ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இந்திய விமானப்படை பயிற்சியின்போது மிக்-21 ஜெட் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்திய விமானப்படையின் மிக்-21 ஜெட் விமானம் ராஜஸ்தானில் உள்ள உதர்லாய் விமான தளத்தில் இருந்து பயிற்சிக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இரவு 9:10 மணியளவில் பார்மர் பகுதி அருகே விமானம் பறந்தபோது விபத்துக்குள்ளானது. இரு விமானிகளும் படுகாயமடைந்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் உயிரிழந்தனர். இருவரின் உயிரிழப்பு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment