கேரளாவில் கணவரைப் பிரிந்து எலுமிச்சை ஜூஸ் விற்று வாழ்க்கையை ஓட்டிய பெண் ஒருவர், காவல் துறை உதவி ஆய்வாளராகி சாதனை படைத்துள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிரங்குளத்தைச் சேர்ந்தவர் சிவானந்த். இவரது மகள் ஆனி. காஞ்சிரங்குளம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒன்றரை ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதியினர் பிரிந்துவிட்டனர். அப்போது ஆனிக்கு 8 மாதத்தில் கைக்குழந்தை இருந்தது. 19 வயதிலேயே கைக்குழந்தையுடன் கணவனைப் பிரிந்த ஆனியை, காதல் திருமணம் செய்த கோபத்தில் பெற்றோரும் கைவிட்டனர். இதனால் தனது பாட்டியின் கூரை வீட்டில் குழந்தையுடன் வசித்தார் ஆனி.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment