விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பாகங்கள் அகற்றப்பட்டதால் நஞ்சப்பசத்திரத்தில் ராணுவ கட்டுப்பாடு நீக்கம்: சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்
குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து அனைத்து பாகங்களும் மீட்கப்பட்டு சூலூர் கொண்டுசெல்லப்பட்டதால், நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் கடந்த 8-ம் தேதி விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உட்பட 14 பேர் உயிர்இழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஏர்மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment