வடசென்னை அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளால் திருவொற்றியூர், பொன்னேரியில் நீர், நிலம், காற்று மாசுபட்டுள்ளது: தேசிய பசுமை தீர்ப்பாய வல்லுநர் குழுவிடம் பொதுமக்கள் குமுறல்
வடசென்னை அனல் மின் நிலையசாம்பல் கழிவுகளால் திருவொற்றியூர், பொன்னேரி வட்டப்பகுதிகளில் நீர், நிலம், காற்று மாசுபட்டுள்ளது என்று தேசிய பசுமை தீர்ப்பாய வல்லுநர் குழுவினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்அருகே அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தின் சாம்பல் கழிவுகளால் பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு உள்ளடக்கிய கழிமுகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment