Skip to main content

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தினமும் 50 சதவீதம் வருவாய் இழப்பு

கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் 50 சதவீதத்துக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கோவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுப்படி தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஞாயிற்றுக்கிழமை களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. எனவே, கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக காந்திபுரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உக்கடம் பேருந்து நிலையங்களில் இருந்து குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தூரம், பயண நேரத்தை கணக்கிட்டு தேவையான அளவு பேருந்துகளை அரசுப் போக்கு வரத்துக் கழகம் இயக்கிவருகிறது. இருக்கைகளில் அமர்ந்து பயணிக்கமட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular posts from this blog

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்: நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 3 கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் புதிய சட்டத்தை முற்றிலும் தவறாக, அதில் உள்ள சாதக அம்சங்களுக்கு எதிர்ப்பதமாக நினைத்துக் கொண்டு போராடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. மதிப்பு உயரும். ரிஷபம்: உங்கள் பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேரளம்’ ஆகிறது கேரளா: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

கொச்சி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்