Skip to main content

Posts

Showing posts from August, 2022

ஜொமோட்டோவின் 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' திட்டம் - இனி இந்தியாவின் மற்ற நகர உணவுகளையும் ஆர்டர் செய்யலாம்

சென்னை : ஜொமோட்டோ, புதிதாக 'இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்' (Intercity legends) என்கிற புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இந்த சேவையானது நகரங்களுக்கு இடையேயான உணவு விநியோக சேவையை வழங்கவுள்ளது. அதாவது, கொல்கத்தாவின் தனித்துவ அடையாளமான ரசகுல்லாவையும், ஹைதராபாத்தின் பேமஸ் உணவான பிரியாணியையும் நீங்கள் சென்னையில் இருந்தே ஆர்டர் செய்து பெற முடியும். இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள பிரபலமான உணவகங்களில் இருந்து ஸ்பெஷல் உணவுகளை மற்ற நகரங்களில் இருந்து ஆர்டர் செய்ய முடியும். ஆனால், இன்று ஆர்டர் செய்தால் அதிகபட்சமாக ஒரு நாளுக்குள் உணவு டெலிவரி செய்யப்படும். பெரும்பாலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை டெலிவரி செய்யப்படும் என்று ஜொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பணத்தின் மீதான மோகமே காரணம்” | சுகேஷின் குற்றங்களை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பழகினார் - அமலாக்கத்துறை

புதுடெல்லி : சுகேஷ் சந்திரசேகரின் குற்ற வரலாறுகளை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவருடன் பழகினார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர், கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கத் துறை விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் இணைந்திருந்தது அமலாக்கத்துறை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் | பதவியேற்ற 15 நாளில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கார்த்திகேய சிங்

பாட்னா : பிஹாரில் பதவியேற்ற 15 நாளில் பதவியை ராஜினாமா செய்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் கார்த்திகேய சிங். பிஹாரில் பாஜக.,வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் சேர்ந்து புதிய ஆட்சியை அமைத்தார். நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் கடந்த மாதம் 10-ம் தேதி பொறுப்பேற்றனர். இதன்பின் கடந்தமாதம் 16ம் தேதி பிஹார் அமைச்சரவை விரிவாக்கப்பட்டு 31 அமைச்சர்கள் பதவியேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கேரளாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்த எஜமானர்களின் கடைசி உடல் கிடைக்கும் வரை உடன் இருந்த நாய்

இடுக்கி : கேரளாவில் நிலச்சரிவில் புதைந்த எஜமானர்களின் கடைசி உடல் கிடைக்கும் வரை, அவர்கள் வளர்த்த நாய் உடன் இருந்துள்ளது. கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமாக பெய்ததில் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடயாதூர் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சோமன் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காணவில்லை. இவர்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என கருதி இங்கு தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15.3 சதவீதம் உயர்வு - 2021-ல் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு

புதுடெல்லி : கடந்த 2021-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 15.3% அதிகம். இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி நாளை கேரளா வருகை

புதுடெல்லி / பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 1, 2் தேதிகளில் கேரளா, கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜார்க்கண்ட் | வீட்டு சிறை; இரும்பு கம்பியால் தாக்குதல் - 8 வருடமாக பணிப்பெண்ணை சித்ரவதை செய்த பாஜக பிரமுகர் நீக்கம்

ராஞ்சி : வீட்டுப் பணிப்பெண் ஒருவரை எட்டு வருடமாக சித்ரவதை செய்த பாஜகவைச் சேர்ந்த நபர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் சீமா பத்ரா தான் தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த சுனிதா என்றா பழங்குடியின பெண்ணை கொடூரமாக சித்ரவதை செய்துள்ளது தெரியவந்துள்ளது. சூடான பாத்திரங்களை கொண்டும், இரும்பு கம்பிகளை கொண்டும் பணிப்பெண்ணை சீமா பத்ரா தாக்கியுள்ளார். இரும்பு கம்பி கொண்டு தாக்கி சுனிதாவின் பற்கள் உடைக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“ரிசார்ட் அரசியலில்” ஜார்க்கண்ட் | சத்தீஸ்கர் அழைத்துச் செல்லப்பட்ட ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள்

ராய்பூர் : ஜார்க்கண்டின் ஆளும் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுரங்க ஒதுக்கீட்டு வழக்கில் சிக்கியுள்ள ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சட்டசபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரிய அரசியல் நெருக்கடியின் காரணமாக, எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சியான பாஜக பக்கம் போகாமல் இருக்க, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் ராய்பூரில் உள்ள மேஃபேர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“பாகுபாடின்றி உரியவர்களைச் சென்றடைகிறது மோடி அரசின் நலத்திட்டங்கள்” - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மெயின்பூரி: “ பிரதமர் மோடி அரசின் நலத்திட்ட உதவிகள் வாங்கு வங்கியை கருத்தில் கொள்ளாமலும், எந்தவித பாகுபாடு இல்லாமலும் தேவையானவர்களைச் சென்றடைகிறது” என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்பூரியில் நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். பயனாளிகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளின் உறுப்பினர்களிடையே அமைச்சர் பேசியது: “ஏழைகளுக்கு உதவுகின்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வாக்கு வங்கியை மனதில் கொள்ளாமல், சாதி, மத, இன பேதமில்லாமலும், கடைக்கோடியில் இருப்போருக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை தீன்தயாள் உபாத்யாயாவின் அந்த்யோதயா தத்துவத்தை முழுமையாக செயல்படுத்துவதாகும் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் 2.52 லட்சம்

புதுடெல்லி : நாட்டில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 2.52 லட்சம் வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் (ஆக.27 நிலவரப்படி) மேலாக நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா சமீபத்தில் ஓய்வு பெற்றார். நீதிபதிகளின் பற்றாக்குறையால் வழக்குகள் தேக்கமடைந்துள்ளதை கருத்தில்கொண்டு, தனது 16 மாத பணிக்காலத்தில் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றங்களில் காலியாக இருந்த நீதிபதி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகளை நியமனம் செய்தார். இருப்பினும், தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் விகிதத்தில் அந்த நியமனம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்வதும், தன் பாலின உறவுகளால் குடும்ப அமைப்பு பல வடிவங்கள் பெற வாய்ப்பு - உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி : திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்வது மற்றும் தன் பாலின ஈர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் குடும்ப உறவின் வடிவங்கள் மாற்றம் பெற வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்திய ஒரு வழக்கில் குடும்ப உறவுகள் என்றால் என்ன? என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரிவான மற்றும் முக்கியமான கருத்துகளை தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமர்வு இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவு ஆகஸ்ட் 28-ல் தான் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாஜகவில் இணைந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் - தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு அதிர்ச்சி

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாஜகவில் இணைந்தனர். இது ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் வரும் 2024-ம் ஆண்டு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தொடர்ந்து 3-வது முறையும் வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை நடத்த ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இதற்காக தெலங்கானா முதல்வரும், டிஆர்எஸ் தலைவருமான கே. சந்திரசேகர ராவ் மும்முரமாக பணியாற்றி வருகிறார். ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக டிஆர்எஸ் கட்சியின் ஆட்சி மீது உள்ள குறைபாடுகளை பாஜக எடுத்துக்கூறி, கடந்த 2 முறை நடந்த இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திரா: ஆலையில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழப்பு

காக்கிநாடா : ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், வாகலபூடி பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். ஆலையில் நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பற்றிக்கொண்டது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.பின்னர் தகவல் அறிந்து போலீஸாரும் தீயணைப்பு வீரர்களும் வந்து தீயை அணைத்தனர். இதே தொழிற் சாலையில் கடந்த 19-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டதில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரே மாதத்தில் 2-ம் முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“2024ல் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எனது கடைசிப் போராட்டமாக இருக்கும்” - மம்தா பானர்ஜி

கொல்கத்தா : 2024ல் மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜகவை வெளியேற்றுவதுதான் எனது கடைசி போராட்டமாக இருக்கும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பேரணி ஒன்றில் கலந்துகொண்ட மம்தா, "2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். மத்தியில் காவி கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான போராட்டமே எனது கடைசிப் போராட்டம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். எப்படியும் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். மேற்கு வங்கத்தை காப்பாற்றுவதே எங்களின் முதல் போராட்டம். எங்களை மிரட்ட முயற்சித்தால் நாங்கள் பதிலடி கொடுப்போம். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

“எங்கள் எம்.எல்.ஏ.க்கள் நேர்மையானவர்கள்” - நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்த அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி : "பாஜகவின் ஆப்ரேஷன் லோட்டஸ் திட்டம் டெல்லியில் தோல்வியுறும்" என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின் புதிய மது விற்பனைக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, பாஜக - ஆம் ஆத்மி கட்சி இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பாஜக பேரம் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சோதனை ஓட்டத்தில் 180 கி.மீ வேகத்தை தாண்டியது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்

புதுடெல்லி: வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், சோதனை ஓட்டத்தில் 180 கி.மீ வேகத்தை தாண்டியது. சிறு குலுங்கல் கூட இல்லாமல் ரயில் சென்றதால், தண்ணீர் நிரப்பப் பட்டிருந்த கிளாஸில் இருந்து ஒரு சொட்டு கூட கீழே சிந்தவில்லை. அந்த அளவுக்கு இதன் பயணம் சொகுசாக உள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேகரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-ல் அறிமுகம் செய்தது. இந்தரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிறு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: உலகம் முழுவதும் சிறுதானியங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. எனவே சிறு தானிய உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும்என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 92-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

விதிகளை மீறி கட்டப்பட்ட 32 மாடி நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் 9 விநாடிகளில் தரைமட்டமானது

புதுடெல்லி: விதிகளை மீறி 32 மாடிகளுடன் கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் நேற்று 9 விநாடிகளில் தரைமட்டமானது. உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தர்மாவட்டத்தில் நொய்டா அமைந்துள்ளது. டெல்லிக்கு அருகே அமைந்துள்ள இப்பகுதி அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.நொய்டாவின் ஏடிஎஸ் கிராமத்தில் எமரால்டு கோர்ட்என்ற திட்டத்தின் கீழ் அபெக்ஸ் (32 மாடி), சேயன் (29 மாடி) என 2 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டன. இவற்றில் 857 வீடுகள் இருந்தன. இதில் 600 வீடுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இந்த இருகுடியிருப்புகளும் இரட்டை கோபுர கட்டிடம் என்று அழைக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

"2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதியளிக்கிறேன்" - பிரதமர் மோடி

புஜ்: வரும் 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறி இருக்கும் என உறுதி அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதனை தனது சொந்த மாநிலமான கட்ச் மாவட்டத்திற்கு வருகை தந்த போது அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பிரதமர் மோடி அங்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2001 வாக்கில் அந்த மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் உயிரிழந்த மக்களின் நினைவாக அஞ்சர் பகுதியில் இரண்டு நினைவகங்களை அர்பணித்துள்ளார் அவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

​ஜே.பி. நட்டாவை சந்தித்தார் மிதாலி ராஜ் - நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு வலைவீசும் பாஜக

ஹைதராபாத் : ஹைதராபாத் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் நேற்று சந்தித்து பேசினார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வாரங்கல் பொதுக்கூட்டத் தில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் தனது துணைவியாருடன் ஹைதராபாத் விமான நிலையம் வந்தார். அவரை மத்திய இணை அமைச்சர் கிஷண் ரெட்டி, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் உள்ளிட்டோர் வரவேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிஹார் அரசு பொறியாளர் வீட்டில் ரூ.5.25 கோடி பறிமுதல்

பாட்னா : பிஹார் மாநில அரசு பொறியாளரின் வீடுகளில் இருந்து ரூ.5.25 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிஹார் தலைநகர் பாட்னாவில் பெசன்ட் பிஹார் காலனியை சேர்ந்தவர் சஞ்சய் குமார் ராய். அந்த மாநில அரசின் ஊரக மேம்பாட்டுத் துறையில் செயல் பொறியாளராக அவர் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் பிஹாரின் கிஷான்கன்ஞ் மாவட்டத்தில் பணியில் உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு சாதகம்

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளதால் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான சூழல் உருவாகி உள்ளது. சுமார் 50 ஆண்டுகளாக கட்சியின் மூத்த தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகியுள்ளார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கு பிறகு கட்சியில் இருந்து வெளியேறும் மூத்த தலைவர் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக அரசு மீது ஊழல் புகார் தெரிவித்து பிரதமர் மோடிக்கு 13 ஆயிரம் பள்ளிகள் கடிதம்

பெங்களூரு : கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக ஒப்பந்ததாரர் சங்கத்தின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், ''கர்நாடகாவில் அரசின் திட்ட பணிகளை மேற்கொள்வதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சர்கள் 40 சதவீத கமிஷன் கேட்கிறார்கள். இதுபற்றி முதல்வர் அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை'' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த அமைப்பின் தலைவர் கெம்பண்ணா அண்மையில், தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனி ரத்னா தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து மோடிக்கு கடிதம் எழுதுவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். இதனை மறுத்த அமைச்சர் முனி ரத்னா ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு கெம்பண்ணா மீது அவதூறு வழக்கு தொடுத்தார். இந்நிலையில் கர்நாடகாவை சார்ந்த 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் ஒன்றிணைந்து 2 சங்கங்களின் சார்பில் பிரதமர் நரேந்திர‌ மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், ''கர்நாடகாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படுவ...

வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக நியமிக்கப்பட்ட 6-வது நபர் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு

புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் முன்னிலையில், உச்ச நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 2021 ஏப்ரல் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பொறுப் பேற்றார். அவர் நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல்வர் ஹேமந்த் சோரன் தகுதிநீக்கப் பிரச்சினை - ஜேஎம்எம், காங். எம்எல்ஏக்களை பாதுகாக்க தீவிர முயற்சி

ராஞ்சி : முதல்வர் ஹேமந்த் சோரன் தகுதி நீக்கப் பிரச்சினையால் ஜார்க்கண்டில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏ-க்களைப் பாதுகாக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 2019-ம் ஆண்டில் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பில்கிஸ் பானு வழக்கு | “உச்ச நீதிமன்றத்தை நாங்கள் நம்புகிறோம்” - 134 முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்

புதுடெல்லி : பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து 134 முன்னாள் அரசு அதிகாரிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், டெல்லி முன்னாள் லெப்டினன்ட் கவர்னர் நஜீப் ஜங், முன்னாள் அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகர், முன்னாள் வெளியுறவுச் செயலர்கள் சிவசங்கர் மேனன், சுஜாதா சிங், முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை உள்ளிட்ட 134 முன்னாள் அரசு அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண் ஓட்டுநர்களுக்கு ரயில் இன்ஜினில் கழிப்பறை வசதி ஏற்படுத்த பரிசீலனை

புதுடெல்லி : மத்திய ரயில்வே அமைச்சகத்தில் ஆண் இன்ஜின் டிரைவர்களைப் போலவே, ஏராளமான பெண் இன்ஜின் டிரைவர்களும் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் பணி நேரத்தின்போது போதுமான கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “பெண் இன்ஜின் டிரைவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறது. ரயில் இன்ஜின்களில் கழிப்பறை வசதியை ஏற்படுத்த முடியுமா என்பது தொடர்பாகவும் ஆய்வு நடைபெற்று வருகிறது. ஆய்வின் முடிவில் கழிப்பறைகளை அமைக்க சாத்தியம் இருப்பது தெரிந்தால் அவற்றை அமைப்போம். ரயில்வேயில் 1,000-த்துக்கும் மேற்பட்ட பெண் இன்ஜின் டிரைவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலகின் பிரபலமான தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

புதுடெல்லி : உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியல் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 75 சதவீத ஒட்டுக்களுடன் பிரதமர் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் சர்வே என்ற அமைப்பு மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 75 சதவீத ஓட்டுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமெரிக்க இணை நிதியமைச்சருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

புதுடெல்லி : உலக பொருளாதார நிலவரம் குறித்து அமெரிக்க நிதித் துறை இணையமைச்சர் வாலி அடிமியோவுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இலவசங்களையும், நலத்திட்டங்களையும் குழப்பி கொள்ளக்கூடாது - 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தரவு

புதுடெல்லி : இலவசங்களையும், நலத்திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக்கூடாது என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இதுதொடர்பாக விரிவான விசாரணை தேவை என்பதால் தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நேரலையில் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளால் அந்த தேசம் மற்றும் மாநிலத்தின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிடுவதாகவும், எனவே வாக்காளர்களைக் கவருவதற்காக அறிவிக்கப்படும் இதுபோன்ற தேர்தல் நேர இலவச வாக்குறுதிகளுக்கு தடை விதிக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகல் | ராகுல் மீது குற்றச்சாட்டு; சோனியாவுக்கு பாராட்டு

புதுடெல்லி : காங்கிரஸின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் (73), அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் ராகுல் காந்தி குழந்தைத்தனமாக, முதிர்ச்சியின்றி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அதன்பிறகு கட்சித் தலைமை பொறுப்பை சோனியா காந்தி ஏற்றார். எனினும், ராகுல் காந்தியே நிழல் தலைவராக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘விரைவில் புதிய கட்சி’’ - குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீரில் வரவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு புதிய கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் அடையாள முகமாக இருந்த குலாம் நபி ஆசாத் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பதவிகளையும் நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணத்தை விலகி காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 5 பக்க கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்