புதுடெல்லி: பொதுமக்களுக்கு தொழில்நுட்பம் செல்லும் போது அதன் பயன்பாட்டு வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவான "பாரத் ட்ரோன் மகோத்ஸவத்-2022" –ஐ பிரதமர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்து இதனைத் தெரிவித்தார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு: இந்தியாவின் மிகப் பெரிய ட்ரோன் திருவிழாவான பாரத் ட்ரோன் மகோத்ஸவத்-2022-ஐ பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைத்தார். கிசான் ட்ரோன் விமானிகளுடன் கலந்துரையாடிய அவர் வான்வெளி ட்ரோன் செயல் விளக்க காட்சிகளை பார்வையிட்டார். ட்ரோன் கண்காட்சி மையத்தில் புதிய தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், கிரிராஜ் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, அஸ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, பூபேந்திர யாதவ், மாநிலங்களின் பல அமைச்சர்கள், தலைவர்கள், ட்ரோன் தொழில்துறை உடைமையாளர்கள் கலந்துகொண்டனர். 150 ட்ரோன் விமானி சான்றிதழ்களையும் பிரதமர் வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment