புதுடெல்லி: "காந்தி குடும்பம் ஒரு காலாவதியாகிப்போன மருந்து. அவர்களால் எதிர்க்கட்சிக்கான வேலையை செய்ய முடியாது" என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.
அண்மையில் அவர் அளித்தப் பேட்டியில், "காங்கிரஸ் இன்னும் தாங்களே ஆட்சியில் இருப்பதாக உணர்கிறது. பாரதிய ஜனதா கட்சி அவர்களிடமிருந்து எப்போதோ ஆட்சியை பறித்து விட்டது. இந்தியாவில் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இயல்பான ஜனநாயக அமைப்புகள் இருக்கின்றன. மேலும் அவை கட்சிக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் காந்தி குடும்பத்தை ஒரு எதிர்க்கட்சியாக பார்க்கக் கூடாது. அவர்கள் காலாவதியாகிப் போன மருந்துகள். அவர்களால் ஒரு எதிர்க்கட்சியாக செயல்படவே முடியாது. ஏனென்றால் அவர்கள் தங்களை எதிர்க்கட்சியாக உணர்வதே இல்லை. பெயரளவிற்கே எதிர்க்கட்சியாக இருக்கும் அவர்கள் தாங்களே ஆளும் கட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment