ட்ரம்ப்பின் கணக்கை முடக்கிய நிலையில் இந்து மதத்தை அவமதிப்போரின் கணக்கை முடக்காதது ஏன்? - ட்விட்டருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி
புதுடெல்லி: ‘ஏத்திஸ்ட்ரிபப்ளிக்’ என்ற ட்விட்டர் கணக்கில் இந்து மதக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாக பதிவுகள் போடப்பட்டுவந் துள்ளது. அந்தப் பதிவுகளை நீக்கவேண்டும் என்றும், அந்த ட்விட்டர்கணக்கை முடக்க வேண்டும் என்றும் ஆதித்யா சிங் தேஷ்வால் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் நவின் சாவ்லா அடங்கிய அமர்வு திங்கள்கிழமை அன்று இம்மனுவை விசாரித்தது. அப்போது, பிற மத மக்களின் உணர்வைப் புண்படுத்தும் கணக்குகளை நீக்குவதில் ட்விட்டர் அலட்சியம் காட்டுவதாக நீதிபதிகள் ட்விட்டர் நிறுவனத்தை விமர்சித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment