இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும்: கேம்பிரிட்ஜ் பல்கலை. ஆய்வில் தகவல்
இந்தியாவில் அடுத்த சில தினங்களில் கரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நாட்டில் கடந்த மே, ஜூன் மாதங்களில் கரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டது. அந்த சமயத்தில், நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகினர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பின்னர், கரோனா தடுப்பூசி செலுத்துவது அதிகரித்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பெருந்தொற்று பாதிப்பு கணிசமாக குறைய தொடங்கியது. சமீபகாலமாக இந்தியாவில் தினசரி பாதிப்பின் அளவு 10 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகி வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment