ம.பி.யில் மக்கள் கொடுத்த புகார்களை கவனிக்காத அதிகாரிகள் ஊதியத்தை நிறுத்த உத்தரவு: தனது சம்பளத்தையும் பெற மாவட்ட ஆட்சியர் மறுப்பு
மத்தியபிரதேச மாநிலத்தில் மக்கள் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளின் ஊதியத்தை நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் தனது ஊதியத்தையும் தரவேண்டாம் என்று அவர் நிறுத்தி வைத்துள்ளது சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கரம்வீர் சர்மா. கடந்த திங்கள்கிழமை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, முதல்வரின் ஹெல்ப்லைனில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து துறை வாரியாக கரம்வீர் சர்மா ஆய்வு செய்தார். இதில் ஏராளமான புகார்களுக்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment