மூதாட்டிக்கு இழப்பீடு வழங்கிய வீட்டு வசதி வாரியம்: 27 ஆண்டுகால வழக்குக்கு கோவை நீதிமன்றம் முற்றுப்புள்ளி
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மூதாட்டியின் நிலத்துக்கு வீட்டு வசதி வாரியம் உரிய இழப்பீடு அளித்துள்ளது. இதனால் 27 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த வழக்கை, கோவை சார்பு நீதிமன்றம் நேற்று முடித்து வைத்துள்ளது.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதியம்மாள் (90).இவருக்கு சொந்தமான நிலத்தை கடந்த 1983-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்தியது. இந்த நிலத்துக்கு உரியஇழப்பீடு கிடைக்காததால், 1994-ம்ஆண்டு நீதிமன்றத்தில் சரஸ்வதியம்மாள் வழக்கு தொடர்ந்தார். இறுதியாக, நிலத்துக்கு இழப்பீடாகவட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.67.87 லட்சத்தை 2021, மார்ச் 31-ம்தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment