புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக 5 மாநிலங்களிலும் பேரணி, பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு சார்பில் 5 மாநிலங்களிலும் அண்மையில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 55 சதவீதம் பேர் சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும் என்று 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். 4 சதவீதம் பேர் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment