ஏழை எளியமக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக 198 டன் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத் திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக, லட்சக்கணக்கான புலம்பெயர் தொழி லாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊரடங்கால் வேலை இழந்த அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment