மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு: நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு
மகாராஷ்டிர மாநிலத்தில் 52 வயதுடைய ஒருவர் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். ஆனால், அவர் வேறு பல உடல்நலக் குறைகளால் இறந்ததாகமாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
இந்தியாவில் கட்டுப்பாட்டில் இருந்த கரோனா தொற்று பரவல், கடந்த சில நாட்களாக கணிசமாக அதிகரித்து வருகிறது. இதேபோல் உருமாறிய ஒமைக்ரான் தொற்றும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் நேற்றைய நிலவரப்படி 1,270 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் ஒமைக்ரான் பரவல் அதிகமாக காணப்படுகிறது. தற்போது பஞ்சாப், பிஹாரிலும் ஒமைக்ரான் அதிகமாக பரவி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment