புதுடெல்லி: இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக நேற்று பதவியேற்ற திரவுபதி முர்முவுக்கு ஒரு பசு, எருமை மற்றும் 16 ஜோடி உடைகளை தந்தை வழங்கி உள்ளார்.
ஒடிசா உபர்பேடா விடுதியில் தங்கி பயிலும் பழங்குடிகள் பள்ளியில், 7-ம் வகுப்பு வரை பயின்றுள்ளார் திரவுபதி. அப்போது அந்த கிராமத்தில் இருந்து பள்ளியில் படிக்கும் ஒரே பெண்ணாக இவர் இருந்துள்ளார். நன்கு படித்த திரவுபதி அடுத்து புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் சேர்ந்து கல்வியை தொடர்ந்துள்ளார். சிறுவயது முதல் துணிச்சலுடன் பேசி எதையும் தைரியமாக அணுகும் வழக்கம் திரவுபதிக்கு உண்டு. அதே காலக்கட்டத்தில் புவனேஸ்வரின் மற்றொரு கல்லூரியில் படித்தவர் ஷியாம் சரண். இவருக்கு திரவுபதியை மிகவும் பிடித்துவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment