ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் ரேசாய் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைஷ்ணவ் மாதா கோயிலில் இன்று புத்தாண்டு தினத்தன்று சாமி தரிசம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் சென்றதால் கூட்டநெரிசல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்ன.
ஜம்மு ரேசாய் மாவட்டத்தில் உள்ள கத்ரா நகரில் திரிகுதா மலைப்பகுதியில் 5,200 அடி உயரத்தில் உள்ள வைஷ்வ் மாதா கோயில் புகழ்பெற்றது. குகையில் அமைந்துள்ள வைஷ்ணவ் மாதா கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment