உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆட் சியை தக்க வைக்க பாஜக.வும், மீண்டும் ஆட்சியை பிடிக்க சமாஜ்வாதியும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பாஜக, சமாஜ்வாதி மீது பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதல்வரும் பகுஜன் தலைவரு மான மாயாவதி கூறும்போது, ‘‘உ.பி. தேர்தலில் சாதி, மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யப்படுகிறது. இந்த செய்தி களே பத்திரிகைகளிலும், ஊட கங்களிலும் நிறைந்துள்ளன. இந்து - முஸ்லிம் மோதலை உருவாக்குவதுடன், சாதி பிரி வினையும் பாஜக, சமாஜ் வாதி பிரச்சாரங்களில் முன்னிறுத்தப் படுகிறது. இந்த விஷயத்தில் உ.பி.வாசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment