ஜூலை 12 வரை அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை - அமைச்சர்களின் துறைகள் அதிரடியாக பறிப்பு
புதுடெல்லி: தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக வரும் ஜூலை 12 வரை அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனாவுக்கு 56, தேசியவாத காங்கிரஸுக்கு 53, காங்கிரஸுக்கு 44 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. பெரும்பான்மைக்கு 144 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் ஆளும் கூட்டணிக்கு 153 எம்எல்ஏக்கள் இருந்தனர். எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 106, அதன் கூட்டணி கட்சிகளுக்கு 7 என பாஜக கூட்டணியில் 113 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment