போபால்: சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 70 ரூபாய் செலுத்தி தேநீர் பருகி உள்ளார். அதற்கான ரசீதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி தேநீர் பிரியர்களுக்கு கொஞ்சம் கசப்பாக இருக்கலாம். அதற்கான காரணம் என்ன என இந்திய ரயில்வே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 28-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பயணி டெல்லி - போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில் பயணித்துள்ளார். காலை நேரம் எனபதால் கொஞ்சம் களைப்பாக இருந்த காரணத்தால் இளைப்பாறும் நோக்கில் அவர் தேநீர் ஆர்டர் செய்துள்ளார். அதற்கான விலையை பார்த்ததும் அவர் கொஞ்சம் அதிர்ந்து போயுள்ளார். அதில் தேநீரின் விலை ரூ.20 என்றும், சேவை கட்டணம் ரூ.50 எனவும், மொத்தமாக ரூ.70 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான கட்டணத்தை அவர் செலுத்தி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment