இயற்கை வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்: காஞ்சிபுரத்தில் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர்அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பலர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 போகம் நெல் பயிரிடும் விவசாயிகள் பலர் உள்ளனர். ஆனால், நேரடி நெல் கொள்முதல் மையங்கள் குறைந்த அளவே இயங்குகின்றன. ஒரிரு போகத்துக்கு மட்டும் சில இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் இயங்குகின்றன. நேரடி நெல் கொள்முதல் மையங்களை அதிகரிப்பதுடன் 3 போகத்துக்கும் தேவையான அளவு நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment