புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த 24 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்கும் நிலையில் அந்த விழாவுக்கான ஏற்பாடுகள் செவ்வாய்கிழமை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்தன. புதன்கிழமை நடக்கும் விழாவில், காங்கிரஸ் கட்சி தலைமை தேர்தல் பொறுப்பாளர் மதுசூதனன் மிஸ்த்ரி மல்லிகார்ஜூன கார்கேவிடம் தேர்தல் வெற்றி சான்றிதழை முறையாக ஒப்படைத்தார். இதில் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Comments
Post a Comment