ஒமைக்ரான் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு டெல்டா திரிபை எதிர்க்கும் தடுப்பு ஆற்றல் உருவாகிறது: ஆய்வில் புதிய தகவல்
ஒமைக்ரான் தொற்றுக்கு உள்ளான வர்களின் உடலில், டெல்டா திரிபை எதிர்கொள்வதற்கான நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாவதாக தென் ஆப்பிரிக்க ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டும் ஒமைக்ரான் தொற் றுக்கு உள்ளானவர்களும் தடுப் பூசி போடமால் ஒமைக்ரான் தொற்றுக்கு உள்ளானவர்களும் அந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர் களின் உடலிலிருந்து ரத்த மாதிரிகளை எடுத்து விஞ்ஞானி கள் பரிசோதித்தனர். அப்போது அவர்களின் உடலில் ஒமைக் ரானையும், டெல்டா திரிபையும் எதிர்கொள்வதற்கான எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது தெரிய வந்தது. அதிலும் தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்களுக்கு அதிக எதிர்ப்பு ஆற்றல் உருவாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment