ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பத்வேல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. இவரது மனைவி பொறியாளர் புவனேஸ்வரி(27). இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகள் உள்ளார். இவர்கள் திருப்பதி டிபிஆர் சாலையில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி முதல் புவனேஸ்வரியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், அவர்களது வீட்டார், ஸ்ரீகாந்திடம் போன் மூலம் கேட்டதற்கு, ”புவனேஸ்வரிக்கு டெல்டா பிளஸ் கரோனா தொற்று ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். இதில் அவர் மரணமடைந்தார். அவர்கள் எனக்கு கூட உடலை காண்பிக்காமல் எரித்து விட்டனர்” என்று நாடகமாடினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment