மதச்சார்பின்மை பற்றி பேசும் இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் வேற்று மதத்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்ட பரதநாட்டிய கலைஞர்
திருவனந்தபுரம்: கேரளாவில் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர்களில் முக்கியமானவர் மன்சியா (27). இஸ்லாமியரான இவருக்கு பரதநாட்டியத்தின் மீது சிறுவயதில் இருந்தேஈர்ப்பு அதிகம். பரதத்தில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றஇவர், இப்போது மலையாள தொன்மக் கலைகளை வளர்த்தெடுக்க உருவாக்கப்பட்ட கலாமண்டலம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மன்சியா பரதநாட்டியம் கற்றுக்கொண்டதும், ஆலயங்களில் பரத நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதும் இஸ்லாமிய மத கட்டமைப்புக்கு எதிரானது என அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், மன்சியா, தொடர்ந்து தனது பரதத்தை அரங்கேற்றி வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment