செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில், சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சிவசங்கர் பாபா அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கடந்த 16-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment