கரோனா பணியில் ஆர்எஸ்எஸ்: நாடு முழுவதிலும் 43 நகரங்களில் சேவை நிலையங்கள்: 219 நகர மருத்துவமனைகளில் அரசிற்கு உதவி
கரோனாவை தடுக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்(ஆர்எஸ்எஸ்) இறங்கியுள்ளது. இதன் சார்பில் 43 முக்கிய நகரங்களில் சேவை நிலையங்கள் துவக்கப்பட்டு, 219 நகர மருத்துவமனைகளில் அரசிற்கு உதவி வருவதாக அந்த அமைப்பின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் தெரிவித்துளார்.
இதுகுறித்து நேற்று செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களிடம் காணொளியில் பேசினார். அப்போது அவர், நாட்டின் பல பகுதிகளில் கரோனாவினால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment