கேரளா | பதவியில் நீடிப்பதற்கான உரிமையை வரும் நவ. 3-க்குள் நிரூபிக்க துணைவேந்தர்களுக்கு கெடு - ஆளுநர் அதிரடி
திருவனந்தபுரம்: கேரள பல்கலைக்கழகத்தின் 9 துணைவேந்தர்களும் தாங்கள் பதவியில் தொடருவதற்கு உள்ள உரிமையை வரும் நவம்பர் 3ம் தேதிக்குள் நிரூபிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளார்.
திங்கள்கிழமை முற்பகல் 11.30 மணிக்குள் 9 பல்கலை.யின் துணைவேந்தர்கள் பதவி விலக வேண்டும் என்று கேரளா ஆளுநர் ஆரிஃப் முகம்மது கானின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினை கேரள உயர் நீதின்றத்தின் சிறப்பு அமர்வு மாலை 4 மணிக்கு விசாரணை செய்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment