“பாகுபாடின்றி உரியவர்களைச் சென்றடைகிறது மோடி அரசின் நலத்திட்டங்கள்” - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
மெயின்பூரி: “பிரதமர் மோடி அரசின் நலத்திட்ட உதவிகள் வாங்கு வங்கியை கருத்தில் கொள்ளாமலும், எந்தவித பாகுபாடு இல்லாமலும் தேவையானவர்களைச் சென்றடைகிறது” என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்பூரியில் நடந்த நலத்திட்டம் வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். பயனாளிகள் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகளின் உறுப்பினர்களிடையே அமைச்சர் பேசியது: “ஏழைகளுக்கு உதவுகின்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வாக்கு வங்கியை மனதில் கொள்ளாமல், சாதி, மத, இன பேதமில்லாமலும், கடைக்கோடியில் இருப்போருக்கும் உதவி தேவைப்படுவோருக்கும் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை தீன்தயாள் உபாத்யாயாவின் அந்த்யோதயா தத்துவத்தை முழுமையாக செயல்படுத்துவதாகும்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment