புதுடெல்லி: விண்வெளி துறையிலும், சூரிய மின்சக்தி உற்பத்தியிலும் இந்தியா அதிசயங்களை நிகழ்த்தி வருவதாக பிரதமர் மோடி தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது 94 வது மன்கி பாத் உரையில் மோடி பேசியதாவது: விண்வெளி துறையிலும், சூரிய மின்சக்தி உற்பத்தியிலும் நமது நாடு அதிசயங்களை நிகழ்த்தி வருகிறது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு, ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களை இந்தியா விண்வெளிக்கு அனுப்பியது. இதன் மூலம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கட்ச் முதல் கோஹிமா வரையிலும், நாடு முழுவதும் டிஜிட்டல் இணைப்பு மேலும் வலுப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment