சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உட்பட 14 நகரங்களில் கரோனா அதிகரிப்பு: தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்
நாடுமுழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சென்னை உட்பட 14 நகரங்களில் கரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது. இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி கரோனா 2-வது அலை வேகமாக பரவியது. கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்துவந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் 13,154 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, குருகிராம், கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட 14 நகரங்களில் கரோனா தொற்று திடீரென அதிகரித்துள்ளது. டெல்லிக்கு அருகில் உள்ள ஹரியாணாவின் குருகிராமில் டிசம்பர் 15 முதல் 21 வரையிலான காலகட்டத்தில் 194 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. டிசம்பர் 22 முதல் 28 வரையிலான ஒரு வாரத்தில் கரோனா தொற்று 738 ஆக அதிகரித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment