நாடு முழுவதும் 16 மாநிலங்களில் உள்ள 3.6 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி: பாரத்நெட் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள 3.6 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வசதி அளிக்கும் பாரத்நெட் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பங்கேற்போடு (பிபிபி) இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
நாட்டில் 1,000 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment