Skip to main content

போலி தரிசன டிக்கெட்டு வழங்கி ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர்

திருமலை: திருப்பதி ஏழுமலையானை ஆன்லைனில் முன்பதிவு செய்த பின்னரே சாதாரண பக்தர்கள் தரிசிக்கும் நடைமுறை உள்ளது. இதனை அறியாமல் பக்தர்கள் பலர் நேரடியாக திருப்பதிக்கு வந்து விடுகின்றனர். அவர்கள், ரயில், பஸ் நிலையம் மற்றும் தங்கும் விடுதிகளின் அருகே சுற்றித் திரியும் இடைத்தரகர்களை அணுகி, தரிசன டிக்கெட்டுக்காக பணத்தை கொடுத்து ஏமாறு கின்றனர்.

கடந்த 27-ம் தேதி புதுச்சேரியை சேர்ந்த சி.சுப்ரமணியம் மற்றும் அவரது நண்பர் 2 பேர் ரூ. 300ஆன்லைன் டிக்கெட்டுடன் வைகுண்ட காம்ப்ளக்ஸுக்குள் சென்றனர். அப்போது டிக்கெட்டை ஸ்கேன் செய்தபோது, அது போலி என்று தெரிய வந்தது. யாருடைய டிக்கெட்டையோ, ஊர், பெயர், ஆதார் எண்ணை மாற்றி இவர்களுக்கு கொடுத்தது தெரிய வந்தது. அதன் பின்னர் சுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தியதில், தரிசன டிக்கெட் இல்லாமல் வந்ததாகவும், பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மவுன குமார் மற்றும் அவரது நண்பர் சவுந்தர் ஆகிய இருவரும் தரிசன டிக்கெட்டு ஏற்பாடு செய்து கொடுத்து ரூ.8,000 பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்த இடைத்தரகர்களை தேடி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Comments

Popular posts from this blog

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை விவசாயிகள் புரிந்து கொள்ளாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்: நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் கருத்து

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் சந்த் செய்திநிறுவனத்துக்கு அளித்த பேட்டி யில் கூறியதாவது: புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் பலமடங்கு அதிகரிக்கும். விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 3 கருத்துகளைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் புதிய சட்டத்தை முற்றிலும் தவறாக, அதில் உள்ள சாதக அம்சங்களுக்கு எதிர்ப்பதமாக நினைத்துக் கொண்டு போராடுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: சாமர்த்தியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டு. மதிப்பு உயரும். ரிஷபம்: உங்கள் பேச்சை அனைவரும் ரசிப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘கேரளம்’ ஆகிறது கேரளா: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

கொச்சி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று இரண்டாவது முறையாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள சட்டப்பேரவையில் அலுவல் நடத்தை விதிகள் 118-ன் கீழ் இதற்கான தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். எனினும் சில தொழில்நுட்ப காரணங்களால் இந்த தீர்மானம் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்