Skip to main content

Posts

Showing posts from September, 2022

'ஒற்றுமை யாத்திரையின் குரலை யாரும் மவுனிக்க முடியாது' - ராகுல் காந்தி பேச்சு

கர்நாடகா: ஒற்றுமை யாத்திரையின் குரலை யாரும் மவுனிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமைக்கான பாத யாத்திரையை நேற்று தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அவர் நேற்று நுழைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அனைத்துத் தரப்பு மக்களையும் திரைப்படங்கள் இணைக்கின்றன - தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் குடியரசுத் தலைவர் பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் நேற்று 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், நடிகர்கள் சூர்யா, அஜய் தேவ்கன் ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். கடந்த 2020-ம் ஆண்டுக்கான, 68-வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடிகர்களாக இந்தி நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். மேலும், சிறந்த படம், சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த நடிகை (அபர்ணா பாலமுரளி), சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த திரைக்கதை (ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கரா) ஆகிய பிரிவுகளில் 'சூரரைப் போற்று' படம் விருதுகளை வென்றது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடகாவில் ராகுல் காந்தி பாத யாத்திரை

பெங்களூரு : காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கர்நாடகாவில் ஒற்றுமைக்கான பாத யாத்திரையை நேற்று தொடங்கினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி ஒற்றுமை பாத யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் அவர் நேற்று நுழைந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் முதல் அரசு வேலை - பிஹாரின் ஒரு கிராமமே கொண்டாடும் இளைஞன்

பிஹார் : பிஹார் மாநில கிராமம் ஒன்றில் ஒருவருக்கு அரசு வேலை கிடைத்ததை அந்த கிராமமே ஒன்றாக கொண்டாடிவரும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்துபிறகு அந்த கிராமத்தில் இருந்து அரசு வேலைக்கு தேர்வாகியுள்ள முதல் நபர் அவர் என்பதாலேயே கிராமமே சேர்ந்து கொண்டாடுவதன் பின்னணி. பிஹாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சோஹாக்பூர் கிராமத்தில் வசித்து வரும் இளைஞர் ராகேஷ் தான் 75 ஆண்டுகளில் முதல் நபராக அரசு வேலைக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். 25 வயதாகும் ராகேஷ், தனது 19 வயதிலேயே தந்தையை இழந்துள்ளார். என்றாலும், அதன்பின் தனது பள்ளிக்கல்வியை கொண்டு, குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து அந்த வருமானத்தை கொண்டு தனது கல்வியை தொடர்ந்திருக்கிறார். அப்போது அரசு வேலையில் சேர வேண்டும் என லட்சியம் வகுத்துக்கொண்டு அதற்காக உழைக்கத் தொடங்கியுள்ளார் ராகேஷ். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

"காந்தி குடும்பம் ஒரு காலாவதியாகிப் போன மருந்து" - அசாம் முதல்வர் விமர்சனம்

புதுடெல்லி: "காந்தி குடும்பம் ஒரு காலாவதியாகிப்போன மருந்து. அவர்களால் எதிர்க்கட்சிக்கான வேலையை செய்ய முடியாது" என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார். அண்மையில் அவர் அளித்தப் பேட்டியில், "காங்கிரஸ் இன்னும் தாங்களே ஆட்சியில் இருப்பதாக உணர்கிறது. பாரதிய ஜனதா கட்சி அவர்களிடமிருந்து எப்போதோ ஆட்சியை பறித்து விட்டது. இந்தியாவில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இயல்பான ஜனநாயக அமைப்புகள் இருக்கின்றன. மேலும் அவை கட்சிக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் காந்தி குடும்பத்தை ஒரு எதிர்க்கட்சியாக பார்க்கக் கூடாது. அவர்கள் காலாவதியாகிப் போன மருந்துகள். அவர்களால் ஒரு எதிர்க்கட்சியாக செயல்படவே முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்களை எதிர்க்கட்சியாக உணர்வதே இல்லை. பெயரளவிற்கே எதிர்க்கட்சியாக இருக்கும் அவர்கள் தாங்களே ஆளும் கட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கட்சி மேலிட விருப்பம்: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இணைகிறார் மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கடைசி நிமிட வரவாக மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் மூத்த தலைவரும் காங்கிரஸ் தேர்தல் குழு தலைவருமான கே.சி.வேணுகோபால் நேற்றிரவு கார்கேவிடம் அவரே கட்சியின் விருப்பமான தெரிவாக இருப்பதாக எடுத்துரைத்து மனுத்தாக்கல் செய்யச் சொன்னதாகத் தெரிகிறது. மும்முனைப் போட்டியா? காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் தேர்தலில் போட்டியிடுகிறார். கடைசி நாளான இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அறிவுஜீவி தேவை இல்லை; ஆக்ஷன் நாயகரே தேவை - சொந்த மாநிலத்திலேயே சசி தரூருக்கு கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம் : அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட காங்கிரஸ் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் வேட்பு மனு பெற்றுள்ளார். ஆனால்சொந்த மாநில காங்கிரஸ் கட்சியினரே சசி தரூருக்கு எதிராக நிற்கின்றனர். ஐ.நா.வில் இருந்து அரசியல் from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிம் கார்டு வாங்க போலி ஆவணங்களை வழங்கினால் ஓராண்டு சிறை

புதுடெல்லி : சிம் கார்டு மற்றும் ஓடிடி சேவைகளுக்கு போலி ஆவணங்களை தயாரித்து வழங்கினால் ஓராண்டு சிறை அல்லது ரூ.50,000 அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக விதிக்க இந்திய தொலைத்தொடர்பு வரைவு மசோதா 2022-ன் விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களிடையே ஆன்லைன் மூலமாக மோசடியில் ஈடுபடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று, சட்டவிரோதமான காரியங்களும் தொலைத்தொடர்பு சேவையை அடிப்படையாக கொண்டே அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, இதுபோன்ற பல்வேறு மோசடி நிகழ்வுகளிலிருந்து தொலைத்தொடர்பு பயனாளர்களை பாதுகாக்க தொலைத்தொடர்பு வரைவு மசோதாவில் புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், சிறை தண்டனை விதிப்பதற்கும், அபராதம் வசூலிப்பதற்கும், தொலைத்தொடர்பு இணைப்பை துண்டிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருமணம் ஆகாத பெண்களுக்கும் பாதுகாப்பான கருக்கலைப்பு செய்துகொள்ள உரிமை உள்ளது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம்

புதுடெல்லி : டெல்லி உயர் நீதிமன்றத்தில், 25 வயதான, திருமணமாகாத பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஒருமித்த உறவின் விளைவாக தான் கர்ப்பம் அடைந்ததாகவும், 23 வாரங்கள் மற்றும் 5 நாட்களான கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்குமாறும் கோரினார். ஆனால், அவருக்கு அனுமதி வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கில் டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது: அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான கருக்கலைப்புக்கு உரிமை உள்ளது. இந்த விஷயத்தில் திருமணமான பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண்களுக்கு இடையே வேறுபாடு காட்டுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஈரோடு பேராசிரியர் மணியின் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ - பொருளாதார மாணவர்களுக்கு புதிய பாடநூல் வெளியீடு

புதுடெல்லி : ஈரோடு கல்லூரிப் பேராசிரியர் என்.மணியின் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ நூல் டெல்லியில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதை இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில் (ஐசிஎஸ்எஸ்ஆர்) உறுப்பினர் செயலாளர் வி.கே.மல்ஹோத்ரா வெளியிட்டார். புதிய கல்வித் திட்டத்தின்படி, பொருளாதாரம் படிக்கும் இளநிலைமற்றும் முதுநிலை மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ‘இன்டர்நேஷனல் எக்னாமிக்ஸ்’ எனும் புதிய பாடநூலை ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் என்.மணி எழுதியுள்ளார். சர்வதேச பொருளாதாரம் தொடர்பாக ஆங்கிலத்தில் என்.மணி எழுதியுள்ள மூன்றாவது நூல் இதுவாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

முதல்வர் கெலாட் ஆதரவு அமைச்சர்களுக்கு நோட்டீஸ்

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முடிவெடுத்துள்ளார். அசோக் கெலாட் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டால், ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இது தொடர்பாக கருத்து கேட்க, ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியது. ஆனால், அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 82 பேர், சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்தனர். மேலும், காங்கிரஸ் கட்சி கூட்டிய எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், அமைச்சர்கள் சாந்தி தரிவல், மகேஷ் ஜோஷி, தர்மேந்திர ரத்தோர் ஆகியோர் தனியாக கூட்டிய கூட்டத்தில் பங்கேற்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர்.வெங்கடரமணி நியமனம்

டெல்லி : மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக (அட்டர்னி ஜெனரல்) மூத்த வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார். கே.கே.வேணுகோபாலுக்குப் பிறகு வெங்கடரமணி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக தொடர்வார் என்று மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அலுவலகமும் உறுதி செய்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை - உடனடி அமல் என மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஐந்தாண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அப்போது 45 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வங்கிகளில் பிஎஃப்ஐ அமைப்பு ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும், வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிக அளவிலான தொகையை கொண்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதி-திருமலை இடையே 50 பேட்டரி பேருந்து சேவை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்

திருப்பதி : திருப்பதி - திருமலை இடையே போக்குவரத்து வசதி காலத்துக்கேற்ப பல மாற்றங்களை கண்டுள்ளநிலையில் நேற்று முதல் பேட்டரி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். சுயம்புவாக திருமலையில் குடிகொண்டுள்ள திருமாலை முடியாட்சி காலம் முதல் பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசித்து வருகின்றனர். முதன்முதலில் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடைபாதை மட்டுமே இருந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ம.பி.யில் கர்பா நடன நிகழ்ச்சிக்கு வருவோரின் அடையாள அட்டையை பரிசோதிக்க உத்தரவு

போபால் : இந்து பெண்களை, சிறுபான்மையின இளைஞர்கள் காதலித்து, அவர்களை திருமணத்தின்போது மதம் மாற்றுவதாக வலதுசாரி தலைவர்கள் கூறுகின்றனர். இது ‘லவ் ஜிகாத்’ என அழைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு இந்து பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் மத்தியப் பிரதேச கலாச்சாரத்துறை அமைச்சர் உஷா தாக்குர் கடந்த 8-ம் தேதி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசியபோது, ‘லவ் ஜிகாத்தை’ தடுக்க நவராத்திரி விழாக்களில் கர்பா நடன நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில், அடையாள அட்டைகளை பரிசோதித்தபின் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் யாரையும் அனுமதிக்க கூடாது’’ என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் 2-வது முறையாக 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்களில் என்ஐஏ சோதனை - டெல்லியில் 144 தடை உத்தரவு

புதுடெல்லி : நாடு முழுவதும் 2-வது முறையாக 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 250-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணைநடத்தப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்பேரில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 22-ம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அப்போது 45 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வங்கிகளில் பிஎஃப்ஐ அமைப்பு ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும், வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிக அளவிலான தொகையை கொண்டு வந்திருப்பதும் விசாரணை...

ஹவாலா பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு அபுதாபி ஓட்டலை பயன்படுத்திய பிஎஃப்ஐ - அமலாக்கத் துறை தகவல்

புதுடெல்லி : ஹவாலா நடவடிக்கைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரிலுள்ள ஒரு ஓட்டலை பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) பயன்படுத்தியது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎஃப்ஐ, சட்டவிரோத காரியங்களில் ஈடுபட திட்டமிட்டதாக கூறி நாடு முழுவதும் உள்ள அதன் கிளை அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரூ.200 கோடி மோசடி வழக்கு - நடிகை ஜாக்குலினுக்கு இடைக்கால ஜாமீன்

புதுடெல்லி : ரூ.200 கோடி மோசடி வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். முக்கிய பிரமுகர்களை தெரியும் என்று கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் சுகேஷ் சந்திரசேகர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உள்நாட்டு தேவைக்கும், ஏற்றுமதிக்கும் தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிப்பு - பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி : ‘‘உள்நாட்டு பாதுகாப்பு தேவையை நிறைவு செய்யவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், தேஜாஸ் போர் விமானங்களின் உற்பத்தி அதிகரிக்கப்படும்’’ என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய பாதுகாப்புப் படைக்கு தேவையான, விமானங்கள், கப்பல்கள், ஆயுதங்களை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதன்படி, அதிநவீன தேஜாஸ் விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வளர்ந்த நாடுகளிடம் உள்ள போர் விமானங்களுக்கு நிகராக தேஜாஸ் போர் விமானங்கள் இருப்பதும் பல நாடுகளை கவர்ந்துள்ளது. அதற்காக மலேசியா உட்பட பல நாடுகள் தேஜாஸ் விமானங்களை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அத்துடன் சில நாடுகள் ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எனக்கு கிடைக்கும் ஆதரவு மனு தாக்கலின்போது தெரியும் - காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தகவல்

பாலக்காடு : காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. இதில் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் போட்டியிடுகிறார். அதற்கான வேட்பு மனுவையும் பெற்றுள்ளார். இந்நிலையில் பாரத ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியை கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சசிதரூர் நேற்று சந்தித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடும்பப் பெயருக்கும், ஆசாத் என்ற பெயருக்கும் சம்பந்தமும் இல்லை - புதிய கட்சி குறித்து குலாம் நபி ஆசாத்

ஜம்மு : காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய குலாம் நபி ஆசாத், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கட்சியை விட்டு விலகினார். இந்நிலையில் ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை அவர் நேற்று தொடங்கினார். இது தொடர்பாக அவர் ஜம்முவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாலை சீரமைப்பு, கல்வீச்சு சம்பவத்தால் காஷ்மீரில் லாரிகளில் அழுகும் ஆப்பிள்கள்

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் ஆப்பிளை ஏற்றிச் சென்ற லாரிகள் கடந்த ஒரு வாரமாக காத்திருக்கின்றன. இதனால், லாரிகளில் உள்ள ஆப்பிள்கள் அழுகி வருவதாக லாரி ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், சமூக விரோத கும்பல்கள் ஆங்காங்கே மீண்டும் கல்வீச்சிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் சரக்கு லாரிகள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஏராளமான ஆப்பிள்களை ஏற்றிக் கொண்டு கிளம்பிய சரக்கு லாரிகள் ஸ்தம்பித்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சச்சின் பைலட்டை முதல்வராக்க எதிர்ப்பு - ராஜஸ்தானில் 82 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் சச்சின் பைலட்டை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 82 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று கெலாட் மன்னிப்பு கோரியுள்ளார். எனினும், குழப்பத்துக்கு காரணமான அவரை கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று கட்சியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சசி தரூர் எம்.பி. உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சித் தலைவராக தேர்வானாலும், முதல்வர் பதவியிலும் தொடர கெலாட் விரும்பினார். இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கட்சித் தலைவராக கெலாட் தேர்வானால், அவருக்கு பதில் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

12 மணி நேர போராட்டத்தில் ‘கொரில்லா தாக்குதல்’ நடத்தியது பிஎஃப்ஐ: கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம்: ‘‘கேரளாவில் 12 மணி நேர ‘பந்த்’ நடத்திய போது, முகமூடி அணிந்த பிஎஃப்ஐ நிர்வாகிகள் கொரில்லா தாக்குதல் நடத்தினர்’’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது, தீவிரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்து அனுப்புவது போன்ற குற்றச்சாட்டின் கீழ் நாடு முழுவதும் 15 மாநிலங்களில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பினர் அலுவலகங்கள், அதன் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோதனை நடத்தியது. இதை கண்டித்து தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பிஎஃஐ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு கடும் எதிர்ப்பு: கெலாட் ஆதரவாளருக்கு முதல்வர் பதவி கேட்டு 90 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் போர்க்கொடி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவி வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17-ம்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கட்சி எம்.பி. சசி தரூர் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சோனியாவுடன் நிதிஷ், லாலு சந்திப்பு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தார். அணி மாறிய பிறகு, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நிதிஷ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவுகண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்: 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடில்லி: சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் லட்சியங்களைப் பின்பற்றி, அவர்கள் கனவுகண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார். ஒவ்வொரு மாதமும் அகில இந்திய வானொலியில் `மனதின் குரல்' என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டுமக்களிடம் உரையாடுகிறார் பிரதமர்நரேந்திர மோடி. இதன்படி, நேற்றைய `மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத்சிங் பெயர்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தகவல்

புதுடெல்லி: சண்டிகர் விமான நிலையத்திற்கு இனி உயிர்த்தியாகி பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும். இது மிக நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்று. சண்டிகர், பஞ்சாப், ஹரியாணா, இன்னும் தேசத்தின் அனைத்து மக்களுக்கும் இந்த தீர்மானத்தின் பொருட்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றது முதல் மாதந்தோறும் வானொலியில் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிறான இன்று (செப்.25) பிரதமர் மோடி உரையாற்றினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்