியநாராயணன், திமுகவின் கருணாநிதி, அமமுகவின் பரணீஸ்வரன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பழ.கருப்பையா, நாம் தமிழர் கட்சியின் சிவசங்கரி உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மதுரவாயலை கைப்பற்ற திமுக - அதிமுக கடும் போட்டி: மநீம, நாம் தமிழர் கட்சிகளும் தீவிர பிரச்சாரம்

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சட்டப்பேரவை தொகுதி, கடந்த 2011-ம் ஆண்டு மறுசீரமைப்பின்போது புதிதாக உருவாக்கப்பட்டது. இதுவரை நடந்து முடிந்த 2 தேர்தல்களிலும் அதிமுக கூட்டணியே இங்கு வெற்றி பெற்றுள்ளது. 2011-ல் நடந்த முதல் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பீம்ராவ் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் பெஞ்சமின் வெற்றி பெற்றார். சாலைகள், பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். நீண்ட காலமாக முடங்கியுள்ள மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பண தகவலை கட்சியினரே தெரிவிப்பார்கள்: வருமானவரித் துறை முன்னாள் அதிகாரி தகவல்

அரசியல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் கறுப்பு பணம் குறித்ததகவல்களை கட்சி தொண்டர்களேதெரிவிப்பார்கள் என்று வருமான வரித் துறை முன்னாள் அதிகாரி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல்வரும் 6-ம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுப்பதைதடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்து இயக்கம்: சொந்த ஊரில் வாக்களிக்க நடவடிக்கை

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சட்டப்பேரவை தேர்தலில் 100சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இன்றுமுதல் 5-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் ஏப்.4-ம் தேதி வரை 21 மாவட்டங்களில் 9 டிகிரி வரை வெப்பம் உயரும்: ஒருசில இடங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்.1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட21 மாவட்டங்களில், வழக்கத்தைவிட 9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.6-ம் தேதி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை: நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையர் உத்தரவு

சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்.6-ம் தேதிதொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையர் மா.வள்ளலார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டசெய்திக்குறிப்பு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்தை சீரழிக்கும் மதுக்கடைகள் முற்றிலுமாக தடை செய்யப்படும்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

தளி தொகுதி பாஜக வேட்பாளர் நாகேஷ்குமார் மற்றும் ஓசூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கெலமங்கலம் அருகே நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாஜக மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதுகாப்புத் துறைஅமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: நம் இந்திய மக்களுக்கு தடுப்பூசி வழங்கி கரோனா வைரஸ் நோயிலிருந்து பாதுகாத்தது மட்டுமன்றி உலக மக்களுக்கும் கரோனா தடுப்பூசி வழங்கி பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். மேலும் வெண்டிலேட்டர் மற்றும்பி.பி.கிட் ஆகியவை தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க, இந்திய அளவில் மற்றும் உலகளவில் அவற்றை வழங்கி உலகையே காப்பாற்றிய பெரிய தலைவராக மோடி உயர்ந்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குமரியில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரம்: ஏப்ரல் 3-ம் தேதி பிரியங்கா வருகை

கன்னியாகுமரியில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நாளை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மறுநாள் 3-ம் தேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுடன், மக்களவை இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதனால், தமிழக தலைவர்கள் மட்டுமின்றி, தேசிய தலைவர்கள் கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஏற்கெனவே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குமரியில் பிரச்சாரம் செய்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஏப்.4-ம் தேதி அவகாசம் முடியும் நாளில் கூடுதலாக 2 மணி நேரம் பிரச்சாரத்துக்கு அனுமதி: இரவு 7 வரை வாக்கு சேகரிக்கலாம் என சத்யபிரத சாஹு தகவல்

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கடைசி நாள் பிரச்சாரத்துக்கு கூடுதலாக 2 மணி நேரம் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது மாலை 5 மணிக்கு பதிலாக இரவு 7 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர் உடலை தோண்டி எடுத்து கல்லறையில் அடக்கம் செய்யலாம்: சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலஸின் உடலை கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி கிறிஸ்தவ முறைப்படி கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்றபோது அப்பகுதி மக்கள் மறித்து, தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அவரது உடலை அண்ணாநகர் வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்தனர். இதற்கு அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக ஏராளமானோர் மீது டி.பி.சத்திரம், அண்ணா நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, வழக்கு நிலுவையில் உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல்வர் பழனிசாமிக்கு 10 கேள்விகள்; மோடி அரசின் கைப்பாவையாக அதிமுக அரசு செயல்படுகிறது: காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு

முதல்வர் பழனிசாமியிடம் 10 கேள்விகளை எழுப்பியுள்ள காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, மோடி அரசின் கைப்பாவையாக அதிமுகஅரசு செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை செயலாளர் ஹர்ஷவர்தன்ஷ்யாம் தயாரித்த ‘அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்ட 10 ஆண்டுகள்' என்ற பிரச்சார கையேட்டை ரன்தீப் சிங் சுர்ஜிவாலா வெளியிட, தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ. கோபண்ணா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பழைய ஓய்வூதிய திட்டம், பதவி உயர்வு உட்பட அரசு ஊழியரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்குறுதி

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையையே அமல்படுத்துவது, போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசுஊழியர்கள் ஆக்குவது உள்ளிட்டஅனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மேற்கு வங்கம், அசாமில் 69 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட தேர்தல்: நந்திகிராமில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டி

தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அசாமில் 3 கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாவும் தேர்தல் அறி விக்கப்பட்டது. இதில் அசாம், மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி நடை பெற்றது. அசாமில் 47 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள் என மொத்தம் 77 தொகுதிகள் முதல்கட்ட தேர்தலை சந்தித்தன. இவ்விரு மாநிலங்களிலும் இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அசாமில் 39 தொகுதிகளும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் இன்று தேர்தலை சந்திக்கின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசியலில் எனது பலம், தந்திரம் இரண்டும் நேர்மைதான்: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து

அரசியலில் எனது பலம் மற்றும் தந்திரம் இரண்டும் நேர்மைதான் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். இதுகுறித்து கோவையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

10.5% வன்னியர் இடஒதுக்கீடு ஒரு நாடகம்: போடி பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் தேர்தலுக்காக நாடகம் நடத்துகின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். தேனி மாவட்டம் போடியில் திமுக வேட்பாளர்கள் தங்க தமிழ்ச்செல்வன் (போடி), என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), மகாராஜன் (ஆண்டிபட்டி), கேஎஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோரை ஆதரித்து ஸ்டாலின் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று அரவக்குறிச்சியில் பிரச்சாரம்

பிரதமர் மோடியைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக புதுச்சேரிக்கு இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிறார். தொடர்ந்து அவர் திருக்கோவிலூர் பிரச்சாரப் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார். புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த வாரங்களில் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் பங்கேற்றனர். பல மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பாஜக போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு முஸ்லிம் பெண் பிரச்சாரம்: ‘15 ஆண்டுக்கு முன் சட்டம் வந்திருந்தால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டேன்’

முத்தலாக் தடை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக கும்பகோணத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே உள்ள சர்ச் சாலையைச் சேர்ந்தவர் பாத்திமுத்து(51). இவர், மத்திய அரசின் முத்தலாக் தடை சட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கட்சிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முகக் கவசங்களுடன் தொகுதிகளில் வலம் வரும் தொண்டர்கள்

கட்சிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட முகக் கவசங்களை அணிந்து தொகுதிகளில் தொண்டர்கள் வலம் வருகின்றனர். தமிழகத்தில் பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற ஒரு சில தினங்கள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்த கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிமுக – திமுகவுக்கு இடையே மட்டுமே போட்டி: ராயபுரத்தில் எடுபடாத பிற கட்சிகளின் பிரசாரம்

சென்னை ராயபுரம் தொகுதிக்கு இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக 7 முறையும், அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிக வெற்றிகளின் அடிப்படையில் பார்த்தால் ராயபுரம் தொகுதியில் திமுகவுக்கு செல்வாக்கு இருப்பதுபோல் தெரிகிறது. திமுக தொடங்கப்பட்ட இடம் ராயபுரம். திமுகவின் முதல் தலைமை அலுவலகமும் ராயபுரத்தில்தான் உள்ளது. ஆனால், 2001-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடந்த 4 சட்டப்பேரவை தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. அதுவும், தற்போதைய மீன்வளத்துறை அமைச்சரான டி.ஜெயக்குமாரே 4 முறையும் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளார். 1996-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஜெயக்குமார், திமுக வேட்பாளர் மதிவாணனிடம் தோற்று விட்டார். தற்போது மீண்டும் திமுக வேட்பாளர் மூர்த்தியை எதிர்த்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தேர்தலால் கிடைக்கும் வருவாயால் டிரம்ஸ் இசை குழுவினர் மகிழ்ச்சி

கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தேர்தலால் நல்ல வருவாய் கிடைப்பதாக டிரம்ஸ் இசைக் குழுவினர் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். சென்னையில் கோயில் திருவிழாக்கள், கட்சி விழாக்கள், இல்ல விழாக்கள், இறுதி ஊர்வலம் என எதுவாக இருந்தாலும் முதலில் வந்து நிர்பவர்கள் டிரம்ஸ் இசைக் குழுவினர். இவர்கள் வந்த பிறகு தான் விழாவே களைகட்டுகிறது. கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் டிரம்ஸ் இசைக் குழுவினரின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தளர்வுகள் வழங்கப்பட்டாலும், 2020-க்கு முன்பு இருந்த வாய்ப்புகள் இப்போது இல்லை. இந்நிலையில் வாராது வந்த மாமணியாக தேர்தல் வந்தது. அதன் மூலம் நல்ல வருவாய் கிடைப்பதாக டிரம்ஸ் கலைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தண்டோரா போட்டு வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர்

சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதியில் வீதி, வீதியாக தண்டோரா போட்டு வாக்குறுதிகளை கூறி பாமக வேட்பாளர் கஸ்ஸாலி பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கிடையே சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி போட்டியிடுகிறார். இவர் தொகுதியில் மார்ச் 22-ம் தேதி முதல் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு: செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் உறுதி

படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வாக்குறுதி அளித்தார். செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செங்கல்பட்டு சுற்று வட்டார கிராமப்புற பகுதியில் பல்வேறு இடங்களில் வாக்காளர்களை சந்தித்த அவர், நகரில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திமுக ஆட்சி அமைந்தால் யாரும் தொழில் செய்ய முடியாது: தருமபுரி பிரச்சாரத்தில் ராமதாஸ் எச்சரிக்கை

திமுக ஆட்சி அமைந்தால் யாரும் தொழில் செய்யவே முடியாது என தருமபுரி தேர்தல் பிரச்சாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் அதிமுககூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அரூர் தொகுதி சம்பத்குமார் (அதிமுக), பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கோவிந்தசாமி (அதிமுக), தருமபுரி வெங்கடேஸ்வரன் (பாமக), பென்னாகரம் தொகுதி வேட்பாளர் ஜி.கே.மணி (பாமக), பாலக்கோடு தொகுதிகே.பி.அன்பழகன் (அதிமுக) ஆகியோரை ஆதரித்து, தருமபுரி 4 சாலை சந்திப்பு, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய இடங்களில் வாகனத்தில் இருந்தபடி பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதிகார துஷ்பிரயோகம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.ராஜா குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து கெலமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா பேசியதாவது: மோடி தலைமையிலான மத்திய அரசின் வீழ்ச்சிக்கு தமிழக தேர்தல் ஒரு தொடக்கமாக இருக்கப் போகிறது. அதனால்தான் பாஜக தலைவர்களான மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் பதற்றத்துக்கும், விரக்திக்கும் ஆளாகியிருப்பதால் தமிழகத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய வருகின்றனர். பாஜக போட்டியிடும் தளி தொகுதி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பாஜக அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. பாஜகவினர் பண பலத்தை வைத்துக் கொண்டு தேர்தல் முறையை தங்களுக்கு சாதகமாக்க பார்க்கிறார்கள். ஆனால் மக்கள் இந்த அதிகார பலத்தை, பணபலத்தை முறியடித்துஜனநாயகத்துக்கு வெற்றியைத் தேடித் தர இன்று விழிப்போடு இருக்கிறார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குன்னம் காவல்நிலையத்தில் ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் குன்னம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் கடந்த 26-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஆ.ராசா பேசும்போது, முதல்வர்பழனிசாமியை தரக்குறைவாக பேசியதாக குன்னம் காவல் நிலையத்தில் குன்னம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் புகார் அளித்தார். இதையடுத்து குன்னம் போலீஸார், ஆ.ராசா மீது கலகம் செய்ய தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதிமீறல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அதிமுக ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும்: மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங் நம்பிக்கை

அதிமுக ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் கூறினார். விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜி.பாண்டுரங்கனை ஆதரித்து வாக்குச் சேகரிக்க வந்த மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் செய்தியாளர்களை சந்தித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும் தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தரவேண்டும்: அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு

தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும் முக்கிய தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்காக தேசியத் தலைவர்கள் தமிழகம் வந்தவண்ணம் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்தனர். 2 நாட்கள் முன்பு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சேலத்தில் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லடாக்கில் எல்லையில் ராணுவ வீரர்கள் நடனமாடும் வீடியோ வைரல்

லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து சில முக்கியப் பகுதிகளை கைப்பற்ற முயற்சித்தனர். இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பதற்றம் உருவானது. இதனிடையே, அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஜூன் மாதம் இந்திய – சீன ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கணக்கில் காட்டாத ரூ.25 கோடி பறிமுதல்; முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, குடும்பத்தினருக்கு சம்மன்: வருமான வரித் துறை நடவடிக்கை

எ.வ.வேலு மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.25 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சரு மான எ.வ.வேலு வீட்டில் வருமான வரித் துறையினர் கடந்த 25-ம் தேதி சோதனை நடத்தினர். அவரது வீடு, கல்லூரி, அறக்கட்டளை, குடும்ப உறுப்பினர்களின் வீடுகள் உட்பட 18 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுவர் விளம்பரத்தில் மோடி பெயர் அழிப்பா?- பாஜக மாவட்ட தலைவர் மறுப்பு

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை சுவர் விளம்பரத்தில் மோடி பெயர் அழிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் கே.சிவசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக எழுதப்பட்ட சுவர் விளம்பரம் ஒன்றில், தாமரை சின்னம் வரையப்பட்டு, அதன் அருகில் இதயதெய்வம் அம்மா அவர்களின் நல்லாசி பெற்ற, பிரதமர் மோடி அவர்களின் ஆசி பெற்ற கே.அண்ணாமலைக்கு தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர் என உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘சாமி சத்தியமா எங்களுக்குத்தான் வாக்களிக்கணும்'- கிராமத்தினரிடம் உறுதிமொழி வாங்கிய அமைச்சர் ஜி.பாஸ்கரன்

‘‘உங்க கிராமத்துக்கு நிறைய செஞ்சிருக்கேன். இங்குள்ள மந்தகாளை சாமி சத்தியமா, எங்களுக்குத்தான் வாக்களிக்கணும் என அமைச்சர் ஜி. பாஸ்கரன் பேசினார். சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதனை ஆதரித்து கண்டாங்கிப்பட்டியில் பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘சத்ரியன்’ பெயரை கையில் எடுத்து சர்ச்சையை கிளப்புகிறாரா பிரேமலதா!

விருத்தாசலத்தில் அமமுக - தேமுதிக கூட்டணி சார்பில் களம் காண்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. கடந்த 10 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், பட்டியலினத்தைச் சேர்ந்தோர் வசிக்கும் பகுதிகளில், பிரச்சாரத்திற்குச் செல்லும் போது அங்குள்ள சிலர், தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்படி கேட்க, ‘பிரபாகரன்’, ‘விஜய்‘, ‘சத்ரியன்’ என பிரேமலதா பெயர் சூட்டி வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் புதுகூரைப்பேட்டை கிராமத்தை அடுத்த குப்பநத்தம் குடியிருப்புப் பகுதியில் ஒரு குழந்தைக்கும், தே.புடையூர் கிராமப் குடியிருப்புப் பகுதியில் ஒரு குழந்தைக்கும் ‘சத்ரியன்’ என பெயர் சூட்டி மகிழ்ந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

களையிழந்த தேர்தல் திருவிழா: வெறிச்சோடிக் காணப்படும் கிராமங்கள்

கடந்த காலத்தைப் போல இல்லாமல் தற்போது தேர்தல் களம் களையிழந்து காணப்படுகிறது. கிராமம், நகரங்களில் கட்சிக் கொடிகள், தோரணம், வீட்டுச் சுவரில் வண்ண வண்ண சின்னங்கள், கொடிகளுடன் வலம் வரும் சிறுவர், சிறுமியர், எப்போதும் கேட்கும் வாகன ஒலிபெருக்கி பிரச்சாரம் என எதையும் காண முடியவில்லை. தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. கொளுத்தும் வெயிலிலும் தேசிய, மாநிலத் தலைவர்கள், வேட்பாளர்களின் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இருந்தாலும் கடந்த தேர்தல்களைப் போல மக்களால் தேர்தல் திருவிழா கொண்டாடப்படவில்லை என்றே கூறலாம். முன்பெல்லாம் சட்டப்பேரவைத் தேர்தல் என்றால் குக்கிராம், கிராமம், நகரம், பெருநகரம் என எல்லா இடங்களிலும் கட்சிகளின் கொடிகள், தோரணம் இருப்பதைக் காண முடிந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னை, வேலூர் உட்பட 12 நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு

தமிழகத்தில் 12 நகரங்களில் நேற்று100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வடமேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் வெப்பம் அதிகரிக்கும்என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இந்நிலையில் நேற்றே 12 நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஏப்.6-க்கு பிறகு கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தகவல்

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏப்.6-ம் தேதிக்குப் பிறகு நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 895 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 4 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல் தலைமுறை வாக்காளர்களுக்காக ‘ஜனநாயகத் திருவிழா’ ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்.6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கலாம். அந்த வகையில், லட்சக்கணக்கான முதல் தலைமுறை வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். இந்த புதிய வாக்காளர்களுக்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், சங்கர் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்து நடத்தும் ‘ஜனநாயகத் திருவிழா’ எனும் ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (மார்ச் 31) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ஐஏஎஸ், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். முதல் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், 100 சதவீத வாக்குப்பதிவைச் செலுத்த வலியுறுத்தியும், கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திரிணமூல் காங்கிரஸ், பாஜக சதிகாரர்கள்: பட்டாச்சார்யா குற்றச்சாட்டு

மேற்குவங்க மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா நேற்று வெளியிட்ட ஆடி யோவில் கூறியிருப்பதாவது: கடந்த 10 ஆண்டு திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் ஓர் ஆலை கூட தொடங்கப்படவில்லை. மேற்குவங்க இளைஞர் கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை உள்ளது. கல்வி, சுகாதாரத் துறை சீர்குலைந்துள்ளது. ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டு, சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மம்தாவின் தோல்வி அச்சத்தைக் கொடுக்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி களம் காண்கிறார். திரிணமூல் காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தவரான சுவேந்து அதிகாரிக்கு, நந்திகிராம் தொகுதியில் பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு உள்ளது. இதனால், இந்தத்தேர்தலானது மம்தாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் நாளை நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் நந்திகிராம் தொகுதியும் இடம்பெறுகிறது. இதனை முன்னிட்டு, அங்கு பாஜக சார்பில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘குருவின் பிள்ளைகள் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வோம்’ - அன்புமணி ராமதாஸ்

பண்ருட்டியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சொரத்தூர் ராஜேந்திரனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்றிரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சொரத்தூர் ராஜேந்திரன் பாரம்பரிய மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். 1,000 ஏக்கருக்கு சொந்தக் காரரான ராஜேந்திரன், அவரது சொத்தைவிற்று அரசியல் பணி ஆற்றிவருகிறார். கட்டப்பஞ்சாயத்து செய்யாதவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டாலின்தான் பிரதமர்: கிருஷ்ணகிரி பிரச்சாரத்தில் துரைமுருகன் தகவல்

எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகுஸ்டாலின் பிரதமர் ஆகிவிடுவார் என கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர்கள் செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி) , மதியழகன் (பர்கூர்) ஆகியோரை ஆதரித்து, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்தில் ‘அம்மாவின்’ உண்மையான ஆட்சியை கொண்டு வருவோம்: மேலூரில் டிடிவி. தினகரன் பிரச்சாரம்

இந்தத் தேர்தலில் அம்மாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம் என டிடிவி. தினகரன் பேசினார். மதுரை மாவட்டத்தில் அமமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக டிடிவி. தினகரன் நேற்று 2-வது நாளாக வாக்குச் சேகரித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரஷர் தாங்காமல் குக்கர் வெடிக்கப் போகுது: அமமுகவினருக்கு சாபம் விட்ட காயத்ரி ரகுராம்

காரைக்குடியில் அமமுகவினரி்ன் வாகனப் பிரச்சார இரைச்சலால் கோபம் அடைந்த பாஜகவின் காயத்ரி ரகுராம், ‘பிரஷர் தாங்காமல் குக்கர் வெடிக்கப் போகுது’ என பேசினாா். காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்